Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Saturday, 10 September 2011
Friday, 29 July 2011
Friday, 22 July 2011
Friday, 15 July 2011
இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 1
Thursday, 14 July 2011
இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள்

தமிழோவியம் தளத்தில், இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் குறித்து, தொடர் கட்டுரைகள் எழுத வாய்ப்பு அமைந்திருக்கின்றது. இந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்த நண்பர் கணேஷ் சந்திராவுக்கு என் மனமார்ந்த நன்றி.
அக்கட்டுரைகள் தமிழோவியம் தளத்தில் வாரம் ஒரு கட்டுரை என வெள்ளிக் கிழமைகளில் பதிவாகும், படித்து கருத்துரைக்க அன்புடன் வேண்டுகிறேன்
Saturday, 9 July 2011
விக்கிரமாதித்யன் வேதாளம் முதல் கதை

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் அந்த பிரம்மாண்டமான மரத்தினை அணுகி வேகமாக அதன் கிளைகளின் வழியே ஏறி, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தினை பற்றி இழுத்து, தன் முதுகில் சுமந்து கொண்டு அந்த அடர்ந்த வனத்திலே நடக்கத் தொடங்கினான். வழக்கத்திற்கு மாறாக வேதாளம் மௌனமாக இருந்தது.
"என்ன வேதாளமே ! என்ன பேச்சையே காணோம். இந்த முறை கதையும் வினாவும் இல்லையா"
" அது எப்படி ! நிச்சயம் உண்டு; கவனமாகக் கேள்
புண்ணிய தேசமென்றே பெயர் கொண்ட நாடு அது. அது பல குறுநில இராஜ்ஜியங்களைச் சேர்த்து அமைந்த ஒரு பரந்த தேசம். அந்த தேசத்தினை மனமோகன் என்ற ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஆலோசனை சொல்ல குறு நிலத்து அரசர்கள் தங்கள் பிரதிநிதிகளாக அமைச்சர்களை அனுப்புவது வழக்கம். அப்படியாக தென் பகுதி குறுநில மன்னன் தட்சிணா மூர்த்தி தன் சார்பாக இரண்டு பிரதிநிதிகளை மனமோகனுக்கு ஆலோசனை சொல்லும் அமைச்சர்களாக அனுப்பியிருந்தான். ஒருவன் பெயர் பெரம்பலூரன் மற்றொருவன் பெயர் சூரியப்பேரன்.
அந்த் நாட்டில் நீண்ட நாட்களாக ஒரு வழக்கம் இருந்தது. மக்கள் தாங்கள் தகவல் அனுப்ப தேவையான புறாக்களை இராஜ்ஜியத்திடம்வாடகைக்குப் பெற வேண்டும். இந்நிலையில் சில வர்த்தகர்கள் தாங்களும் புறாக்கள் வளர்ப்பதாகவும் செய்தி சுமக்கும் புறாக்களாக அவை இருப்பதாகவும் அவற்றினையும் மக்கள் வாடகைக்கு துய்த்து பயன் பெறச் செய்தால்
இராஜ்ஜியத்திற்கு மிகவும் உதவியாக இருக்குமெனவும் கருத்து சொல்லியிருந்தனர். இதனை ஏற்பதால் இராஜ்ஜிய கஜானாவுக்கு வருமானம் தடைப்படும் என மனமோகன் யோசித்தான்.
அமைச்சனான சூரியப் பேரன் மனமோகனிடம், "அரசே வர்த்தகர்கள் தங்கள் புறாக்களையும் செய்தி சுமக்கும் பணியில் அமர்த்தினால் கஜானாவுக்கு ஆபத்து உண்டாகும் என தாங்கள் அஞ்ச வேண்டாம். இதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. தாங்கள் ஆணையிட்டால் நான் விளக்குகிறேன்"
இந்த அணுகுமுறை மனமோகனுக்கு மகிழ்சி தருவதற்குப் பதில் கலக்கத்தையே தந்தது. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தட்சிணாமூர்த்தி அனுப்பும் பிரதிநிதிகள் கஜானா எனும் சொல்லை உச்சரிக்கும் போதே அவர்கள் கண்களில் ஒரு ரகசிய வெறி தெரிவதை மனமோகன் பல முறை கண்டிருக்கின்றான்.
அதுவும் புண்ணிய தேசத்தின் கடல்பரப்பில் பெருங்கப்பல்கள் வந்து செல்ல புது திட்டம் என அந்த மதுக்கூரன் எனும் அமைச்சர் கொண்டு வந்த திட்டமும் அதில் கஜானா பட்ட பாட்டையும் மனமோகனால் மறக்க இயலவில்லை.
ஆனாலும் தட்சிணாமூர்த்தியின் தயவு மனமோகனுக்கு அவசியமாக இருந்தது.
சரி சொல சூரியப் பேரா என சொல்லிவிட்டான்.
அரசே வர்த்தகர்கள் தங்கள் புறாக்களை இராஜ்ஜியத்திடம் தத்து தந்து விடட்டும். அவர்கள் புறா வழி மக்கள் செய்திகளை அனுப்புவதற்கு ஒரு கட்டணம் நிர்ணயம் செய்வோம். அதில் கணிசமான பங்கினை நாம் எடுத்துக் கொண்டு மீதியை வர்த்தகர்களுக்குத் தருவோம். உங்கள் சம்மதம் மட்டும் போதும் என்னிடம் பொறுப்பை தாருங்கள் நான் இதனை செம்மையாக நடத்துகிறேன் என்றான் சூரியப் பேரன்
அவன் செம்மையாக என அழுத்திச் சொன்னது மனமோகனுக்கு மிகவும் கலக்கமாக இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.
மனமோகன் ராஜாங்கத்துக்கு ஒரு இராஜ மாதா இருந்தார். அவள் மனமோகனின் தாயார் இல்லை. மனமோகன் ராஜ்ய பரிபாலனப் பொறுப்பினை ஏற்பதற்கு பல வருடங்களுக்கு முன்பு புண்ணிய தேசத்தினை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனது தர்ம பத்தினி தான் இப்போதைய இராஜ மாதா. அந்த மன்னன் காலமானபின்பு அவனின் தர்மபத்தினிக்கு மன்னனின் விதவை எனும் மரியாதை இருந்து வந்தது. அவளும் இராஜாங்க காரியங்களில் சில சமயம் தலையிட்டு வந்தாள். ஆனால் இடையில் ராஜாங்கத்தில் ஏற்பட்ட சில குழப்பங்களால்
அவள் இராஜா மாதா ஆவது தான் சிறந்தது என சில ஜோதிடர்கள் சொல்லி விட்டனர். அவளும் இராஜ மாதா ஆகிவிட்டார். இப்போது மனமோகன் பெயருக்குத் தான் மன்னன். அவனை ஆட்டுவிப்பது இந்த இராஜ மாதா தான் என அரண்மனையின் முற்றம் தொடங்கி தேசத்தின் தென் கோடி எல்லையில் இருக்கும் சாமான்யன் வரை எல்லோரும் சில சமயம் அரசல் புரசலாகவும் பல முறை பட்டவர்த்தனமாக வெளிப்படையாகவும் பேசிக் கொண்டனர். இதில் ஓரளவு உண்மையும் இருந்தது. மனமோகன் சூரியப் பேரனின் பேச்சைக் கேட்டு புறாக்கள் திட்டத்தை செயலாக்கி விட்டால் இராஜ மாதாவிற்கு யார் பதில் சொல்வது என்ற கலக்கம் தான் மனமோகனுக்கு ; இதனை சமாளிக்க மனமோகன் ஒரு யுத்தி செய்தான். தென்பகுதி குறுநில மன்னன் தட்சிணா மூர்த்தி, தான், சூரியப் பேரன், இராஜ மாதா இவர்கள் சந்தித்துப் பேசுவது எனவும் அவர்களுக்குள் இந்த புறாத் திட்டம் தொடர்பாக ஒரு சமரச ஒப்பந்தம்
செய்வது எனவும் திட்டமிட்டான். அப்படியே சந்திப்பும் நடந்தேறியது. சமரச ஒப்பந்தமும் உண்டானது.
வர்த்தகர்கள் தங்கள் புறாக்களை மக்கள் பயன்படுத்த ஏதுவாக புறாக்களை வழங்குவது., மக்களிடம் இதற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் கஜானாவிற்கு இவ்வளவு, புறா வழங்கிய வர்த்தகர்களுக்கு இவ்வளவு என விகிதாச்சாரமும் முடிவானது. இதனை மேற்பார்வை செய்யும் பொறுப்பு சூரியப் பேரனுக்கு வழங்கப்பட்டது.
இந்த திட்டம் செயலுக்கு வந்த உடன் புதிது புதிதாக புறா வளர்க்கும் வர்த்தகள் புற்றீசல் போல முளைத்தனர். தங்களையும் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள அவர்கள் சூரியப் பேரனின் அரண்மனையினை மொய்க்கத் தொடங்கினர். சூரியப் பேரன் தன்னை அமைச்சனாக்கிய தட்சிணா மூர்த்திக்கு நன்றிக் கடன் பட்டவன். ஆகவே புதிய வர்த்தகர்களை திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அவர்கள் தட்சிணா மூர்த்தியின் கருணைக்குப் பாத்திரமானால் மட்டுமே சாத்தியம் என சொல்லி விட்டான். இதனால் தட்சிணா மூர்த்திக்கு புறா வளர்க்கும்
வர்த்தகர்கள் மத்தியில் செல்வாக்கு பல மடங்கு பெருகியது. அதனை அவனும் செம்மையாக பயன்படுத்திக் கொண்டான். சூரியப் பேரனாகப் பட்டவன் தட்சிணா மூர்த்தியின் உறவினனுமாவான். இவர்கள் குடும்ப உறவில் ஒரு சிக்கல் உதித்தது. சூரியப் பேரன் தட்சிணா மூர்த்தியின் அன்பை இழந்தான். அவனுக்கு இந்த புறாத் திட்டம் கண்காணிக்கும் பொறுப்பும் கை நழுவியது.
