Saturday, 18 July 2009

குருஷேத்ரம்-3


இதற்கு முந்தைய பதிவுகளை கீழ்க்கண்ட சுட்டிகளிலே படிக்கலாம்

குருஷேத்ரம் அறிமுகம் பதிவு

http://mowlee.blogspot.com/2009/02/blog-post.html

குருஷேத்ரம்-1

http://mowlee.blogspot.com/2009/05/1.html

குருஷேத்ரம்-2 பதிவு

http://mowlee.blogspot.com/2009/05/2.html

------------------------------


அப்ப நாங்கெல்லாம் அதை மேம்போக்காக புரிஞ்சிண்டோம்னு சொல்றியா “

அப்படி இல்லைப்பா. வேலை செய்யறது தான் உசத்தியானதுனு சொல்ற பகவான்.. அந்த வேலைக்கு கூலி எதிர்பார்க்காதேனு சொல்வாரா.. யோசிச்சுப்பாரு. நீ செய்ற வேலையை எனக்கு செய்ற பூஜையாக நினைத்துக் கொள் அப்படினு சொல்றார்

“வேலையை பூஜையா எப்படி நினைக்க முடியும்

“சரி இப்படி யோசிச்சுப் பாரு.. வேலை செய்ய purpose இருக்கே. அந்த பர்ப்பஸ் தான் முக்கியம்னு நினைக்கிறது பூஜை. இதை பஹவத் அர்ப்பணம் அப்படினு சொல்லிருக்கார் பகவான்

அப்ப ஒவ்வொருவருக்கும் ஒரு பர்ப்பஸ் இருக்குமே. அது நல்ல காரியமாகவும் இருக்கலாம். கெட்ட காரியமாகவும் இருக்கலாம்.. திருடனுக்குக் கூடத்தான் திருடறத்துக்கு பர்ப்பஸ் இருக்கும்.. அதுனாலே திருடனுக்கும் பகவான் ஆதரவு தருவாரா

ஆக்‌ஷன் என்பது வெறுமனே செய்கை மட்டுமில்லை சிவராம்.. ஆக்‌ஷனுக்கான மனோபாவமும் சேர்த்துத்தான்

எப்ப மனோபாவம்னு வருதோ.. அது செல்ஃப் டிசிப்ளினுக்கு உட்பட்ட்தாய்டுதே

கரெக்டா சொன்னே. இதை சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அழகாச் சொல்லிருக்கார்.. SELF DISCIPLINE IS NOT A MATTER OF INTELLIGENCE. IT IS A MATTER OF WILL AND EMOTIONS..” அப்படினு

“அப்படின்னா WILL தான் உசத்தியா

Will அப்படிங்கறதை காரியம் செய்ய தேவையான திட சித்தம்னு மட்டும் அர்த்தம் கொள்ளக் கூடாது

பின்ன அது என்னவாம்

“காரியத்தோட சம்பந்தமான எல்லா நிகழ்வுகளையும் தாங்கிக்கிற மனோபாவம் தான் அந்த WILL. வெறும் பிடிவாதம் WILL இல்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த நிகழ்வுகளினால் தடுமாறாம இருக்கறது தான் அந்த வில்

“சரி நான் அமெரிக்கா போக அடம்பிடிக்கிறேன்னு சொல்றியா

“நீ அந்த ப்ராஜக்டிலே ஈடுபட பர்ப்பஸ் இருந்தது. அந்த பர்ப்பஸுக்கு நீ உனக்கான கடமையைச் செஞ்சாச்சு.. ஆனா அதுக்கு அமெரிக்கா போறதுதான் பலன் அப்படினு பலனை நீயே தீர்மானம் செய்துட்டாய்... அதுனாலே அது மீதான ஈடுபாடு காரணமாக நீ அதை விடமுடியாம இருக்கிறாய்.. ஆனால் உன்னோட பலன் அமெரிக்கா போறதுத்தான் அப்படினு நீயா தீர்மானம் பண்ணிண்ட்து உன்னோட மனோபாவம்.. அது உன்னோட செல்ஃப் டிசிப்ளினிலே வந்த தடுமாற்றம் “

