Sunday 4 October 2009

கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்


கமல்ஹாசன்,

உன்னைப் போல் ஒருவன் சினிமா பார்த்தேன்.

நிறைய பேர் படம் அப்படி இருந்தது இப்படி இருந்தது என எழுதி விமர்சனங்கள்ஓய்ந்த சந்தர்ப்பத்தில் நானும் அது மாதிரியே எழுதிக் கொண்டிருக்க நான்நிச்சயமாக உன்னைப் போல் ஒருவன் இல்லை

ஒரு படத்திலே லீகல் சிஸ்ட்த்துக்கு டிமிக்கி தந்துவிட்டு ஆஸ்திரேலியாபோய்விட்டு அங்கிருந்து போனில் போலிஸ் ஆபிசருடன் பேசுகிறார்

இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், லீகல் சிஸ்ட்த்திலே இருக்கும் ஒருபோலிஸ் ஆபீசர் சினிமாவின் கடைசி காட்சியிலே ,”’ “உங்க கையிலே இருக்கும்பாரம் ஜாஸ்தியா இருக்கும் போல இருக்கு, நான் வேணும்மினா தூக்கிட்டுவரவா” என கேட்கிறார்.

சமூகத்திலே சுத்தமான வாழ்க்கை என்பதை மேசேஜாக சொல்வதற்காகபுனையப்படும் சினிமாவிலே சுவாரசியம் சேர்ப்பதற்காக, சினிமாவின் ஹீரோசட்டத்தை தானே கையில் எடுத்துக் கொள்வதாக வரும் படங்கள் வியாபாரரீதியாக மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாக சொல்லலாம்.. என்னை விட அந்தபட்டியல் கமல்ஹாசனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் பட்டியலில் கவனம்செலுத்தாமல் இந்த கடிதத்தை தொடர்கிறேன்.

லஞ்சம் வாங்குபவர்கள், கடமையை சரியாக செய்யாதவர்கள், தீவிரவாதிகள்இப்படியானவர்கள் மீது சமூகம் கோபம் கொண்டிருப்பது மெய்தான். ஆனால்அவர்களை கையாள இப்படி சினிமாக் கணக்காக ஒரு ஹீரோ extraordinary சங்கதிகளுடன் போலிசுக்குத் தண்ணி காட்டி தண்டனை வழங்குவான் என்பதைசினிமா அளவில் மட்டுமே சாத்தியம் என்பதை சமூகம் தெரிந்து வைத்துதான்இருக்கிறது.

சினிமா என்பதை மெசேஜ் சொல்லும் யுக்தியாக, நீங்கள் வைத்திருக்கும்பட்சத்தில் சமூக அவலங்களுக்கு சினிமாவிலே ஹீரோ நடை முறையில் உள்ளலீகல் சிஸ்ட்த்திற்கு உட்பட்டே தண்டனை வாங்கித் தருவதாக, கதை அமைத்துஒரு படம் முயற்சி செய்து பாருங்களேன். என்ன கோர்ட் கேஸ் என படம் ஜவ்வடிக்குமோ என நீங்கள் கொஞ்சம் யோசிக்கலாம்.. ஆனால் அதையெல்லாம்தாண்டி சுவாரசியமாக கதை சொல்ல உங்களுக்குத் தெரிந்து இருக்கணும்னு நான் நம்புகிறேன்

இப்படி படம் செய்வதால் என்ன மேசேஜ் கிடைக்கும் எனவும் யோசித்தேன்.. சினிமாவிலே ஹீரோ ஒருவனும் இன்னும் சிலரும் மட்டுமே நல்லவர்கள்பிறரெல்லாம் சமூகப் பிரஞ்ஞையே இல்லாதவர்கள்.. குறிப்பாக அரசாங்கஅதிகாரிகள் சமூக அக்கறையே இல்லாதவர்கள் என்பது போல காட்டப்பட்டுவரும் வழக்கம் மாறிடலாம்.

