Wednesday 1 February 2012

"எனக்கும் "பத்ம" விருது"-2

ராத்திரி படுக்கும் போது தலைமாட்டில் தண்ணீர் பாட்டில் இருக்கும். தாகமெடுத்தால், எழுந்து போய் ஃப்ரிட்ஜ் திறந்து தாகம் தணிப்பது ரொம்பவுமே தூக்கம் கலைக்கும் சமாச்சாரமாக இருக்கிறது.

அன்றைக்கு படுத்த வாக்கிலேயே பின்புறம் கை நீட்டினால் பாட்டில் அகப்படவில்லை. ஆனால் ஜரிகை வஸ்திரம் கைக்குப் படுகிறது. வெறும் துணி மட்டுமில்லை அதை உடுத்திக் கொண்டிருக்கின்ற ஆளும் கையால் நான்றாக ஸ்பரிசம் ஆகிறது

பக்கத்துப் படுக்கையில் பார்க்கிறேன். மனைவி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்காள்

அப்படியானால் இது யாரு

இப்போது வஸ்திரம் தரித்திருந்தவர் பேசலானார்

"என்னப்பா தேடறே. இந்தா தண்ணி பாட்டில்"

பேசுவதா, பேசினால் பெண்டாட்டி முழித்துக் கொண்டு "ஒஹோ முழிச்சிண்டு இருக்கும் போது பொஸ்தகம் படிச்சிண்டே தனக்கு தானே பேசிக்கிற பழக்கம் மட்டும் தான் உண்டுனு நினைச்சேன். தூக்கத்திலே பேசும் வியாதியும் இருக்கா" எனக் கேட்கும் வாய்ப்பு இருக்கிறது. முதலில் இது கனவா இல்லை நிஜமாவே சர சரனு ஜரிகை வேஷ்டி கட்டிண்டு இங்கே தலைமாட்டுல ஒருத்தர் உட்கார்ந்திருக்காரா

அது வேஷ்டி தான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு யோசித்தேன். இந்தா தண்ணி பாட்டில் என்று சொன்னது ஆண் குரல்

எதற்கும் இருக்கட்டும் எனக் கேட்டு வைத்தேன். "யார் நீங்க..பூட்டிருக்கும் வீட்டுக்குள் அதுவும் தாண்டி பூட்டிருக்கும் பெட்ரூமிலே எப்படி நுழைஞ்சீங்க. யார் நீங்க"

"நீ தான் வாசலில் நின்னுன்டு என்னை அழைச்சே"

"எப்ப"

"இன்னிக்குதான்.. வெங்காய சட்னியை சப்பு கொட்டி தோசையிலே தொட்டுத் தின்னுட்டு வாசலிலே நின்னுன்டு இன்னும் ரென்டு தோசை சாப்பிடலாம் போலிருக்குனு யோசிச்சிண்டே . கண்ணா Please cut it down அப்படினு கேட்டாய்"

எழுந்து உட்கார்ந்து திரும்பினேன்.

இப்போது அந்த மனுஷன் தன்னை சுற்றி ஒருவிதமாக லைட் போட்டுக் கொண்டு காட்டிக் கொண்டார்

அய்யய்யோ சாட்சாத் பரந்தாமன் க்ருஷ்ணன். தலைலே மயில் பீலி, கையிலே புல்லாங்குழல். நீலக் கலர் திருமேனி.

"ஸ்வாமி .. என்னது இது நீங்க தானா நிஜம் தானா.. என் தலை மாட்டிலே வந்து உட்கார்ந்துண்டு பாட்டிலிலே தண்ணி இந்தானு நீட்டிட்டு இருக்கேள்"

"ஏம்பா இப்படி சத்தமா பேசற.. உன் ஆத்துக்காரி முழிச்சிக்கப் போறா.. வரியா வெளிலே போய் பேசலாம்"

"இந்தப் பனில வெளில வந்தா எனக்கு குளிரும்"

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. வா போகலாம்"

"முதல்ல என்ன சமாச்சாரம்னு சொல்லுங்கோ.. இந்த நேரத்துல் மாம்பலத்துல டீ கடை கூட திறந்திருக்காது.. போலிஸ் ரோந்து வேன்லே சுத்திண்டு இருப்பா"

"காரணம் சொன்னாத்தான் வருவியா.. Will , an amorphous force that eludes human knowledge and consume all its manifestations " .. என்று சொல்லிட்டு சிரிக்கிறான்

"இதோ ஸ்வெட்டர் மாட்டிண்டு வரேன்.. manifestation அப்படினு நீ சொன்ன பின்னாலே தான் சொடேர்ங்கிறது.. நீங்க தான் சரியானவர் இந்த eternal recurrence சங்கதிக்கு"

"சரி சரி சீக்கிரம் வா.. ஆமாம் யார் பத்ம ப்ரியா"