“புரியற மாதிரியும் இருக்கு .. கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கு

சரி உடைச்சே சொல்றேன்.. நான் செய்தேன் நான் செய்தேன்.. நான் செய்யப்போறேன் அப்படினு உன்னை முன்னே நிறுத்திண்டு இருக்கே.. அந்த நான் எனும் அகங்காரம் தான் கவலையாகவும்.. துக்கமாகவும் இப்ப உனக்கு தோணுது.. ப்ராப்ளம் உன்னோட இமோஷன்.. வேறெதும் இல்லை’’

(தொடரும்)

Monday, 15 June 2009

நிற்பதுவே


பாண்டிச்சேரியில் ஈஸ்வரன் தர்மராஜன் கோவில் தெருவிலே கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டின் மாடியிலே ஏறி எதிர் வீட்டு மொட்டை மாடியை டிஜிட்டல் காமிராவுக்குள்ளே கொண்டு வரும் முயற்சியிலே நானும் கார்த்தியும்...

திருப்தியாய் வந்த்தா படம்

.. தலையாட்டினார்

சரி கீழே இறங்கலாம் என திரும்பினால் .. “ஓய் ஸ்வாமி... இப்படி வாரும் எனக் குரல் கேட்டது

அந்த எதிர் வீட்டு மொட்டை மாடியிலே சமையல் கட்டு புகை போக்கி போலிருந்த மேடை ஒத்த இட்த்தின் மீது முண்டாசு கட்டிய பாரதி..


அவன் 10 வருஷம் குடியிருந்த அந்த வீட்டு மொட்டை மாடியில் இப்போது அவனைப் பார்க்க எனக்கு ஆச்சரியமில்லை.. அங்கிருந்தபடியே எங்களை அழைத்தான்..


“இந்தப் பக்கம் வாருமேன்


அந்த வீட்டிலே மொட்டை மாடிக்குப் போகும் வழிக் கதவு சாத்தப்பட்டிருப்பதை கார்த்தி என் காதிலே முணு முணுத்தார்.


“நண்பர் உமது காதிலே எதோ உபதேசம் செய்கிறாரே


“அது ஒன்னுமில்லை.. உங்க வீட்டிலே மொட்டைமாடிக்கு வரும் வழியிலே ஒரு கதவு இருக்கிறதல்லவா அது மூடியிருக்கு அதை சொல்றார்


“அது குறித்து நீர் கவலையுற வேண்டாம். நான் கீழே இறங்கி வருகிறேன். நீங்கள் அங்கே வந்துவிடுங்கள்.


எதிர் கொண்டு எங்களை வரவேற்று உள்ளே அழைத்துப் போனான்..


“இவர் கார்த்தி.. இவர் ருத்ரபிரசாத் என் நண்பர்கள்.. இங்கே அரவிந்தர் வாழ்ந்த வீடு உங்க வீடு இரண்டையும் பார்த்துவிட்டுப் போகலாம் என வந்தோம்

வீட்டின் உள்ளே பார்த்து குரல் கொடுத்தான் முண்டாசு , “செல்லம்மா. நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்று இங்கேதான் போஜனம்..”.. சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான்..


“பழக்க தோஷம்என சொல்லிவிட்டு எங்களைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினான்


நீங்க தான் யுக புருஷன். 100 வருஷம் தாண்டியும் எங்களோட பேசிண்டிருக்கேள்.. செல்லம்மாவும் அப்படியா


“நல்ல கேள்விதான். ஆனால் என்னைப் போல கிறுக்கனை சமாளித்தாள் எனும் வகையிலே செல்லம்மா என்னிலும் மேலானவள்.. அது கிடக்கட்டும் அது என்ன நண்பர் கார்த்தி உங்கள் காதிலே எதோ சொல்கிறாரே


“அது ஒன்னுமில்லை.. நீங்க பேனாவும் பேப்பருமாய் அமர்ந்த உடன் கவிதை தங்கு தடையில்லாம வருமானு வியப்பாகக் கேட்கிறார்


“எனக்கென்ன தெரியும்... அதெல்லாம் பராசக்தி வேலை.. அவளிடம் தான் கேட்க வேண்டும் சட்டையிலே எதையோ தொங்கவிட்டிருக்கின்றீர்களே அது என்ன