தட்சிணாமூர்த்தியிடம் நீண்ட காலம் விசுவாசமாக் ஓர் அடிமை போல உழைத்த பெரம்பலூரனுக்கு தட்சிணா மூர்த்தியின் கடைக் கண் கருணை கிட்டியது. புறாத் திட்டப் பொறுப்பு பெரம்பலூரன் வசம் வந்தது
புண்ணிய தேசத்தின் நீதி பரிபால முறையில் ஒரு நல்ல அம்சம் இருந்தது. நீதி வழங்க அமர்த்தப்படும் குருமார்கள் அரசுக்கோ அரசனுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்லர்.அவர்களுக்கு அரசனையே கேள்வி கேட்கவும் ஏன் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது புண்ணிய தேசத்தில் ஒரு புகழ்பெற்ற விதூஷகன் இருந்தான் . அவன் பெயர் சேவல்கொடி. அவன் பேச்சைக் கேட்டால் கோமாளி போலத் தோன்றும் ஆயினும் மிகச் சிறந்த அறிஞன். அவனுக்கு இந்தப் புறாத் திட்டத்தில் சூரியப் பேரன், மனமோகன், இராஜ மாதா, பெரம்பலூரன், தட்சிணா
மூர்த்தி,எல்லோரும் கஜானவுக்கு வரும் வருமானத்தில் ஏதோ சூது செய்வதாக ஐயம் தோன்றிவிட்டது. கொஞ்சமும் அச்சமின்றி மனமோகனையே நீ தானே அரசன் புறாத் திட்டத்தில் இராஜ்ஜியத்திற்கு வர வேண்டிய வருமானம் எங்கோ களவு போகிறது போல சந்தேகம் கொள்கிறேன். உண்மையைச் சொல் எனக் கேட்டு விட்டான். மனமோகனுக்கு உள்ளூர கலக்கம்.
ஆயினும் காட்டிக் கொள்ளாமால், அப்படியெல்லாம் ஏதுமில்லை நீ உளறுகிறாய் எனச் சொன்னான். சேவல் கொடி பிடிவாதமாக சூரியப் பேரனையும் பெரம்பலூரனையும் விசாரித்துப் பார் எனச் சொன்னான். மனமோகனின் கலக்கம் அதிகமானது. ஆனாலும் அவன் தனது பிடி வாதத்தில் தளரவில்லை.
சேவல்கொடி பொறுத்துப் பார்த்து ஒரு நாள் நீதிபரிபாலன குருமார்களிடமே முறையிட்டு விட்டான்.
குருமார்கள் இதனை என்னவென்று விசாரியுங்கள் என இராஜாங்கத்தின் பிரத்தியேக காவலர்களுக்கு ஆஞ்ஞை செய்தார்கள்.
பிரத்தியேகக் காவலர்கள் ஆய்ந்து விசாரணை செய்து
புறா வழங்க வர்த்தகர்கள் தேர்வானதில் சூது
புறா கட்டணம் வசூலில் சூது என இதில் பலவாறாக சூது நடந்திருக்கிறது என சொன்னார்கள்
மனமோகன் கலக்கமடைந்து சூரியப் பேரனையும், பெரம்பலூரனையும் காரக்கிருஹத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என காவலர்களிடம் சொல்லிவிட்டான்.
காரக்கிருஹம் செல்வதற்கு முன்பு இருவரும் ஆலயத்திற்கு சென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள் . அப்போது அங்கே கூடியிருந்த ஜனங்களைப் பார்த்து சொன்னார்கள்
நாங்கள் என்ன செய்தாலும் அதை அரசனிடமும் இராஜ மாதாவிடமும் சொல்லி விட்டுத்தான் செய்தோம். அவர்களுக்கு தெரியாமல் ஏதும் செய்யவில்லை
இப்போது விக்கிரமாதித்யா உனக்கு கேள்வி. அரச தர்மம் , இராஜ நீதி இதில் எல்லாம் சிறந்தே நீ உஜ்ஜையினியில் நீ இராஜ்ய பரிபாலனம் செய்கிறாய் ஆதலினால் இந்த கேள்வி கேட்கிறேன். பதில் சொல். இராஜ்யத்தில் பரிபாலனம் செய்யும் அமைச்சர், தளபதிகள், சேனாதிபதிகள் இவர்களின் தவறுகளில் இராஜ்யாதிபதிக்கு பங்கு இருக்கிறதா. இங்கே இந்தக் கதையில் மனமோகன் நடந்து கொண்டது சரியா. இதற்கு சரியான விடை தெரிந்தும் உரைக்காது இருப்பாய் என்றாலும் அல்லது தவறான விடை சொன்னாலும் உனது சிரம் சுக்கல் நூறாக வெடிக்கும்"
விக்கிரமாதித்யன் பதிலுரைக்கத் தொடங்கினான்
" இராஜ்ஜியத்திற்கு துன்பம் என வரும் போது அரசனாகப்பட்டவன் பிறரை விடுவித்து தனனை இரையாக்கவும் தயங்கலாகது. ஒரு கப்பலில் படையினர் பயணம் செய்கையில் கப்பல் மூழ்கிவிடும் எனம் அபாயக் காலத்தில் கப்பலின் தலைவனானவன் பிறரை தப்பிக்க வைத்து தான் மிகக் கடைசியாகவே தப்பிக்க முயல வேண்டும். தேவையெனில் பிராணத் தியாகம் செய்யவும் சித்தமாக இருக்க வேண்டும்.
இராஜ்ஜிய பரிபாலத்தில் பிழை என்றும் ஒழுங்கில் குறை எனவும் வருமேயாயின் அதன் முதல் பொறுப்பினை அரசனே ஏற்பது இராஜ தர்மம் ஆகும். தனது சேனையினைச் சேர்ந்தவர், மந்திரிமார்கள் பிழையிழைத்தாலும் அதன் பொறுப்பு அரசனுக்கே உரியது. அரசனை ஒட்டிதான் இராஜ்ஜிய பரிபாலனம் நிகழ்கிறது. அரசனே சேனைகளை வழி நடத்துகிறான். அமைச்சர்களை கவனிக்கிறான், கண்கானிக்கின்றான். பிரஜைகள் அரசனை தங்களை துன்பத்திலிருந்து ரட்சிக்கும் தெய்வமாகவே மதிக்கின்றார்கள். ஆகவே ஒரு இராஜ்ஜியாதிபதிக்கு
சாதாரண பிரஜையினைக் காட்டிலும் இராஜ்ஜிய சேவையில் பொறுப்பு அதிகமாகிறது. அதன் பொருட்டே அவனையும் அவனது குடும்பத்தாரையும் காத்து நிற்கும் சேனைகளும் சேவகர்களும் அரசனுக்கு ஆபத்து வரும் போது பிராணத் தியாகம் செய்தும் அரசனைக் காக்கின்றார்கள்.
இராஜ்ஜியத்தின் பொறுப்பு என நோக்கும் போது மனமோகன் தனது அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு பொறுப்பேற்பதே முறையாகும். அவனுக்கு அரசனாக பொறுப்பில் தொடர்ந்து இராஜ்ஜிய பரிபாலனம் செய்ய அருகதை இல்லை என்றே சொல்கிறேன். அவனுக்கு நீதி பரிபாலனம் செய்யும் குருமார்கள் இதனையே புத்திமதியாகச் சொல்லியிருக்க வேண்டும். அன்றி மனமோகன் குருமார்கள் மீது மதிப்பு வைத்திருப்பானேயாகில் தானே முன் வந்து முடி துறக்க வேணும்"
விக்கிரமாதித்தியனின் இந்த சரியான பதிலால் உவகை அடைந்த வேதாளம் அவனது முதுகை விட்டு அகன்று பறந்து மீண்டும் அதே மரத்தில் தொங்கியது
Friday, 8 July 2011
அன்பின் மன்மோகன் சிங்

நிறைய சிரமப்படறீங்க போலிருக்கு. ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசி, அவர்கள் அழிச்சாட்டியம் செய்யும் போது அவர்கள் கட்சித்
தலைமையிடம் பேசி சம்மதிக்க வைத்து, ஒரு அமைச்சரிடம் ராஜினாமா கடிதம் வாங்குவதற்குள் எத்தனை சிரமம் பாருங்கள்.
பற்றாக்குறைக்கு இந்த ராஜினாமா பட்டியலில் இவரைச் சேர்க்க வேண்டும் அவரை ஏன் சேர்க்கவில்லை எனக் கேள்விகள் வேறு.
என்னதான் செய்வதென்று குழப்பமாகத்தான் இருக்கும் உங்களுக்கு. ஆனால் மிக சிம்பிளாக ஒரு சொல்யூஷன் இருக்கிறது. அதுவும்
நீங்கள் வகித்துக் கொண்டிருக்கும் பிரதமர் பொறுப்பிலே ( வார்த்தையைக் கவனிக்க பிரதமர் ப்தவி என நான் சொல்லவில்லை பிரதமர்
பொறுப்பிலே !!!) இருந்த லால் பஹதூர் சாஸ்திரியார் செய்து காட்டியது தான். அவரைக் குறித்து தெரியும் தானே.. பின்னே தெரியாமல்
இருக்குமா. அவர் இருந்த ஆபிசுக்குத் தானே தினமும் நீங்களும் போய் வருகின்றீர்கள். அதுவுமில்லாமல் ஆகஸ்ட் 15 செங்கோட்டையில்
கொடியேற்றப் போகும் முன் சாஸ்திரியாரின் நினைவிடத்துக்கும் சென்று விட்டு தானே கொடியேற்றுகின்றீர்கள்
இந்த சாஸ்திரியாகப்பட்டவர் 1951 முதல் 1956 வரை மத்திய சர்க்காரில் ரயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது ஆந்திராவிலே மெஹபூப் நகரில் நடந்த ரயில் விபத்தில் 112 பேர் இறந்தனர். சாஸ்திரி தார்மீகப் பொறுப்பேற்று இராஜினாமா செய்தார். அதனை நேரு ஏற்கவில்லை. பின்னர் அரியலூர் ரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். சாஸ்திரியார் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். நேரு இதனை ஏற்றுக் கொண்டார். சாஸ்திரியாரின் பொறுப்புணர்ச்சி அத்தனை அளவுக்கு இருந்தது. நீங்களும் அதே நாற்காலியில் இருக்கின்றவராயிற்றே எனச் சொல்லி வைத்தேன்.
