Saturday 7 May 2011

கனிமொழி


கைது கைது என எங்கே பார்த்தாலும் சத்தம், எழுத்துக்கள். டிவியை ஆன் செய்தால் இணையத்தில் நுழைந்தால் இதே வார்த்தை தான்.

மக்களுக்கு ரிமான்ட் எனச் சொல்லிப் பழக்கமில்லையோ அல்லது தமிழில் ரிமான்டுக்கு கைது தான் சரியான நிகர்ச் சொல் என நினைக்கின்றார்களோ என்னவோ. காவல் எனும் வார்த்தை பொருத்த்ம்

பன்மொழிப் புலவர் அப்பாத்துரை என்ன சொல்கிறார்; ரிமான்ட் என்றால் திரும்ப அனுப்பு என சொல்கிறார்.. இவர் வேண்டாம்..

நாம் லாஜிக்கலாக பார்ப்போம்.

நடைபெற்றதாக நம்பப்படும் குற்றப் பிண்ணணி குறித்து புலன் விசாரண அமைப்பு விசாரிக்கிறது நபர் 1, நபர் 2 , நபர் 3 இதிலே தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என கருதுகிறது. குற்றப் பத்திரிக்கை தயார் செய்யத் தேவையான சாட்சிகள் ஆவணங்கள் சேகரிக்க இவர்கள் இடையூறு தரக் கூடும் என நினைத்து அவர்களை கைது செய்கிறது. நீதி மன்றத்தில் ஆஜர் செய்கிறது . ரிமான்ட் கோருகிறது .

இவர்கள் குற்றம் இழைத்ததாக கருதுகிறோம். இவர்கள் மேல் விசாரணைக்கு தேவைப்படுகிறார்கள் ஆயினும் இவர்கள் வெளியில் சுதந்திரமாக உலவினால் சாட்சிகளை கலைக்கும் அபாயம் இருக்கு ஆகவே ப்ளீஸ் ரிமான்ட் எனக் கேட்பது.

நீதிபதி, " என்னங்க நீங்க என்ன சொல்றீங்க"

குற்றம் சாட்டப்பட்டவர், " ஐயா அதெல்லாம் இல்லீங்க. " எனக் கூறி தன் தரப்பு நியாங்களை சொல்கிறார். இதை நீதிபதி ஏற்காத தருணத்தில் ரிமான்ட் ஆகிறது. தமிழில் சொன்னால் காவலில் வைக்கப்படுகிறார்

சம்பவங்களைச் சரியாக கவனிக்க வேண்டும். குற்றம் குறித்து விசாரணை நடக்கிறது. அய்யோ இவர் வெளிலே இருந்தா ஆபத்து.. புடிச்சி காவலில் வை.. அய்யா நீதிபதி இவர் வெளிலே இருந்தா ஆபத்து புடிச்சி வச்சிட்டோம். இவர் விசாரணைக்கு குந்தகம் செய்வார் ஆகையாலே நீங்க இவரை காவலில் வைக்க ஆர்டர் தரணும் என வரம் கேட்பது தந்தேன் என சொல்வதும் நடந்திருக்கு .. அவங்க மேல் அப்புறமா தான் குற்றப் பத்திரிக்கை தாக்கல் ஆகிருக்கு.

அதே வழக்கிலே நபர் 4 , நபர் 5, நபர் 6 சம்பந்தப்பட்டிருக்காங்கனு சந்தேகத்துல அவங்களை விசாரிக்கிறாங்க. விசாரிக்கிறாங்க .ஆனா கைது செய்யலை. ஏன் இவங்க சாட்சி கலைப்பாங்க இடைஞ்சல் செய்வாங்கனு தோணலை. இல்லை தேவை இல்லை.. ஆனா குற்றம் செய்திருக்காங்கனு தோணுது . கோர்ட்லே சொல்லியாச்சு கோர்ட்டும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து அதை வாங்கிக்க இத்தனாம் தேதி வா என சொல்லியாச்சு.

