Friday 27 January 2012

எனக்கும் "பத்ம" விருது

நேற்றைக்கு பேப்பரில் முதல் பக்கததில் பத்ம அவார்ட்ஸ் படத்துடன் தொடங்கியது. இன்னாருக்குக் கொடுத்திருக்கலாம் என்பதான அபிப்ராயங்கள் ஆங்காங்கே அலசப்பட்டன

வழக்கமாக மாம்பலத்தில் பகல் 2 மணிக்கு கரண்ட் நின்று 3 மணிக்கு வரும். விடுமுறை தினமாதலால், ஒரு மணிக்கே சாப்பிட்டு விட்டு, தூக்கத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். கையில் கிண்டில், இன்னொரு பக்கம் இந்த லாப்டாப், வழக்கமாக சில புத்தகங்கள். இரவு எட்டு மணிக்கு டி வி தரமாட்டோம் வேட்டையாடு விளையாடு பார்க்க வேண்டும் என்பதான ரிசர்வேஷன் குரல்கள்.

அந்த சமயத்தில் எனக்கும் ஒரு பத்ம அவார்ட் கிடைத்தது

ஃபேஸ் புக் இன்பாக்சில் ஒரு தகவல் இருக்கிறது படி என்றது சிவப்புக் கலரில் 1

திறந்தேன்

Can you explain "Nietzsche's Eternal Recurrence Theory" ? Can it be correlated to Indian Philosophy?

Was reading Jeyamohan's "Jagan Mithyai" in Thisaikalin Naduvae Collection, so got interested to know more about it from you.

என்று ஒரு தகவல்

நான்,

சொல்றேன்.. ஆனால் chat ல் சொன்னால் சுவையிருக்காதே.. ஞாயிறு அன்றைக்கு அழைத்துப் பேச இயலுமா. நீங்க என்னை அழைச்சாலும் ஓகே தான். 98406-56627

என்று பதில் அனுப்பினேன்

அங்கிருந்து

Neenga unga profilela pottelnale santhosham thaan.... I have big group of friends with whom I can share your writings.They all love ur writings, I often share urs in my group.


செய்தி அனுப்பியது பத்ம ப்ரியா

இதனையே எனக்கு வழங்கிய பத்ம அவார்ட் என சந்தோஷிக்கிறேன்

அப்பா சொல்லித்தான் முதலில் நீட்ஷே படிக்கத் தொடங்கினேன். அதுவும் எங்கே வைத்து என்கிறீர்கள். பெருவுடையார் ஆலயம் என அறியப்படும் ஆவுடையார்கோவிலில் வைத்து படிக்க ஆரம்பித்தேன்

திருவாசகத்தில் ஆனந்தத்து அழுத்தல் என 10 பாடல்களில் ஒரு பாடல் ஞாபகத்துக்கு வருகிறது

நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை
யேய வாக்கினால்
தினைத்த னையு மாவ தில்லை சொல்ல
லாவ கேட்பவே
அனைத்து லகு மாய நின்னை ஐம்பு
லன்கள் காண்கிலா
எனைத்தெ னைத்த தெப்பு றத்த தெந்தை
பாத மெய்தவே.


உலகம் அனைத்திலும் அவனே இருக்கிறான் அவனை அடைய மனம், ஐம்புலன்கள் , வாக்கு இவை உதவுமா என்றால் இந்த அந்தகரண introvert சங்கதிகள் கூட பிரபஞ்சத்தில் இருக்கும் சாதாரண மெட்டீரியலை நுகர்வதற்கே பயனாகின்றன. காரணமான பரமனை வழிபடுவதற்கு அவை கொஞ்சம் கூட பயன் தரமாட்டா

பத்ம ப்ரியாவிற்கு: நீங்கள் கேட்டது அவசியம் எழுதுகிறேன்.. இன்றைக்கு லேசாக மாணிக்கவாசகனை வைத்து Eternal Recurrence, ஜஸ்ட் தொடங்கி வைக்கிறேன். சில தினங்களில் விரிவாக எழுதுகிறேன்