வழக்கமாக என் நண்பர்கள் சர்தார்ஜி ஜோக்குகளை நிறையச் சொல்வார்கள் , ஆனால் சர்த்தார்ஜிகள் உழைப்பாளிகள், உழைப்பினை நம்பி வாழ்பவர்கள் பிச்சை எடுக்கவே மாட்டார்கள் எனச் சொல்லி அந்த சர்தார்ஜி ஜோக் சொன்னவர்களை நான் வாயை அடைப்பேன். இப்போதெல்லாம் அப்படி சொல்ல முடியும் என தோன்றவில்லை
Sunday, 3 July 2011
இட ஒதுக்கீடு-1
நண்பர் ஹரன்பிரசன்னா அவர்களுக்கு நன்றி சொல்லியும் அவருக்கே இந்த பதிவினை சமர்ப்பிக்கவும் செய்கின்றேன்.
பா.ராகவன் அவர்களின் நாவல் புவியிலோரிடம் படித்துவிட்டு நண்பர் ஹரன் அவர்கள் தனது வலையில் பதிந்துள்ள கருத்துக்கள் மற்றும் கூகிள்
பஸ்ஸில் அவர் நண்பர்களுடன் செய்து கொண்டிருக்கும் கருத்து பரிமாற்றங்களை கவனித்த பின்பு இட ஒதுக்கீடு குறித்து சிறிய அளவில்
அறிமுகம் தரலாம் என இதனை எழுதுகிறேன்
1854 ம் ஆண்டு வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளிலான ஒரு நிலை ஆணையில் காணப்பட்ட அவதானிப்பினைக் கவனிக்கலாம்
"Collectors should be careful to see that the subordinate appointments in their distric are not monopolised by members of a few influential families. Endeavour should always be made to device the principal appointments in each district among the several castes ( Board of Revenue
Proceedings dated 9-march 1854 BSO 128.2 of 1854)
ஆக இட ஒதுக்கீட்டுக்கான முதல் குரல் என இதனைக் கொள்ளலாம்; தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு என முதலில் வழி வகுத்தது நீதிக் கட்சி. தனது 1920 ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பின் 1921 ல் நீதிக் கட்சியின் தீர்மானம் அரசு பணிகளில் பிராமணர் அல்லாதாருக்கு உள்ள் இடங்கள் அதிகப்படுத்த வேண்டும் எனவும் இதனை வருவாய் துறை தவிர ஏனைய துறைகளுக்கும் விரிவு செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டு முதல் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப்பிக்கப்பட்டது (அரசாணை எண் 1071 பொதுத் துறை நாள் 4 நவம்பர் 1927)
இந்த அரசாணையின் படி இட ஒதுக்கீடு விபரம் வருமாறு
1. பிராமணர் அல்லாதார் : 41.67 %
2. பிராமணர் : 16.67 %
3. ஆங்கிலோ இந்தியரும் கிறிஸ்துவரும் : 16.67 %
3. முகமதியர்கள் : 16.67 %
4. நசுக்கப்பட்டவர்கள் (தாழ்த்தப்பட்டவர்களும் மலைஜாதியினரும் ) 8.33 %
இந்திய விடுதலைக்குப் பின் 1947 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி ஓர் அரசாணை பிறந்தது ( அரசாணை எண் 3437 பொதுத்துறை நாள் 21 நவம்பர் 1947)
இந்துக்களில் பிராமணர் அல்லாதார் எனும் பிரிவினை முதலில் கொண்டு வந்தது இந்த ஆணை தான்
1. இந்துக்கள் பிராமணர் அல்லாதார் 42.86 %
2.பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் 14.29 %
3. பிராமணர்கள் 14.29 %
4. தாழ்த்தப்பட்டவர்கள் 14.29 %
5. ஆங்கிலோ இந்தியர்கள் / இந்திய கிறிஸ்துவர்கள் 7.14 %
6. முகமதியர்கள் 7.14 %
1950 இந்திய அரசமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த பின் அதன் அடிப்படை உரிமைகள் பிரிவில் இட ஒதுக்கீட்டுக்கான சாத்தியங்கள் இல்லாமையால் அதுவரை அமுலில் இருந்த இட ஒதுக்கீடு பழக்கம் சட்டப்படி செயல் இழந்தது . சம்பகம் துரை ராஜன் என்பவர் சென்னை இராஜதானி அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழி நின்று உரைத்த
தீர்ப்பினால் அதுவரை அமுலில் இருந்த இட ஒதுக்கீடு பழக்கம் சட்டப்படி செயல் இழந்தது
இது அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு அடிகோலியது.
அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து 15 ல் 4 என ஓர் உப பிரிவு சேர்ந்தது
Article 15(4) Nothing in this article or in clasue 2 of Article 29 shall prevent the state from making any special provision for the advancement of any socially and educationally backward class citizens or for the Scheduled caste an Scheduled Tribes
இந்த திருத்தத்திற்கு பிறகு 1951 ல் இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை அரசு வெளியிட்ட ஆணை எண் 2432 நாள் 27 செப்டம்பர் 1951
இதன்படி இட ஒதுக்கீடு
1. தாழ்த்தப்பட்டவர் மலைசாதியினர் 15 %
2. பிற்படுத்தப்பட்டவர்கள் 25 %
3 பொது தொகுப்பு 60 %
1954 மொழிவாரி மாநிலப் பிரிவுக்குப் பின் இந்த விகிதம் சற்று மாற்றி அமைக்கப்பட்டது
1. தாழ்த்தப்பட்டவர் மலைசாதியினர் 16 %
2. பிற்படுத்தப்பட்டவர்கள் 25 %
3 பொது தொகுப்பு 59 %
1969 ல் சட்ட நாதன் தலைமையில் உருவான முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தனது அறிக்கையினை 1970ல் வழங்கியது .
அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு விகிதங்கள் திருத்தப்பட்டன;அதற்கான அரசாணை நாள் 7 ஜூன் 1971ல் வெளியானது அரசாணை எண் 695 சமூக நலத்துறை
அதன்படி
1. தாழ்த்தப்பட்டவர்கள் 18%
2.பிற்படுத்தப்பட்டவர்கள் 31 %
3. பொது தொகுதி 51 %
பிற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம் 9000க் கும் கீழே உள்ளவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு என எம். ஜி. ஆர் ஆட்சியில்
ஆணையிடப்பட்டது அரசாணை 1156 சமூக நலத் துறை நாள் 2 ஜூலை 1979. பின்னர் இதற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வரவே இது கைவிடப்பட்டது
1989 ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவரில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என உருவாக்கி அவர்களுக்கு தனியாக 20 சதவீதம் ஒதுக்கீடு
செய்யப்பட்டது அரசாணை 242 பிற்படுத்தப்பட்டோர் நலம் நாள் 28 மார்ச் 1989
இந்த ஒதுக்கீடு சதவிகிதங்களைப் பார்க்கையில் ஒன்று கண்கூடாகத் தெரியும். யாருக்காவது ஒதுக்கீடு செய்வதெனில் பிற பிரிவுகளில்
கை வைப்பதில்லை ; பொது தொகுதியைக் குறைத்து அதை குரங்கு ஆப்பத்தினைப் பிய்த்து பங்கிடுவது போல செய்தால் தீர்ந்தது
இந்த ஒதுக்கீடு சதவிகிதங்களைப் பார்க்கையில் ஒன்று கண்கூடாகத் தெரியும். யாருக்காவது ஒதுக்கீடு செய்வதெனில் பிற பிரிவுகளில் கை வைப்பதில்லை ; பொது தொகுதியைக் குறைத்து அதை குரங்கு ஆப்பத்தினைப் பிய்த்து பங்கிடுவது போல செய்தால் தீர்ந்தது
1953 ல் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் அறிக்கையினை பரிசீலித்த மத்திய அரசு சொன்னதைக் கவனிப்போம்
Government of India also consider that while the state government have discretion to choose their own criteria for defining backwardness, in the view of the government of india it would be better to apply economic tests that to go by caste
ஆனால் மண்டல் கமிஷனின் அறிக்கையில் .. But the substitution of caste by economi tests will amount to ignoring the genesis of social backwardness in the Indian society என்பதாக சொல்லியுள்ளது (Mandal Commission Report Volume 1 chapter 1 page 4)
அதிக மதிப்பெண் பெறும் உயர் சாதி மாணவன் இடம் பெறாது போவதையும் அதே சமயம் மிக குறைந்த மதிப்பெண் பெறும்
பிற்படுத்தப்பட்ட மாணவன் இடம் பெற்றே ஆக வேண்டும் என பரிந்துரைக்கும் மண்டல் கமிஷனின் வாதம் எப்படித் தெரியுமா
அதிக மதிப்பெண் பெறும் உயர் சாதிப் பையன்
அவன் நகரில் வசிக்கிறான்
அவன் பெற்றோர் பட்டதாரிகள் அதுவுமில்லாது அரசு பணியில் இருப்பவர்கள்
அதிகாலை அலாரம் வைத்து அவனை எழுப்புகிறார்கள்
எழுந்ததும் ஆவி பறக்கும் காபி தருகின்றனர்
பின்னர் நாற்காலியில் அமர்ந்து மேசையில் வைத்து மின் விளக்கு ஒளியில் படிக்கின்றான்
ஐயம் உண்டாயின் பெற்றோர் துணை செய்கின்றார்கள்
கூப்பிடும் தூரத்தில் பள்ளி
பள்ளியில் முதல் மணி அடித்த உடன் புறப்பட்டால் போதும் பள்ளிக்கு சென்றுவிடலாம்
அவன் உழுவதில்லை; ஆடு மாடுகளுக்கு தீனி வைப்பதில்லை
தனிப் பயிற்சியான டியூஷன் வேறு
ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிப் பையனைப் பாருங்கள் என கேட்கும் மண்டலை
என்ன சொல்வது. அவர் அடுக்கிய எல்லா கேள்வியும் பொருளாதாரம் சார்ந்தது தான் என அவருக்குத் தெரியாதா
மண்டல் கமிஷனின் பக்கம் பக்கமான அறிக்கையில் நல்ல ஆங்கிலம் இருக்கிறது. லாஜிக் இருக்கிறதா எனத் தேட வேண்டியிருக்கிறது.