இப்படி படம் எடுத்தால் எனக்கு கமர்ஷியலாக பாதிப்பு வரலாம் என நீங்கள்யோசிக்கலாம்.. இப்படி ரிஸ்க் எடுப்பதில் உன்னைப் போல் ஒருவன் இல்லையேகமல்.. அதனால் தான் இதை உங்களிடம் சொல்கிறேன்

இப்படி செய்தால் மட்டுமே நீங்கள் சொல்லும் moral anger சரியாகப் பொருந்திவரலாம்.. இல்லேன்னா anger மட்டும் இருக்கும். தான் மாரல் இருக்காது

Sunday 26 July 2009

நரை


இன்றைக்குத்தான் புதுசாக ஒன்றைக் கவனித்தேன். ஷேவ் செய்யும் போது மீசையிலே இரண்டு வெள்ளை முடிகள். நரை...

சரி வயசாகிவிட்ட்தோ என நினைத்து சமாதானம் ஆகிவிட்டேன். ஆமாம் ஏன் நரை முடி... என் டாக்டர் சிநேகிதனைக் கேட்டேன்

நம் ஒவ்வொரு முடியின் வேரும் Tissue Tube ஒன்றால் கவர் செய்யப்பட்டுள்ளது. இதுக்கு பாலிக்கிள் என்று பெயர். இதிலே நிறைய பிக்மெண்ட் செல்கள் இருக்கின்றன இந்த பிக்மெண்ட் செல்கள் மெலனின் எனும் ஒரு ரசாயனத்தை உற்பத்தி செய்து கொண்டே இருக்குமாம். இந்த மெலனின் தான் கேசத்தின் நிறத்துக்குக் காரணமாம்.

வயசு ஏற ஏற மெலனின் உற்பத்தி சொற்பமாகி, கலர் சப்ளை நின்று போய் கேசத்திலே வெள்ளை அடிக்க ஆரம்பமாகிறதாம். இதே மெலனின் தான் நமது தோலின் நிறத்துக்கும் காரணமாம்.

மெலனின் பற்றாக்குறைக்கு அல்பினிசம் என்று பெயராம். இந்த அல்பினிசத்துக்கும் காது கேட்காமல் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக சொல்லி லேசாக பயம் காட்டினான்

மெலனின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொள்ள ஏதாவது மாத்திரை, டானிக் இருக்கிறதா எனக் கேட்டேன். அதான் நிறைய டை வந்திருக்கேஎன்றான்.

டை அடித்துக் கொண்டு முடியைக் கறுப்பாக்கிக் கொண்டு உலாவும் கனவான்கள் ஒன்றைக் கவனித்திருப்பார்களா தெரியவில்லை. முன் மண்டையிலே பிசிரில்லாமல் நேர்த்தியாக கருப்படித்திருப்பார்கள். அந்த நேர்த்தி பெயிண்டிங் கேசம் மாதிரி இருக்கும். உடனே இது டை அடித்த தலை என சந்தேகம் இல்லாமல் சொல்லிவிடலாம்

மெலனின் அபரிமிதமாக சுரப்பதும் உண்டாம். அதுக்கு மெலனோஜெனசிஸ் என்று பெயராம். இப்படி மெலனின் அளவு கடந்து சுரப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டேன். எல்லாம் ஹெரிட்டரிசிம்பிளாகச் சொல்லிட்டு போய்ட்டான் ஆனால் இதுக்கு ஒரு நல்ல ஆன்சர் புறநானூற்றிலே பிசிராந்தையார் சொல்லிருக்கார் பாருங்கள்

“யாண்டு பலவாக நரையில் ஆகுதல்

யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;

யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்

அல்லவை செய்யான், காக்கும்; அதந்தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே

(புறநானூறு :191 பாடியவர் பிசிராந்தையார்)

எனக்கு அன்பான மனைவி.. மிக்க அன்பான குழந்தைகள்.. கடமை பெரிதென உழைக்கும் ஊழியர்கள். எல்லாவற்றிலும் மேலாக குற்றம் செய்யாத என் அரசன். அதைவிட மேலாக கொள்கையால் சிறந்த சான்றோர்கள் நிறைந்த ஊரிலே நான் குடியிருக்கிறேன். அது தான் ஆண்டுகள் பல ஆகியும் எனக்கு கேசம் நரைக்கவில்லை