Wednesday 11 January 2012

தாஜுதீன்


இன்றைக்கு என் பெண் தனது ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் முடித்துக் கொண்டு மைசூர் எக்ஸ்பிரசில் வந்தாள்

அவளை ஸ்டேஷனில் இருந்து அழைத்துக் கொண்டு வருவதற்காக காலை ஆறுமணிக்கெல்லாம் ஸ்கூட்டரில் நானும் என் மனைவியும்

கிளம்பினோம். நல்ல பணி. ஹிகின்பாதம்ஸ் சமீபத்தில், அந்த கணத்துக்காக காத்திருந்தாற் போல பின் சக்கர ட்யூபின் மௌத் படீரென விட்டது. வண்டி நிலை தடுமாறி பூம்புகார் தாண்டி இடப்புறம் ப்ளாட்பாரம் ஒட்டி நிறுத்தினேன். வந்த ஆட்டோவை வழி மறித்து நிறுத்தி,
மனைவியை சென்ட்ரலுக்கு அனுப்பி விட்டு, பஞ்சர் ஒட்டும் வழியினை யோசித்தேன்

அந்த வயதானவர் அழைத்தார், " தம்பி பக்கத்துல பஞ்சர் கடை இருக்கு . நீங்க இங்கேயே இருங்க நான் போய் அந்தாளை கூட்டிட்டு வரேன்"

மூடப்பட்ட கடையொன்றின் வாசல்படி பளபளப்பான மொசைக்கில் இருந்தது.உட்கார்ந்தேன். ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் போது படிக்கலாம் என எடுத்துப் போன 'தாயர் சன்னதி' பிரித்தேன்.

அந்தப் பெரியவர் திரும்ப வந்து விட்டார், ' அந்தப் பையன் இப்பதான் கடை திறந்திட்டு இருக்கான். சொல்லிட்டு வந்திருக்கேன். இப்ப வந்துருவான்.. டீ சாப்பிடறீங்களா"

பர்ஸ் பிரித்து பணம் எடுத்துக் கொடுத்து, 'நீங்களும் டீ சாப்பிடுங்க"

இரண்டு பேப்பர் கப்பில் டீ வாங்கி வந்தார். "அது என்னங்க புத்தகம்" . அவரிடம் புத்தகம் தந்தேன்.

'இவரு திருநெல்வேலிக் காரரா'

"எப்படி சொல்றீங்க"

'அவங்க தான் திருநவேலி னு சொல்வாங்க.. இந்தியாவிலே முதல் முதலா கொடும்பாவி எரிச்சது யார் தெரியுமா"

இப்போது பஞ்சர் கடைப் பையன் பின் சக்கரத்தைக் கழற்றிக் கொண்டிருந்தான்

'நீங்க சொல்லுங்க"

'அக்பர் சக்ரவர்த்தி தான். மதன் எழுதின வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்திலே கிட்டத்தட்ட நடுவிலே படம் கூட வரைஞ்சிருக்கும்..நீங்க படிச்சிருக்கீங்களா

இப்படித் தொடங்கி, அக்பரைப் பற்றி இன்னும் ஏராளமான விபரங்களைச் சொல்லிக் கொண்டே , அதைத் தொடர்ந்து கபாலீசுவரர் கோவிலுக்கு நிலப் பட்டா, தீன் இலாஹி, தன்னுடைய சௌதி பயணம், மெக்கா மசூதி வரலாறு, அங்கே பாலைவனம் எப்படி யாத்திரிகர்களுக்கு இடைஞ்சல், அங்கே இருக்கும் பேரிச்சைக்கும் இங்கே இந்திய பேரிச்சைக்கும் இருக்கும் வித்தியாசம் , பாலஸ்தீன வரலாற்றினை பா. ரா அவர்களின் நிலமெல்லாம் ரத்தத்திலிருந்து மேற்கோள், தேசிங்கு ராஜன் சம்பந்தமாக கன்னிமரா பழைய லைப்ரரியில் இருக்கும் இரண்டு புத்தகங்கள்.. மீண்டும் சௌதிக்கு திரும்பிய அவரது பேச்சு அங்கே இருக்கும் ஆடுகளுக்கு எப்படி தீனி போடுவார்கள். அங்கே கொய்யா எப்படி விளைவிக்கின்றார்கள். மௌன்ட் ரோடில் சில வருஷங்களுக்கு முன்பு இருந்த ட்ராபிக்.. கெட்டி பொம்மு பத்தின நாட்டுப் பாடல், 'வெல்லுவதற்காக கொல்லுதல் ' நடந்தது எனும் அந்த கால கலக நியாயம்'