எங்கள் பல தலைமுறைக்கும் முந்திய சந்ததியினர் அடிமைப்படுத்தப்பட்டனர் ஆகவே எங்களால் மார்க் வாங்க இயலாது. நாங்கள் குறைவாகவே மார்க் வாங்குவோம் ஆகவே எங்களுக்கு இதெல்லாம் வேண்டும் என வசதி வந்த பின்பும் கேட்டுக் கொண்டே இருப்பவர்கள் இருக்கும் வரை குரங்கு ஆப்பம் பிய்த்து எச்சல் ஆப்பத்தை பங்களித்துக் கொண்டே தான் இருக்கும்
(உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டம் இடுபவர்கள் கவனத்திற்கு.. ஆராய்ச்சி, சர்வே, நீதி மன்ற விவாதங்கள், புள்ளி விபரங்கள் என இன்னும் விரிவான் முறையில் தொடர எனக்கு வாய்ப்பளித்தவராவீர்கள்., )
இலங்கை -தனி ஈழம்- தமிழ்நாடு

சமீபத்தில் சென்னைக் கடற்கரையில் இலங்கைத் தமிழர்கள் நினைவாக மெழுகுவர்த்தி சுடர் ஏந்திய நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. ஆங்கே எதிர்பார்த்தது போல விடுதலைப் புலிகளை ஆதரித்த கோஷங்கள் கேட்டன. புலிக் கொடி ஐநாவிலே விரைவில் பறக்கும் எனும் தனி நாடு கோரும் பேராவல் மிக்க குரலும் அதிலே கலந்திருந்தது.
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் பெருமளவில் உயிரிழந்தமைக்கு அங்கிருக்கும் அரசின் போர் நடவடிக்கைகள் மட்டுமே காரணம் எனும் நினைப்பும் யூகமும் பரவலாக இருக்கின்றது. ஆனால் ஒரு யாதார்த்தத்தினை மறந்து விட்டதன் விளைவும் அந்த மரணங்களுக்கு காரணமாக இருக்கின்றதென்பதனை மறந்துவிடலாகாது
தமிழீழம் எனும் மாயக் கனவே அத்தனை உயிர்ப்பலிக்கும் காரணம். இதனை மாயக்கனவு என நான் சொல்வதால் சிலர் காயப்படலாம்.
ஆனால் இந்திய கடல் எல்லையில் ஆயுதம் வழியாக ஒரு நாடு உருவாக்கிட இந்தியா துணையிருக்கும் எனும் சாத்தியமில்லாத அம்சத்தினை துணை கொண்ட போராட்டம் புலிகளின் போராட்டம். . புறத்தே இருந்து ஆதரவு பெறாது தங்களால் இலங்கை அரசினை எதிர்த்து தனி நாடு அமைத்து அதனை நிர்வகித்துக் கொள்ளும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததில்லை.
இன்றைக்கு அங்கே தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைகளை பேசிப் பெறுவதற்கு ஓர் அரசியல் ரீதியான அமைப்பினை அமைத்துக் கொள்ளும் சாத்தியத்தினை முற்றிலும் இல்லாமல் செய்து விட்டது புலிகளின் போராட்டம்
இன்றைக்கு நம்பிக்கை எந்த அளவில் இருக்கிறதென்றால்,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் குரல் எழுப்பி, அதனால் ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டு பின்னர் புதிய தலைமை அமைந்து.... கானல் நீரினும் மாயை கொண்ட அம்சமாக அல்லவா இருக்கின்றது.
இந்த கானல் நீரையும் தங்கள் தாகம் தணிக்கும் நீராக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவ்வப்போது நம்பிக்கை துளிர்க்க, செய்தி
ஊடகங்கள் ஐநா அறிக்கை... அவர் கண்டனம் இவர் கண்டனம் என செய்திகளை வாரி வழங்குகின்றன. இது போன்ற செய்திகளை கவனிப்பவர்கள் கவனத்திற்கு இரண்டு முக்கிய அறிக்கைகளை முன் வைக்கலாம்
Francisians International எனும் அமைப்பு ஐநாவுக்கு அளித்த அறிக்கை. அதனை இந்த சுட்டி வாயிலாக வலை ஏற்றியுள்ளேன்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த போராட்டத்தின் போது புலிகளின் பிடியிலிருந்து தப்பித்து முகாம்களுக்கு செல்ல முயன்ற தமிழர்கள் புலிகளால் தடுக்கப்பட்ட உண்மை அந்த அறிக்கை சொல்லுகிறது ; அப்படி தப்பிச் சென்றவர்களை சுட்டுக் கொன்ற விபரத்தினையும் Asian Forum For Human Rights and Development எனும் அமைப்பு ஐநாவுக்கு அளித்த அறிக்கையில் (இந்த சுட்டியில்
வலையேற்றியுள்ளேன்) விபரமாக சொல்லியுள்ளது. http://www.scribd.com/doc/59211011/G0911990
புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை; காரணம் நாம் எப்போதும் தமிழ்ப் பெருமை பேசுவது வழக்கம்
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
பசுக் கூட்டம், பார்ப்பனர், பெண்கள், பிணியால் பீடிக்கப் பட்டவர், மறு உலகம் (அதான் சொர்க்கம்/ நரகம் )(இது தான் தென்புலம்) போய்ட்டவங்களுக்கு செய்ய வேண்டிய கடன்களோ செய்ய் பிள்ளையே இல்லாதவங்களையும் போர் நடக்கும் இடத்திலிருந்து விலக்கி வைப்பர்
ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதை நாமெல்லாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம்.
ஒசாமாவின் அல்கொய்தா குறித்த சிறந்த வரலாற்றுப் பார்வையும் பதிவும் செய்திருக்கும் ப்ரிடிஷ் பத்திரிகையாளர் Glen Jenvey சொல்வதைச் சற்று கவனிக்கலாம் ( பார்க்க இந்த சுட்டி)
http://www.asiantribune.com/index.php?q=node/4518
சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் உச்சம் என அறியப்பட்ட அல்கொய்தா விடுதலைப் புலிகளின் வழி நின்று பயங்கரவாதம் செய்யும்
சங்கதியை அவர் தெரிவிக்கும் எச்சரிக்கை செய்தி.
இஸ்லாமிய உரிமை , ஜிகாத் எனும் பெயரில் அல்கொய்தா செய்வதும் தமிழ் தமிழர் எனும் பெயரில் புலிகள் செய்ததும் ஒன்றே... தீவிரவாதம்.
புலிகளையே இன்னும் தங்கள் காவலர்களாக ஏன் காவல் தெய்வங்களாக நினைக்கும் இலங்கை வாழ் தமிழர்களும் அவர்களுக்கு இங்கே ஆதரவுக் குரல் எழுப்பும் அன்பர்களுக்கும் மீண்டும் நினைவு செய்ய விரும்புவது
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் பரந்த கடற்பரப்பில் மட்டும் உப்பு கலந்திருக்கவில்லை. இந்தியா மனிதாபிமான அடிப்படையில் செய்த / செய்து கொண்டிருக்கும் அத்தனை உதவி நிவாரணத்திலும் உப்பு கலந்திருக்கிறது; அந்த உப்புக்கு எதிர்மறையாக நடந்து கொண்ட புலிகளுக்கு ஆதரவான குரல் இலங்கைத் தமிழரின் குரலில் கலந்திருக்கின்றதைக் கவனித்தே இருக்கின்றோம்.
அன்பின் வடிவமான பௌத்தத்தினையும் நாங்களே உங்களுக்கு வழங்கினோம். எங்களுக்கு பௌத்தம் மட்டுமே தரத் தெரியும் என நினைக்க வேண்டாம்
Wednesday, 8 June 2011
கலைஞருக்கு ஒரு கடிதம்

அன்பின் கலைஞருக்கு. வணக்கம். இது வரை நீங்கள் தான் பிறருக்கு கடிதம் எழுதி அது முரசொலியில் பதிவாகும் ஆனால் இன்றைக்கு நீங்கள் வெளியிட்ட ஓர் அறிக்கை இந்தக் கடிதம் எழுத தூண்டியது. இப்படி சங்கதிகளை நினைவு வைத்திருப்பதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்
அண்ணா ஹசாரே, பாப ராம்தேவ் இவர்களின் போராட்டங்கள், லோக் பால் மசோதா இவற்றையெல்லாம் குறிப்பிட்டு இன்றைய அறிக்கையில் 1973 ல் திமுக ஆட்சியில் இருக்கும் போது பொது ஊழியர் ஊழ்ல் தடுப்பு சட்டம் கொண்டு வந்ததை குறிப்பிட்டுள்ளீர்கள்;
அதுவும் எப்படி ஊழல் ஒழிப்பிலே தமிழகம் இந்தியாவுக்கு முன்னோடியாக இருக்கிறது என
ரொம்ப வாஸ்தவம் தான்
அந்த சட்டம் ஒட்டிய வரலாற்றினையும் கொஞ்சம் பார்க்கலாம்
டிசம்பர் 1973 நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது Tamil Nadu Public Men (Criminal Misconduct) Act, 1973 என்ற பெயரில் வந்த சட்டம் அது பின்னர் செப்டம்பர் 6 1977 அன்று அப்போதைய எம் ஜி ஆர் அரசால் ரத்தானது இதல்லாம் நீங்கள் மிகச் சரியாக நினைவில் வைத்திருப்பீர்கள்
கோதுமை பேர ஊழல் வழக்கில் தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது நீங்கள் வழக்காடீனீர்கள்... என்னவென்று ஒரு மாநில முதல்வர் பொது ஊழியரே இல்லையென அதற்காக உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று 20 பிப்ரவரி 1979 உச்ச்நீதிமன்றம் முழு பெஞ் உங்கள் வாதத்தினை ஏற்காது உங்கள் மனுவினைத் தள்ளுபடி செய்ததையும் நினைவில் வைத்திருப்பீர்கள். ஆனால் நீங்களாக வெளியில் சொல்ல மாட்டீர்கள்
உங்களைக் கடலில் தூக்கி போட்டாலும்.. என ஒரு சின்ன ப்ளாஷ் கலைஞர் தொலைக் காட்சியில் வரும் போதெல்லாம் இந்த வழக்கினையும் அதில் உங்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களையும் நினைத்துக் கொள்வேன். ஒரு மாநில முதல்வர் பொது ஊழியர் அல்ல எனும் வாதத்தினை இந்திய நீதி மன்றத்தில் ஒலிக்கச் செய்த பெருமையும் நமக்கு தானே
என்ன செய்வது அந்த 28 பக்க உச்ச நீதி மன்றத் தீர்ப்பு மிக நிரந்தரமான் சட்ட ஆவணம்
கூடா நட்பு மட்டும் கேடு தராது .. இப்படி மறக்க கூடா நிகழ்வுகளும் கேடு தரும்
அன்புடன்
மௌளீ
Sunday, 5 June 2011
தலைமைச் செயலகம் பார்ட் 4

இப்படியாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது என அப்போதைய ஜெ அரசு முடிவு செய்த இடத்தில் அமைய உள்ள கட்டிடத்தின் வடிவமைப்பினை தயார் செய்யும் நிறுவனத்தினை இறுதி செய்ய டென்டர் விடப்பட்டு அதில் ஆறு பேர் கலந்து கொண்டு அதில் சி.ஆர் நாரயண ராவ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அரசாணையும் வெளியடப்பட்டது .