Saturday 18 July 2009

குருஷேத்ரம்-3


இதற்கு முந்தைய பதிவுகளை கீழ்க்கண்ட சுட்டிகளிலே படிக்கலாம்

குருஷேத்ரம் அறிமுகம் பதிவு

http://mowlee.blogspot.com/2009/02/blog-post.html

குருஷேத்ரம்-1

http://mowlee.blogspot.com/2009/05/1.html

குருஷேத்ரம்-2 பதிவு

http://mowlee.blogspot.com/2009/05/2.html

------------------------------


அப்ப நாங்கெல்லாம் அதை மேம்போக்காக புரிஞ்சிண்டோம்னு சொல்றியா “

அப்படி இல்லைப்பா. வேலை செய்யறது தான் உசத்தியானதுனு சொல்ற பகவான்.. அந்த வேலைக்கு கூலி எதிர்பார்க்காதேனு சொல்வாரா.. யோசிச்சுப்பாரு. நீ செய்ற வேலையை எனக்கு செய்ற பூஜையாக நினைத்துக் கொள் அப்படினு சொல்றார்

“வேலையை பூஜையா எப்படி நினைக்க முடியும்

“சரி இப்படி யோசிச்சுப் பாரு.. வேலை செய்ய purpose இருக்கே. அந்த பர்ப்பஸ் தான் முக்கியம்னு நினைக்கிறது பூஜை. இதை பஹவத் அர்ப்பணம் அப்படினு சொல்லிருக்கார் பகவான்

அப்ப ஒவ்வொருவருக்கும் ஒரு பர்ப்பஸ் இருக்குமே. அது நல்ல காரியமாகவும் இருக்கலாம். கெட்ட காரியமாகவும் இருக்கலாம்.. திருடனுக்குக் கூடத்தான் திருடறத்துக்கு பர்ப்பஸ் இருக்கும்.. அதுனாலே திருடனுக்கும் பகவான் ஆதரவு தருவாரா

ஆக்‌ஷன் என்பது வெறுமனே செய்கை மட்டுமில்லை சிவராம்.. ஆக்‌ஷனுக்கான மனோபாவமும் சேர்த்துத்தான்

எப்ப மனோபாவம்னு வருதோ.. அது செல்ஃப் டிசிப்ளினுக்கு உட்பட்ட்தாய்டுதே

கரெக்டா சொன்னே. இதை சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அழகாச் சொல்லிருக்கார்.. SELF DISCIPLINE IS NOT A MATTER OF INTELLIGENCE. IT IS A MATTER OF WILL AND EMOTIONS..” அப்படினு

“அப்படின்னா WILL தான் உசத்தியா

Will அப்படிங்கறதை காரியம் செய்ய தேவையான திட சித்தம்னு மட்டும் அர்த்தம் கொள்ளக் கூடாது

பின்ன அது என்னவாம்

“காரியத்தோட சம்பந்தமான எல்லா நிகழ்வுகளையும் தாங்கிக்கிற மனோபாவம் தான் அந்த WILL. வெறும் பிடிவாதம் WILL இல்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த நிகழ்வுகளினால் தடுமாறாம இருக்கறது தான் அந்த வில்

“சரி நான் அமெரிக்கா போக அடம்பிடிக்கிறேன்னு சொல்றியா

“நீ அந்த ப்ராஜக்டிலே ஈடுபட பர்ப்பஸ் இருந்தது. அந்த பர்ப்பஸுக்கு நீ உனக்கான கடமையைச் செஞ்சாச்சு.. ஆனா அதுக்கு அமெரிக்கா போறதுதான் பலன் அப்படினு பலனை நீயே தீர்மானம் செய்துட்டாய்... அதுனாலே அது மீதான ஈடுபாடு காரணமாக நீ அதை விடமுடியாம இருக்கிறாய்.. ஆனால் உன்னோட பலன் அமெரிக்கா போறதுத்தான் அப்படினு நீயா தீர்மானம் பண்ணிண்ட்து உன்னோட மனோபாவம்.. அது உன்னோட செல்ஃப் டிசிப்ளினிலே வந்த தடுமாற்றம் “

“புரியற மாதிரியும் இருக்கு .. கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கு

சரி உடைச்சே சொல்றேன்.. நான் செய்தேன் நான் செய்தேன்.. நான் செய்யப்போறேன் அப்படினு உன்னை முன்னே நிறுத்திண்டு இருக்கே.. அந்த நான் எனும் அகங்காரம் தான் கவலையாகவும்.. துக்கமாகவும் இப்ப உனக்கு தோணுது.. ப்ராப்ளம் உன்னோட இமோஷன்.. வேறெதும் இல்லை’’

(தொடரும்)