“அது பாடல் கேட்கும் கருவி.. இதோ நீங்களும் கேட்டுப்பாருங்கள்..எம்பி3 ப்ளேயரை இயக்கி முண்டாசை லேசாக நீக்கிவிட்டு ஸ்பீக்கரை காதிலே பொறுத்தினேன்.. நிற்பதுவே பாட்டைத்தான் வைத்திருந்தேன்


அற்புதம்... அற்புதம்... என் பாடலை ரொம்ப வருடம் கழித்துக் கேட்பதிலே

பரமான்ந்தம்..


எங்கள் மூவரையும் மாறி மாறிப் பார்த்தான்.. நீங்கள் மூவரும் சமீபத்திலே அத்வைதம் குறித்துக் கதைத்தீரல்லவா.. இந்த பாடலில் அத்வைதம் தான் சொல்லிருக்கேன்..


நீங்கள் அரவிந்தர் இல்லத்துக்குப் போய் வாருங்கள்.. நான் கடற்கரை வரை சென்று வருகிறேன்


காண்பதெல்லாம் மறையும் என்றால்.. மறைவதெல்லாம் காண்பமன்றோ


அடுத்த முறை சந்திக்கும் போது கேட்டுக் கொள்ளலாம் என விட்டு விட்டோம்

Sunday, 10 May 2009

குருஷேத்ரம்-2


”ஆரம்பிச்சுட்டியா. சரி வந்தாச்சு. உபதேசம் கேட்டுக்க வேண்டியது தான். சொல்லு”

“சிவராம். உலகத்திலே எதுவுமே உபதேசம் இல்லை. எல்லாம் அக்கறையாலேசெய்றது தான். தனக்கு தெரியாதையா இவன் சொல்லப் போறான் அப்படினுநினைச்சா அது உபதேசமா தெரியும். போரடிக்கும். எரிச்சலா வரும். இன்னும்சொல்லப் போனா இந்த மாதிரி அக்கறையிலே சொல்றவன் எல்லை மீறிசுதந்திரம் எடுத்து கொள்கிற மாதிரியும் தெரியும்”

“நான் அப்படியெல்லாம் நினைக்கலை. நீ சொல்லு நான் கேட்டுக்கிறேன். Probably I may be wrong நீ சொல்றதாலே எனக்கு அது புரியலாம்”

“சரி இந்த ப்ராஜக்ட் விஷயத்துக்கே வரேன். இதுக்கு நீ அமெரிக்கா போகணும்னுஏன் நினைக்கிறே”

“போச்சுறா அதான் சொன்னேனேப்பா. நான் தான் டிசைனர்”

“அப்படின்னா அமெரிக்கா போறது தான் இந்த ப்ராஜக்ட்டுக்கு நீ எதிர்பார்க்கிறபலன்; அப்படித்தானே”

“ஆஹா நீ என்ன சொல்லப் போறாய் எனத் தெரிந்து விட்ட்து. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே and all that ; ஒரே boring இந்த ஒரு விஷயத்துக்காகஇத்தனை பெரிய சாஸ்திரம்”

”நீ கவனமாகப் புரிந்து கொள்ளவில்லை என என்னால் தீர்மானமாகச் சொல்லமுடியும்”

“எப்படிப்பா. நான் வேலை செய்யனும். அதுக்கு கூலி கிடைக்கனும்னுஎதிர்பார்க்கப்பிடாது. ரிவார்டு கிடைக்குமானு நினைக்கப்பிடாது. ரெக்க்கனிஷன்கிடைக்கனும்னு நினைக்க்க் கூடாது. இதெல்லாம் சாத்தியமா. இல்லை ஏன்அப்படி இருக்கனும்”

“பார்த்தியா அதனாலே தான் சொன்னேன். நீ கவனமாகப் புரிஞ்சிக்கலைனு. நீசெய்யற வேலைக்கு கூலி, ரிவார்ட், அவார்ட், ரெக்க்கனிஷன் இதெல்லாம்எதிர்பார்க்க்க் கூடாதுனு சொல்றதை மேம்போக்காகப் புரிந்து கொள்வதாலேவரும் சிரம்ம் இது தான்”