பொதுப்பணித் துறை கட்டிடங்கள் பிரிவு அரசாணை எண் : 1184 நாள் 8 அக்டோபர் 2003
கட்டுமானப் பணிகள் தொடங்க இருந்த நிலையில் இந்த திட்டத்தினை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
இப்படி கட்டிடம் கட்டுவது சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலைப் புறக்கணிப்பதாக உள்ளது, ஏற்கனவே மஹாபலிபுரம் அருகே அரசு நிர்வாக நகரம் அமைக்க அரசு உத்தேசித்துள்ள நிலையில் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது ஒரு தற்காலிக முயற்சி இதற்கு இத்தனை செலவு தேவையா, உள்ளிட்ட பல கோணங்களில் பலர் இதனை நீதி மன்றத்தில் எதிர்த்தனர்
நீதி மன்றம் அரசு கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைக்க தடையேதும் இல்லை என சொல்லி மனுவைத் தள்ளுபடி செய்தது
ஆனாலும் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தினை ஜெ அரசு தொடரவில்லை
இதற்கு முன் இராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் அந்த கல்லூரியினை இடித்து விட்டு அங்கே தலைமைச் செயலக வளாகம் அமைக்கலாம் எனும் முந்தைய ஜெ அரசின் திட்டம் ( ?! ) குறித்துப் பார்க்கலாம்
1914 ம் வருடம் மதராஸ் பெண்கள் கல்லூரி எனத் தொடங்கப்பட்ட மிகப் பழமையானதொரு கல்வி நிறுவனம் சென்னைக் கடற்கரைக்கு எதிரே தமிழக காவல் துறை தலைமை அலுவலகத்தின் அருகே உள்ள இராணி மேரிக்கல்லூரி. இப்படியானதொரு சரித்திரப் புகழ்வாய்ந்த கட்டிடம் முந்தைய ஜெ அரசின் பார்வையில் விழுந்தது. தலைமைச் செயலகம் கட்ட இந்த வளாகம் தேர்வானது ; இருக்கும் கட்டிடம் இடிக்கப்படவும் ஆணை பிறந்தது
(தொடரும்)
கவர்னர் உரை 1
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜீன் 3 அன்று கவர்னர் ஆற்றிய உரையிலிருந்து இரண்டு அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த சிறிய தொடர் பதிவினை பகிர்ந்து கொள்ள உத்தேசிக்கின்றேன்
முதல் அம்சம் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டு மோனோ ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
அது என்ன மெட்ரோ அது என்ன மோனோ என கவனிக்கலாம். புரிந்து கொள்ளும் வசதிக்காக எளிமைப் படுத்தி சொல்வதெனில் ஒற்றைத் தண்டவாளத்தைக் கவ்வியபடி இயங்கும் ரயில் வண்டியினை மோனோ என சொல்லலாம். மெட்ரோ ரயிலுக்கும் சாதாரண ரயிலுக்கும் வித்தியாசமில்லை என சொல்லலாம். மோனோ என்பது 'ஒற்றை" என்பதைக் குறிக்கும் சொல். மோனோவோ மெட்ரோவோ இரண்டும் தரையில் இயங்குவதாலோ அல்லது உயரமாக்கப்பட்ட ப்ளாட்பாரத்தில் இயங்குவதாலோ வேறுபட்டதல்ல. தண்டவாளம் எனும் Rail தான் வித்தியாசம்
அமைய உள்ள மோனோ ரயில் மெட்ட்ரோ ரயிலுக்கான மாற்று என்பதாக கவர்னர் உரையில் தொனிக்கப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் தொடர்பான சில விபரங்களைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்
சென்னையில் தினசரி அதிகரித்துக் கொண்டே வரும் போக்குவரத்து தேவைகளைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் வடிவம் பெற்றது. இந்த திட்டம் ஏனைய போக்குவரத்து கட்டமைப்புகளான பேருந்து, நடைமுறையில் இருக்கும் சப் அர்பன் ரயில்கள், பறக்கும் ரயில் என செல்லமாக அழைக்கப்படும் எம்.ஆர்.டி எஸ் இவற்றுடன் தேவையான அளவு இன்டகெரெட் செய்துகொள்ளும் வண்ணமாக இருக்கும்படி வடிவம் கொண்டது
இந்த திட்டம் வடிவமைப்பு பெறும் ஆரம்ப கட்டத்திலேயே மோனோ ரயில் அமைப்பும் பரிசீலிக்கப்பட்டு மோனோ ரயில் அமைப்பு உத்தேசிக்கப்பட்ட தடத்தில் ஒரு மணி நேரத்தில் 10000 பயணியரை மட்டுமே சுமந்து செல்ல இயலும் ஆனால் மெட்ரோ ரயில் 30000 பயணியரை சுமந்து செல்ல இயலும் என்ற ஆய்வு முடிவின் காரணமாக மெட்ரோ ரயில் முறை தேர்வு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு Chennai Metro Rail Limited எனும் நிறுவனத்தினை கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து டிசம்பர் 3 2007 அன்று தொடங்கியது .
பின்னர் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு இரண்டும் சேர்ந்து நிர்வகிக்கும் நிறுவனமாக மாற்றப்பட்டது . மத்திய , மாநில அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பொறியியல் வல்லுநர்கள் இதன் தலைமை நிர்வாகப் பொறுப்பில் உள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஆலோசகராக அதாவது கன்சல்டன்ட்டாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்புக் கொண்டு அதற்கான முறையான நிர்வாக ஆவணங்களும் பதிவாகின.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு பகுதிகளாக நடைமுறைப் படுத்த திட்டம் வடிவமைக்கப்பட்டது இதனை காரிடார் 1 என்றும் காரிடார் 2 என்றும் பெயர் கொடுத்தனர்.
காரிடார் 1 : வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை 23.1 கி மீ தூரமுள்ள தடமாகவும்
காரிடார் 2 : சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து செயின் தாமஸ் குன்று வரை 22 கி மீ தூரமுள்ள தடமாகவும் திட்டமிடப்பட்டது
இரண்டு காரிடார்களிலும் தடம் தரைக்கு கீழேயும், உயர்த்தப்பட்ட தளத்தில் இயங்கும் வகையிலும் திட்டமிடப்பட்டது திட்டம் பொறியியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தயாரிக்கப்பட்டு நவம்பர் 7 2007 அன்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு அதன் பின்னரே சென்னை மெட்ரோ ரயில்
நிறுவனமும் அமைக்கப்பட்டது
இந்த திட்டத்தினை 28 ஜனவரி 2009 அன்று மத்திய அரசு அங்கீகரித்தது . திட்டத்தின் மொத்த மதிப்பீடு 14000 கோடி என மதிப்பிடப்பட்டு இதில் தமிழ் நாடு அரசும் மத்திய அரசும் கூட்டாக 41 % சதவிகிதம் ஏற்பது எனவும் மீத தொகையினை Japan International Cooperation Agency (JICA). கடனாக வழங்க சம்மதித்து . இந்திய அரசுக்கும் அந்த ஜப்பான் நிறுவனத்திற்கும் இடையே 28 நவம்பர் 2008 அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடன் ஒப்பந்தம் கையொப்பமானது
இந்த திட்டத்தினை செயல்படுத்த டென்டர் விடப்பட்டு கீழ்கண்ட நிறுவனங்களுக்கு
M/s. Soma Enterprise Limited
M/s Consolidated Construction Consortium Limited
M/s Tantia Construction Limited
M/s. Larsen & Toubro Limited (L&T)
M/S Transtonnelstroy-Afcons JV
M/S Metro Tunnelling Chennai L&T-SUCG JV
M/s Alstom Transport S.A & Alstom Projects India Ltd Consortium
M/S Gammon-OJSC Mosmetrostroy JV
M/S Siemens, AG and Siemens India Limited Consortium
M/S Voltas Ltd
THE Nippon Signal Co Ltd
M/S Emirates Trading Agency LLC, Dubai and ETA Engineering Private Limited, India Consortium
தரைக்கு கீழே உள்ள நிலையங்களுக்கு ஏர்கண்டிஷன் செய்வது, தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷின்கள் அமைப்பது பராமரிப்பது, குகைப் பாதைக்கான காற்று வசதி மற்றும்
வென்டிலேஷன் வசதி அமைப்பது பராமரிப்பது,சிக்னல் சிஸ்டம் அமைப்பது பராமரிப்பது, தண்ட்வாளங்கள் அமைப்பது பராமரிப்பு, ரயில் பெட்டிகள் வழங்குவது, மின்சார அமைப்புகள் அமைப்பு பராமரிப்பு இது போன்ற திட்டத்தில் தொடர்புடைய பல பணிகளுக்கு டெண்டர் மூலம் முடிவு செய்யப்பட்டு ஆர்டர் வழங்கப்பட்டு ஆங்காங்கே பணி நடைபெற்று வருகிறது
இந்த திட்டம் மாநில அரசின் திட்டம் மட்டுமல்ல மத்திய மாநில அரசுகளின் கூட்டு செயலாக்கம். அதன்றி ஜப்பானில் உள்ள நிறுவனம் மத்திய அரசிடம் செய்து கொண்ட கடன் ஒப்பந்தத்தின் மூலம் கடனாகப் பெறும் தொகையில் வடிவம் பெறும் திட்டம். மத்திய அரசும், ஜப்பானிய நிறுவனமும் திட்டத்தின் மதிப்பீடுகள், திட்டத்தில் தொடர்புடைய பொறியியல் , வருவாய், நிதி, முதலிய அம்சங்களை கவனத்தில் கொண்ட பின்பு தான் இதற்கான ஒப்புதலை வழங்கவும், உரிய முதலீட்டைச் செய்யவும் , கடனை வழங்கவும் சம்மதித்துள்ளன .