பையன் பஞ்சர் பார்த்து சக்கரத்தைப் பொறுத்திக் கொண்டிருந்தான்

அவனுக்கு பணம் தந்து விட்டு கிளம்பும் முன்பு, 'உங்க பேர் என்னங்க'

"தாஜுதீன்'

'என்ன வேலை செய்றீங்க'

'நிரந்தரமா ஏதும் இல்லீங்க தம்பி.. இங்கே இருக்கும் எல்லா பிரியாணி ஓட்டலிலும் வேலை பார்ப்பேன்.. காசு தருவாங்க சோறு போடுவாங்க.. ராத்திரியான பூம்புகார் வாசலிலே படுத்துக்குவேன். கால்ல நல்லா அடிபட்டிருக்கு ரொம்ப வலிக்குது. உங்க ஃபோன் நம்பர்
இருந்தா தாங்க தம்பி..

என்னுடைய பிசினஸ் கார்ட்டும் கொஞ்சம் பணமும் தந்தேன்

மறுத்துக் கொண்டே," உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம். பணம் வேண்டாம்.. போன் செய்றேன். என்னை ஒருதரம் புக் ஃபேருக்கும் லைப்ரரிக்கும் கூட்டிட்டுப் போக முடியுமா"

'அவசியம் செய்றேன். பணம் தந்ததை தப்பா நினைச்சுக்காதீங்க .. உங்களுக்கு 80 வயதிருக்கும் என நினைக்கிறேன். எங்கப்பா இறக்கும் போது அந்த வயசு தான்.. உங்க பையன் தந்த மாதிரி நினைச்சிட்டு வாங்கிக்கங்க"

என் பிசினஸ் கார்டை பார்த்தவாறு என்னிடம் பேசினார்.. Your guess is wrong mowlee. I am just 62 years old... சரளமான

ஆங்கிலத்தில், க்ளோபல் வார்மிங்.. ஏஜிங் என தொடந்தார்.

மனசில்லாமல் அங்கிருந்து சென்ட்ரல் போய் லேட்டாக வந்த ரயிலுக்கு காத்திருந்து... மகளை வரவேற்று, மனைவியுடன் ஆட்டோவில் அனுப்பி வைத்து ஆபிஸ் போய் மிக முக்கியமான முடிவுகள் இரண்டு இன்றைக்கு எடுத்து.. வீடு திரும்பி

இந்த நிமிஷம் வரை எனக்கு பிரமிப்பு அடங்கவில்லை.. அந்த பிரமிப்பை சொல்வதற்கு எனக்கு பிரமிப்பு என்ற வார்த்தை தவிர வேறு தெரியவில்லை

இந்த போட்டோவில் இருப்பவர் தான் அந்த தாஜுதீன்

Sunday 8 January 2012

அறியப்படாத அண்ணா ஹசாரே

" அறியப்படாத அண்ணா ஹசாரே" எனும் தலைப்பில் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது புத்தகம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்ப்க ஸ்டால்களில் கிடைக்கும்

ஹசாரே மீதும் அவரது ஜன் லோக்பால் வரைவு மீதும், அவரது போராட்டத்தின் மீதும் கேள்விகள் எழுப்பும் புத்தகம்.