(தொடரும்)

Saturday, 9 May 2009

குருஷேத்ரம்-1


மைதிலி அப்படியான ஓர் அகால வேளையில் போன் பண்ணி விசும்புவாள் என நானோ என் பெண்டாட்டியோ எதிர்பார்த்திருக்கவில்லை. இது மாதிரி விஷயங்களில் என்னைவிட என் மனைவி இங்கிதமாக ஹாண்டில் பண்ணுவாள் என்பதால் ரிசீவரை அவளிடம் நீட்டினேன், “ இந்தாம்மா மைதிலி மாமி லைனிலே இருக்கா; என்னவோ பிரச்சனை போலிருக்கு; என்ன்னு கேளு; லேசா அழற மாதிரி தெரியறது.

“என்னது மாமி அழறாளா. கொண்டாங்கோ நான் பேசறேன்

நாங்கள் அங்கே போனபோது சிவராமன் அப்படின் ஒன்றும் நிலை தடுமாற்ப் போயிருக்கவில்லை. மைதிலி கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிவிட்டாள்.

“சிவராம் ! என்னாச்சு ! திடீர்னு. இப்படி அப்செட் ஆகியிருக்கேள். அதுவும் லிக்கர் கன்ஸ்யூம் பண்ணிட்டு தடுமாறுகிற அளவுக்கு

“அதெல்லாம் ஒன்னும் இல்லேப்பா; இவ தான் உனக்கு போன் பண்ணி கலாட்டா பண்ணிட்டாள்

“அப்படி தெரியலையே; நீங்க ரொம்ப அப்செட் ஆகியிருக்கிறது நன்னாவே தெரியறது

“உன் கிட்டே சொல்றதுக்கென்ன; எங்க கம்பெனில ஒரு பெரிய ப்ராஜக்ட் ஆரம்பிச்சோமில்லையா

“ஆமா சொல்லிருக்கீங்க. அமெரிக்கன் க்ளையண்ட்; நல்ல சாலஞ்சிங் ரோல் கிடைச்சிருக்கு அப்படினு

“அதான். அதோட ஆப்ரேஷனல் க்வாலிட்டி டெஸ்டிங் நடக்கப் போறது. க்ளையண்ட் ப்ளேசிலே. அந்த டீமிலே நான் இல்லை; இந்த ப்ராஜக்டிலே இது வரை சம்பந்தமே படாதவா எல்லாம் பொண்டாட்டி குழந்தை சகிதம் அமெரிக்கா போக கம்பெனி எல்லாம் செய்றது; ஐம் ஜஸ்ட் எ ஸ்பெக்டேட்டர் நௌ

“நீங்க தானே ப்ராஜக்ட்டையே டிசைன் பண்ணினது

ஆமா. நான் தான் பேஸ் டிசைனிலிருந்து ஆரம்பிச்சு ஆர்க்கிடெக்சர் வரைக்கும் கொண்டு வந்தவன். டெவெலெப்மெண்டிலே ஒவ்வொரு வரியா பார்த்து பார்த்து க்வாலிடிக்கு மாரடிச்சேன்; ஆனா இப்ப க்வாலிடி டெஸ்டிங்கிலே நான் இல்லை

“இவ்வளவு தானா ! இதுக்கு தானா இத்தனை சோகம் ! என்ன சாப்பிட்டேள் ! வெறுமனே பீர் தானா இல்லை ரொம்ப காட்டமா இருக்கட்டுமேனு ரம் வரைக்கும் போய்ட்டேளா

“என்னப்பா இத்தனை சாதாரணமா சொல்ற. என் கஷ்டம் உனக்குப் புரியலையா

“சிவராம். இதிலே கஷ்டப்பட வேண்டிய அவசியமேயில்லை

“என்ன சொல்றே நீ. சாஃப்வேர் ப்ராஜக்ட்டுக்காகவும் ஒன்னோட கிருஷ்ணர் எதாவது ஸ்லோகம் சொல்லிருக்கார் கீதையிலே அப்படின்னுவே|

“அதே தான்

(தொடரும்)