அப்படியான நிதியினை வழங்கியுமுள்ளன .
அதன் அடிப்படையிலேயே திட்டம் செயலாக்கம் பெற கட்டுமானம் மற்றும் பிற பணிகளுக்கு டென்டர் விடப்பட்டு பல உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்டர் பெற்று பணி தொடங்கியுள்ளன
இப்போது மெட்ரோ மோனோ ரயிலாகும் என்ற அறிவிப்பினால உண்டாகும் கேள்விகள்
1. மெட்ரோ ரயில் அமைப்பு முழுவதும் கைவிடப்பட்டு மோனோ என்பதாகுமா
2. அதே வழித் தடங்களா இல்லை புதியனவா
3. இந்த மாற்றத்திற்கு இந்த் திட்ட செயலாக்கத்தின் இணை பொறுப்பாளரான மத்திய அரசின் அனுமதி ஒத்துழைப்பு எவ்வாறு அமையும். காரணம் மத்திய அரசில் திமுக வகிக்கும் பங்கு
4. . தனது உத்திரவாதத்தின் மீது ஜப்பானிய நிறுவனம் வழங்கியுள்ள கடன் தொகைக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டாமா
5. ஆர்டர் பெற்று இது வரை பணி செய்துள்ள நிறுவனங்கள் என்ன செய்யும் ; தமிழக் அரசு என்பது ஜெயலலிதாவுக்கோ அல்லது கருணாநிதிக்கோ சொந்தமானதல்ல ; TamilNadu Government Functions in a Common Seal and has perpetual succession எனும் தார்மீக சட்டம் சார்ந்த கோட்பாடு அந்த நிறுவனங்களுக்குத் தெரியாதா
மெட்ரோ அல்ல மோனோ ரயில் எனும் மாறுதல் அறிவிப்பு வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல . அல்லது இரண்டு தண்டவாளம் அல்ல ஒரே தண்டவாளத்தில் இயங்கும் மோனோ ரயில் எனும் ஜஸ்ட் லைக் தட் அறிவிப்பும் இல்லை. இதனுடன் இணைந்து Engineering related Plans, நிர்வாகம், நிதி, வருவாய், மத்திய அரசு, அதனுடன் உறவு, அதன் முதலீடு, ஜப்பான் நிறுவனம், அது வழங்கிய கடன், வேலை தொடங்கிய கம்பெனிகள், அவற்றின் நிதி, வருவாய் என்பதன்றி சட்டம் சார்ந்த பல அம்சங்கள் கொண்டது.
காத்திருப்போம். இந்த புது (! ?) திட்டம் எத்தனை எதிர்ப்புகள சந்தித்த பின் வடிவம் பெற வேண்டும் என்பதை நினைக்கும் போது இன்னும் எத்தனை காலம். அந்த காலத்திற்கு இத்தனை தொகைக்கு என்ன வட்டி எனும் கேள்விகள் உதிக்கின்றன
(அடுத்த பதிவில்)
Saturday, 28 May 2011
தலைமைச் செயலகம் பார்ட் 3

தமிழக அரசுக்கான புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணியின் வரலாற்றினை சில முக்கிய ஆதாரங்களுடன் தொட்டுச் செல்லும் தொடர் பதிவு இது.
இந்த வரலாற்றினை பின்னோக்கிய பயணத்தில் கவனிக்கலாம்.
இப்போது அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எதற்கு அது தான் ஏற்கனவே ஜார்ஜ்
கோட்டையில் ஒன்று இருக்கும் போது புதிதாக ஒன்றை ஏன் கட்டினார்கள் என கேட்பவர்களுக்கு இந்த பின்னோக்கிய வரலாற்றுப் பயணத்தில் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியினைத் தெரிந்து கொண்டால் கொஞ்சம் விளக்கம் கிடைக்கலாம்.
புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலக இயங்க போதுமான இட வசதி இல்லை எனும் அவலத்தினை நானே பல முறை கண்டிருக்கிறேன்
அரசின் இணைச் செயலர் அந்தஸ்த்தில் பணியாற்றும் சில அதிகாரிகளின் அறைகள் வரான்டாவில் மரத்தால் தடுப்பு அமைக்கப்பட்டு இருப்பதை உங்களில் பலர் கவனித்திருக்கலாம். அந்த அளவுக்கு இடப் பற்றாக் குறை
ஜெ ஆட்சியில் 2003ல் செப்டம்பர் முதல் தேதி பொதுப்பணித் துறை (கட்டிடங்கள் பிரிவு) சென்னையில் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைக்க ஏற்பாடுகள் செய்திட அரசாணை வெளியிடுகிறது . அரசாணை எண் 1080
அந்த அரசாணையின் தொடக்க வரிகளை இங்கே அப்படியே தருகிறேன்
PUBLIC (BUILDINGS) DEPARTMENT
G.O. Ms. No.1080 Dated the 1st September, 2003
ORDER:-
The present Secretariat consists of the main building constructed in 1781 A.D. and the Namakkal Kavignar Maaligai constructed in 1975. The Namakkal Kavignar Maligai building was designed and constructed just as an office accommodation without any of the state-of-the-art facilities that are required of a modern Secretariat. The interior of the Namakkal Kavignar Maligai building has developed cracks and leakages at several places putting the staff to great difficulty in attending to their work. There is no space to put up any new building in the existing campus. In view of the major problem of shortage of space, structural defects and the lack of other facilities in the existing buildings of the Secretariat, the Government has been considering the construction of a new Secretariat Complex for some time past.
ஆக புதிய கட்டிடம் வேண்டும் எனும் தேவையைக் கருத்தில் கொண்டு இடம் தேடும் வேலை தொடங்கியது. புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் எல்லா வசதியும் இருப்பதாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அந்த கட்டிடம் அமைவதற்கு மத்திய , மாநில அரசின் எந்த ஒரு விதிய் மூலமும் தடை சொல்வதாக அமைந்துவிடலாகது என்பதில் அப்போதைய ஜெ
அரசு சற்று எச்சரிக்கையாக இருந்தது.( காரணம் அதற்கு முன்பு தான் சென்னை கடற்கரை சாலையில் இராணி மேரிக் கல்லூரியினை இடித்து விட்டு அங்கே தலைமைச் செயலக வளாகம் கட்டுவது என்ற முயற்சிக்கு நீதி மன்றத்திடம் கண்டனம் வாங்கியிருந்தது ஜெ அரசு. அந்த குட்டு வாங்கிய வரலாற்றினையும் இந்த தொடரில் பார்க்கத் தான் போகிறோம்)
இப்படி தேடியதில் கோட்டூர்புரத்தில் அரசு தகவல் மையத்தினை ஒட்டிய இடத்தில் அமைக்கலாம் என உத்தேசித்தார்கள்
அரசு ஆவணங்களில் சென்னை மாவட்டம் மைலாப்பூர் திருவல்லிக்கேணி வருவாய் தாலுகாவில் கோட்டூர் கிராமம் என அடையாளமிடப்பட்ட அந்த இடம் 43.20 ஏக்கர் இடப்பரப்பு கொண்டது. அரசு தகவல் மையம், சென்னை பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் என மூன்று அரசு அமைப்புகளுக்கு சொந்தமான இடப்பரப்பு அது
சென்னை பல்கலைக் கழகத்திற்கு சொந்தமானது 2.64 ஏக்கர்
அண்னா பல்கலைக் கழக்த்திற்கு சொந்தமானது 22.16 ஏக்கர்
தமிழக அரசின் தகவல் மையத்திற்கு சொந்தமானது 18.40 ஏக்கர்
அண்ணா பல்கலைக்க்ழகம், சென்னைப் பல்கலைக் கழக நிர்வாகம் அவர்களுக்கு சொந்தமான இடத்தினை தமிழக அரசுக்கு தலைமச் செயலகம் அமைக்க தருவதற்கு தேவையான தீர்மானங்களை நிறைவேற்றின
(இதன் தொடர்ச்சி தலைமைச் செயலகம் பார்ட் 4 ல்)
Thursday, 19 May 2011
புதிய துறை by புதிய அரசு
சிறப்புத் திட்டங்களை செயலாக்க(தேர்தல் வாக்குறுதி) தனி துறை என அறிவித்த முதல்வர் அந்த துறை உருவாக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு பன்னீர் செல்வம் அவர்களை நியமித்துள்ளார் இவர் 31 ஜனவர் 2005 லேயே ரிட்டயர் ஆய்ட்டார். இப்ப சர்வீசில் இருக்கும் 300 + தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் ஆபிசர்களில் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லையா விசேஷம் என்னவென்றால் ஏற்கனவே Planning, Development and Special Initiatives Department என ஒரு துறை கருணாநிதி காலத்தில் உருவாக்கி இன்னமும் இருக்கிறது .தலமைச் செயலர் அந்தஸ்த்தில் இருக்கும் திரு கிறிஸ்து தாஸ் காந்தி ஐஏஎஸ் அந்த துறைக்கான செயலர் அவர் தவிர சுர்ஜித் சௌத்ரி , இராஜாராமன் என இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தத் துறையில் செயலர் அந்தஸ்த்தில் இருக்காங்க ப்ளானிங் துறைக்கு ஓ பன்னீர் செல்வமும் ஸ்பெஷல் இனிஷியேட்டிவிஸ் துறைக்கு தொழில் துறை அமைச்சர் சண்முக வேலுவும் பொறுப்பு ஆக Planning, Development and Special Initiatives Department இரண்டு அமைச்சர்கள் இப்போது ஸ்பெஷல் இம்ப்ளிமெண்டேஷன் என ஒரு துறை இதே வேலையைச் செய்ய !!! அதற்கு ஒரு அமைச்சர் எஸ்பி வேலுமணி.. இந்த டிபார்மெண்ட் பார்மேஷனுக்கு 10 வருஷம் முந்தி ரிடயர் ஆன பன்னீர் செல்வம் ஐஏஎஸ் மீண்டும் அரசு பணிக்கு ரி கால் !!!!