கவனிங்க விசாரணை நடந்ததுக்கும் , குற்றப் பத்திரிக்கை தாக்கல் ஆனதுக்கும், அதை வாங்க வானு கோர்ட் சொன்ன நாளுக்கும் இடையிலே எத்தனை இடைவெளி. ஆக இவங்க எல்லாம் சாட்சி கலைப்பு இதெல்லாம் செய்ய வாய்ப்பில்லைனு விசாரிச்ச போலிசு நினைத்தது உறுதியாச்சு

ஆக இப்ப குற்றப் பத்திரிக்கை வாங்க வந்தப்போ ஜட்ஜ் அய்யாகிட்ட சாட்சி கலைச்சிருவாங்கனு சொல்ல சான்ஸ் இல்லை ; சொல்லலைனு நினைக்கிறேன்.


இவங்கள்ளாம் விசாரணைக்கு தேவைப் படுவாங்க .


என்னங்க எப்ப கூப்பிட்டாலும் வரணும். வரேன். வெளிநாடு போகக் கூடாது.

ஏன் சந்தேகம் இந்தா என்னோட பாஸ்போர்ட்..

நீங்க என்னங்க சொல்றீங்க .. எங்களுக்கு ஓகே


ரிமான்ட் என்றால் என்ன எளிமையாகப் புரிய வைக்க இனிமையான மொழியில் ஐ மீன் கனிவான் மொழியில் சொல்ல முயற்சி செய்தேன் இதில் மேலும் சட்ட பூர்வமாக சிஆர்பிசி , ஐபிசி, பல வழக்குகளின் முன்னுதாரணம் இதெல்லாம் சொல்லி விளக்கமா வேணுமின்னா எனக்கு தனியா மெயில் அனுப்பவும்


நான் அரசியல் சார்ந்த பதிவுகள் எழுதுவதில்லை ஆகையால் இந்தப் பதிவினை அரசியல் எனக் கருதாது படிக்கவும். பின்னர் ஏன் தலைப்பினை இப்படி வைத்தாய் எனக் கேட்டால் கனிமொழி என்பதற்கு இனிய மொழி என பெயர் உண்டு என விளக்கம் சொல்லக் கடமைப்பட்டவனாகின்றேன். அந்த அம்மா படத்தை ஏன் இந்தப் பதிவில் இணைத்தாய் எனக் கேட்டால் கூகிள் இமேஜ்ஜில் தேடினால் இந்தப் படம் மட்டும் தான் கிடைக்கிறது

10 comments:

Unknown said...

ஐயா உங்க குசும்பு தாங்கமுடியலையே? மொத்தத்தில் ரிமாண்ட் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று சொல்லவருகின்றீர்கள், இத்தனை நாள் கலைக்காத சாட்சியையா இனி கலைக்க போகிறார், மேலும் அவர்தான் பெண், அம்மா போன்ற உயர்ந்த காரணங்களை ஜேத்மாலனி மூலம் தெரிவித்திருக்கிறாரே.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

தவநெறி நன்றி ஆனால் இதிலே குசும்பு எங்கிருக்கு நான் சொல்ல வந்தது லீகல் லாஜிக்

Unknown said...

Karuna is having two wife and both of them having children who are all having in fight.So jail safer than bail.

Anonymous said...

I wanted to thank you for this nice read!! I undoubtedly having fun with every little little bit of it I have you bookmarked to check out new stuff you submit

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

நியாயமாகத்தான் தோன்றுகிறது. ஒரிரு நாட்களில் தெரிந்து விடும். அல்லது மே 13 வரை இழுக்கப் படலாம் - பொறுத்திருந்து பார்ப்போம் - நட்புடன் சீனா

MGK said...

Very good write-up. Very informative.

Regards

MGK said...

Very good write-up. Very informative.

Venkat said...

Sir - Doubts :
1. Why jethmalani argued for both bail as well as about the charges?
if actual trial has not started,shouldnt he argue only for bail?

2. the cbi advocate did not say one word about not to release her in bail. he only argued about the charges. why?

3.in my opinion,cbi has not asked for custody at all. so,even if kanimozhi's bail application is rejected,she would not be arrested as cbi has never asked for custody in the first place !!!.is my opinion valid?

4.what is the difference between remand and judicial custody?

Thanks

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

Venkat,

you have posted few questions to which it requires a post to answer

Venkat said...

Sir,
Kanimozhi is being charges under Prevention of corruption act (read with) criminal conspiracy.
So, I think,she is being treated as public servant in view of the prevention of corruption act.
In this regard,wouldnt rajya sabha speaker's permission be needed before prosecuting her?