Tuesday, 17 May 2011
கவர்னர் கவனிக்க மறந்தாரா

மே 13 அன்று வாக்கு எண்ணிக்கையில் திமுக தோல்வி அடைந்தது அப்போதைய முதல்வர் திரு கருணாநிதி கவர்னரிடம் தனது மற்றும் தனது அமைச்சரவை பதவி விலகல் கடிதத்தை அளிக்கிறார். அதனை ஏற்று கவர்னர், மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை அவரை முதல்வராகவும் அவரது அமைச்சரவையும் தொடரட்டும் என சொல்கிறார்
இதற்கான கவர்னரின் கடிதத்தினை இந்த சுட்டியில் காண்க http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr13May11/pr130511_46.pdf
தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியான பின்பு தேர்தலில் வெற்றி பெற்ற அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான அதிமுக தனது சட்ட மன்ற கட்சித் தலைவராக ஜெ வை 15 மே 2011 அன்று தேர்வு செய்கிறது. அன்றே அவர் ஆட்சி அமைக்கும் உரிமையினை கவர்னரை சந்தித்து கோருகிறார். அவரை ஆட்சி அழைக்க கவர்னர் அழைக்கிறார். ஜெ. சீஃப் மினிஸ்டர் டெசிக்னேட் அல்லது சீஃப் மினிஸ்டர் எலெக்ட் ஆக அந்தஸ்து பெறுகிறார்.. கவனிக்க அவர் அந்த தருணத்தில் முதல்வர் இல்லை ( அப்போதும் முக தான் முதல்வர்) . அன்றே தன்னுடன் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளவர்கள் பட்டியலை இலாகா ஒதுக்கீடு உட்பட கவர்னரிடம் வழங்குகிறார். அதனை பரிந்துரையாக ஏற்று ( கவனமாக பார்க்கவும் பரிந்துரையாக) கவர்னர் ஒப்புதல் வழங்குகிறார்
கவர்னரின் ஒப்புதல் செய்தி வெளியீடு சுட்டி :http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr15May11/pr150511_274.pdf
இதில் என்ன என கேட்பவர்களுக்கு
மாநில அமைச்சரவையில் அமைச்சர் நியமனத்துக்கான வழி முறை குறித்து இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது
ஷரத்து 164(1)
164. (1) The Chief Minister shall be appointed by the Governor and the other Ministers shall be appointed by the Governor on the advice of the Chief Minister, and the Ministers shall hold office during the pleasure of the Governor
ஆக அமைச்சர்கள் நியமனத்துக்கு கவர்னர் முதலமைச்சரின் பரிந்துரையினைத் தான் ஏற்க வேண்டும் ஆனால் சீஃப் மினிஸ்டர் டெசிக்னேட் அல்லது சீஃப் மினிஸ்டர் எலக்ட் பரிந்துரையினை ஏற்று இருக்கிறார்; அவர் பரிந்துரை ஏற்கும் போது முக தான் முதல்வர்; மிகச் சரியாக சொல்ல வேண்டுமெனில் இந்த விஷயத்தில் சட்டப்படி முதல்வர் அல்லாத ஒருவரிடம் பரிந்துரை பெற கவர்னருக்கு அதிகாரம் இல்லை
இதை எப்படி நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டுமெனில். முதல்வராக பதவி ஏற்க அழைத்து அதன் பின் ஜெ முதல்வராக பதவி ஏற்று அந்த கணமே அவரிடம் பரிந்துரை வாங்கி உடனே மற்ற அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திர்க்க வேண்டும்
சின்ன சறுக்கல் தான் ஆனாலும் தவிர்த்து இருக்கலாம்
புரட்சித் தலைவி காணவில்லை

தலைப்பினைக் கவனித்து விட்டு யாரும் பதற வேண்டாம்.
அடை மொழிக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு
இராஜாஜி அவர்களை மூதறிஞர் என்றும் அவரின் இனிய நண்பர் ஈ.வெ.ரா அவர்களைப் பெரியார் என்றும் அவர் வழி வந்த அண்ணாவை அறிஞர் என்றும், அவரைத் தொடர்ந்த கருணாநிதியைக் கலைஞர் என்றும் அவர் நண்பர் இராமசந்திரனை தொடக்க காலத்தில் புரட்சி நடிகர் என்றும் பின்னர் புரட்சித் தலைவர் என்றும், அவர் அறிமுகம் செய்த ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்றும் அடை மொழி கொடுத்து மகிழ்ந்திருக்கிறது தமிழ்நாடு.
முன்பு முதல்வராக இருந்த சமயம் ஜெ புரட்சித் தலைவி எனும் அடை மொழியாலேயே விளிக்கப்பட்டார் ஏன் துதிக்கப்பட்டார் என்றே சொல்லலாம். சட்ட மன்றத்தில் ஒவ்வொரு துறை அமைச்சரும் துறை தொடர்பான செய்திகளையோ விவாதத்தையோ அவையில் தொடங்குவதற்கு முன்பு புரட்சித் தலைவி பெயரில் சற்றேறக் குறைய ஒரு காப்பு செய்யுள் படித்து விட்டு தான் தொடங்கினர்.
ஒன்றை மறக்காமல் குறிப்பிட வேண்டும் ; இந்த துதி கலாச்சாரத்தினை தொடங்கிய பெருமை கருணாநிதியினைச் சாரும். அவரின் பழைய காலத்தில் தமிழ் வேள்,, எக்ஸ்சட்ரா... அவர் சமீபத்தில் முதல்வராக இருந்த போது “காப்பு செய்யுள் “ கலாச்சாரத்தின் எல்லையினை அவரது உடன்பிறப்புகள் தொட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.. அடை மொழிக்கு வள்ளுவர் தொடங்கி அரிஸ்டாட்டில் வரை இழுத்து வந்தார்கள்
இதற்கு முந்தைய ஜெ ஆட்சி காலத்தில் எங்கு நோக்கினும் “புரட்சித் தலைவி” அரசு விழா, அழைப்பிதழ், தோரணங்கள் என எங்கும் சர்வ வியாபியாக புரட்சித் தலைவி
ஆனால் இந்த புதிய ஆட்சி காலத்தில் அடை மொழி காணப்படவில்ல . புரட்சித் தலைவி காணவில்லை. அமைச்சர்கள் முதல்வர் அம்மா என்பதாய் மட்டுமே உரைக்கின்றனர். ஜெயா தொலைக் காட்சியும் செல்வி . ஜெயலலிதா என்பதாக மட்டுமே விளிக்கின்றனர்
புரட்சித் தலைவி காணவில்லை என்பது நன்மையே அவருக்கும் அவரைச் சார்ந்தவருக்கும்
Monday, 16 May 2011
தலைமைச் செயலகம் - பார்ட் 2

தலைமைச் செயலகம் எனும் எனது பதிவினை ஒரு சிறு தொடர் பதிவாக தொடரப் போகின்றேன்.
எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா, கருணாநிதி இவர்கள் ஆட்சிக் காலங்களில் புதிய வளாகத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த தகவல்களுடன் எழுத யோசித்து விபரங்கள் சேகரித்துள்ளேன்
அடுத்த பகுதி தலைமைச் செயலகம் - பார்ட் 3
Sunday, 15 May 2011
எதிர் கட்சி தலைவர்

எந்த ஒரு சட்ட மன்றத்திலும் எதிர் கட்சி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். அந்தஸ்து நிலையில் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் ஒரு அமைச்சருக்குரிய அந்தஸ்த்தை உடையவராகிறார். சட்ட மன்ற வளாகத்தில் அவருக்கென தனியறை , உதவியாளர்கள், அரசு வாகனம், அரசு இல்லம் அனைத்தும் வழங்கப்படுகிறது
இப்போது அமைய உள்ள 14 வது சட்ட மன்றத்தில் தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் எதிர் கட்சித் தலைவராக உள்ளார்.
இதுவரை அமைந்து இருந்த 13 சட்ட மன்றங்களில் எதிர் கட்சித் தலைவராகப் பணியாற்றியவர்கள் பற்றிய இந்த சிறு குறிப்பினையே விஜய்காந்துக்கு வாழ்த்துகளாக தெரிவிக்கிக்கிறேன்
முதல் சட்ட மன்றம் 1952 முதல் 1957 வரை :
இந்த காலத்தில் சட்ட மன்றம் இரண்டு பெரும் கம்யூனிசத் தலைவர்களை எதிர்கட்சிகளாகக் கொண்டிருந்தது. திரு டி நாஹி ரெட்டி அக்டோபர் 1 1953 வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். மார்க்ஸிய கோட்பாடுகள் மீது பற்று கொண்டவர்
பின்னர் தோழர் பி. இராமமூர்த்தி அந்த பொறுப்பினை அலங்கரித்தார். மார்க்ஸிய சிந்தாந்தப் பற்றாளர்களில் மிகக் குறிப்பிடத் தக்கவர் பி.இராமமூர்த்தி. இவர் சட்ட மன்றத்திற்கு தேர்வாகும் போது சிறையில் இருந்தார்
இரண்டாவது சட்ட மன்றம் : 1957 முதல் 1962 வரை
விகே இராமசாமி முதலியார் ; இவர் காங்கிரசாராயினும் சுயேச்சையாக சட்ட மன்றத்திற்கு உத்திரமேரூரிலிருந்து தேர்வானவர். அப்போதைய சட்ட மன்றத்தில் திமுகவுக்கு 16 உறுப்பினர்கள் இருந்த நிலை. அவர்களே எதிர் கட்சி அந்தஸ்த்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால் மறுமலர்ச்சி காங்கிரஸை ஆதரித்த விகே இராமசாமி முதலியார் அதன் சார்பாக மாறி எ க தலைவரானார்
மூன்றாவது சட்ட மன்றம் 1962 முதல் 1967 வரை
எதிர் கட்சித் தலைவர் இரா நெடுஞ்செழியன்: முதல்வர் பதவிக்கான போட்டிகளில் மிகச் சுலப்மாகத் தோற்றுப் போனவர்
நான்காவது சட்ட மன்றம் 1967 முதல் 1971 வரை
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பில் முதன் முதல் அமர்ந்த கால கட்டம். அண்ணா அவர் மறைவுக்குப் பின் கருணாநிதி என்ற இரண்டு முதல்வர்களில் காலம். இதில் எதிர் கட்சித் தலைவர் பி ஜி கருத்திருமன்
ஐந்தாவது சட்ட மன்றம் 1971 முதல் 1976 வரை
திரு கருணாநிதி முதல்வராக இருந்த காலம். எதிர் கட்சித் தலைவர் பொன்னப்ப நாடார்
ஆறாவது சட்டமன்றம் 1977 முதல் 1980 வரை
திரு கருணாநிதி எதிர் கட்சித் தலைவர்
ஏழாவது சட்ட மன்றம் : 1980 முதல் 1984 வரை
சில காலம் திரு கருணாநிதியும் பின்னர் ஹாஜா ஷெரிஃப்ம் எதிர்கட்சித் தலைவர்கள்
எட்டாவது சட்ட மன்றம் 1985 முதல் 1988 வரை
ஓ. சுப்பிரமணியன் எதிர் கட்சித் தலைவர்
ஒன்பதாவது சட்ட மன்றம் 1989 முதல் 1991 வரை
செல்வி ஜெயலலிதா, எஸ் ஆர் இராதா, கருப்பையா மூப்பனார் என மூவர் இந்த பொறுப்பில் இருந்த காலம்
பத்தாவது சட்ட மன்றம் 1991 முதல் 1996 வரை
எஸ் ஆர் பாலசுப்ரமணியன் எதிர் கட்சித் தலைவர்
பதினோராவது சட்ட மன்றம் 1996 முதல் 2001
எதிர் கட்சி தலைவர் சோ பாலகிருஷ்ணன்
12 வது சட்ட மன்றம் 2001 முதல் 2006 வரை
எதிர் கட்சி தலைவர் க அன்பழகன்
13 வது சட்ட மன்றம் 2006 முதல் 2011 வரை
ஓ பன்னீர் செல்வம், செல்வி ஜெயலலிதா என எதிர் கட்சித் தலைவர் இரண்டு முன்னாள் முதல்வர்களால் அலங்கரிக்கப்பட்ட காலம்
இந்த விபரத்திலிருந்து கேப்டன் ஒன்றைக் கவனிக்கவும் எதிர் கட்சி தலைவர் பதவியில் இருந்தவர்கள் முதல்வராகவும் முதல்வராக இருந்தவர்கள் பின்னர் எதிர் கட்சித் தலைவராகவும் இடம் மாறியுள்ளனர்
ஆல் தி பெஸ்ட் கேப்டன்
Saturday, 14 May 2011
தலைமைச் செயலகம்

12 மே 2007 அன்று சட்ட மன்றத்தில் நடைபெற்ற தனது சட்ட மன்ற பொன் விழாப் பேருரையில் தமிழக்த்துக்கென புதிய சட்ட மன்ற வளாகம் அமைப்பதற்கான அறிவிப்பினை திரு கருணாநிதி வெளியிட்டார். அதனைத் செயல்படுத்தும் விதமாக உரிய அரசாணை பொதுப்பணித் துறையால் 04 ஜூலை 2007 அன்று வெளியானது . அரசாணை எண் 209. அதன் படி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்
சுமார் எட்டு லட்சம் சதுர அடிப் பரப்பில் சுமார் 200 கோடி செலவில் சட்ட மன்ற வளாகம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது . அதன் படி புதிய வளாகத்தில் சட்ட மன்றம், முதல்வரின் அறை/ அலுவலகம், பிற அமைச்சரின் அறைகள், தலைமச் செயலர் அறை/ அலுவலகம், உள்துறை நிதி போன்ற முக்கிய துறைச் செயலர்களின் அறைகள் அலுவலகங்கள் அமைக்க்க ஆணையிடப்பட்டது
பணியினைத் தொடங்க ஏதுவாக பொதுப்பணித் துறை தலைமப் பொறியாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்திட அரசு 5 நவம்பர் 2007 அன்று அரசாணை வெளியிட்டது . இதன்படி அந்தக் குழு இந்த கட்டிடப் பணிக்கான டென்டரை இறுதி செய்யும் குழுவாகவும். கட்டிட வடிவமைப்பினை இறுதி செய்யும் குழுவாகவும் அதிகாரம் கொண்டதாக ஆக்கப்பட்டது
இந்த உயர் நிலைக் குழு கட்டிட வடிவமைப்புக்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களை பரிசீலித்து ஜி.எம்.ப் இன்டர்நேஷனல் எனும் ஜெர்மன் நிறுவனத்தை அங்கீகரித்து அதனை ஆர்கிடெக்சுரல் பணிக்கான கல்சல்டன்டாக அங்கீகரித்தது
அரசாணை எண் 371 பொதுப் பணித் துறை நாள் 10 டிசம்பர் 2007ன் படி அரசு செயலர்கள் கொண்ட குழுவினை அமைத்து அந்தக் குழு கட்டிடப் பணியில் பொதுப்பணித் துரையின் கட்டிடப் பிரிவு தலைமப் பொறியாளருக்கு ஆலோசனை வழங்கிட ஆணையிட்டது
26 மார்ச் 2008 அன்று முதல்வர் கருணாநிதி தலைமையிலான கூட்டத்தில் இந்த வளாகத்திலேயே தலைமைச் செயலகத்தினை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு அதன் பின்பு அதன் வழியே பணிகள் தொடங்கப்பட்டு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பிரதமர் கலந்து திறப்பு விழா நடைபெற்று .. சட்ட மன்ற கூட்டத் தொடரும் நிகழ்ந்து கவர்னர் உரை நிகழ்த்தப்பட்டு அங்கே தலைமைச் செயலகப் பணிகள் இயங்கத் தொடங்கின.
ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த தொன்மையான சட்ட மன்ற பேரவை கூடம் , அதுவரை சென்னை காமராஜர் சாலை பாலாறு கட்டிடத்தில் இயங்கிய மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் நூலத்தின் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்டமன்ற செயலக ஆணை எண் 90 நாள் 02 ஜூன் 2010ன் படி ஆணையிடப்பட்டு அந்த நூலகம் அங்கே செயல்படவும் தொடங்கியுள்ளது
ஆனால் தற்போது ஆட்சி அமைக்க உள்ள செல்வி ஜெயலலிதா அவர்கள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள் புதிய சட்ட மன்ற வளாகத்தினையும் தலைமைச் செயலக வளாகத்தினையும் பயன்படுத்தப் போவதில்லை எனவும் பழைய படி இவற்றினை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்கே இட மாற்றம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன
புதிய கட்டிடங்கள் இனி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு காலத்திற்கு கிடப்பிடலிடப்படுமா
காரணம் வெகு சிம்பிள் : இந்தக் கட்டுரையின் முதல் வரியினைப் மீண்டும் படிக்கவும் காரணம் தெரிந்து விடும்
செலவு சுமார் 430 கோடி
எல்லாம் குடியரசே
முரசொலி கவிதை

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த 'சுப வேளை'யில் மிக மும்முரமாக அலுவல் பணியில் ஈடுபட்டிருந்தேன். அவ்வப்போது இணையத்தின் உதவியில் செய்திகளைக் கவனித்து வந்தேன். மாலை எந்த போக்குவரத்து சிக்னலிலும் சிக்காமால் ஒரு சின்ன ஆச்சர்யத்தை வியந்து கொண்டே இல்லம் திரும்பினேன். என்னை திமுக அனுதாபியாக உருவகம் செய்து வைத்திருந்த அண்டை வீட்டார், 'என்ன சார் உங்க ஐயா தோத்துட்டார் போலிருக்கே" என வர வழைத்துக் கொண்ட சோகம் கப்பிய முகத்துடன் விசாரித்தனர். எனக்கே உரித்தான பாவனையில் ,'ஏதோ உங்க அம்மா செய்த புண்ணியம்' என பதில் சொல்லி இல்லம் புகுந்தேன்.
இரவு உணவுக்குப் பின் வழக்கமாகப் பழகும் அந்த நாளைய சிந்தனைத் தொகுப்பு பயிற்சியினை ”உங்க ஐயா !!! உங்க அம்மா !!! “ எனும் சொற்றொடரின் பின் புலச் சிந்தனைகள் வெட்டிக் கொண்டே இருந்தன.
அரசியல் நிகழ்வுகளில் நாம் கொள்கைகளாகப் பிரிந்துள்ளோமோ எனில் சந்தேகம் தான். காரணம் அந்தக் கொள்கைச் சொந்தக்காரர்களுக்கே அவற்றின் மீது எத்தனை விழுக்காடு நம்பிக்கையும் பற்றும் இருக்கும் என்பது சந்தேகம். ஆனாலும் அந்த சொந்த்க்காரர்களை ரசித்து விட்ட காரணத்தால் அவர்களின் அபத்த பயணங்களில் நாமும் பயணமாகி நம் இலக்கைத் தொலைக்கின்றோம். பார்த்தால் மொத்த வாக்காளர்களும் இலக்கைத் தொலைத்த கூட்டம் போல் தான் தெரிகிறது. பயணத்தின் இறுதியில் நாம் இலக்கு மாறி பயணித்திருப்பது தெரிகிறது. அடுத்த நிகழ்வுக்கு காத்திருந்து பயணிக்கும் போதும் இது மறுபடி நிகழ்கிறது
இந்த சிந்தனை ஓட்டம் துறந்து எனது புத்தக அலமாரியை நாடினேன்
மெக்காலேவின் கவிதைகள் "இதோ நான்" எனச் சொல்வது போல் இருந்தது; புத்தகம் சேகரித்து பக்கங்களைப் புரட்டினேன்
Idealised Rome குறித்த வரிகள்
Then None was for a party
Then all were for the state
Then great man helped the poor
and the poor man helped the great
Then lands were fairly portioned
Then spoils were fairly sold;
The Romans were like brothers
In the brave days of Old
இதை தமிழில் மொழி பெயர்ப்பது அவசிய்மில்லை என நினைக்கிறேன்
இப்போதும் அந்த கவிதை என்னுள் முரசொலித்துக் கொண்டிருப்பதால் தலைப்பை இப்படி வைத்தேனல்லாது வேறு காரணம் ஏதுமில்லை
Subscribe to:
Posts (Atom)

