Sunday, 4 October 2009

கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்


கமல்ஹாசன்,

உன்னைப் போல் ஒருவன் சினிமா பார்த்தேன்.

நிறைய பேர் படம் அப்படி இருந்தது இப்படி இருந்தது என எழுதி விமர்சனங்கள்ஓய்ந்த சந்தர்ப்பத்தில் நானும் அது மாதிரியே எழுதிக் கொண்டிருக்க நான்நிச்சயமாக உன்னைப் போல் ஒருவன் இல்லை

ஒரு படத்திலே லீகல் சிஸ்ட்த்துக்கு டிமிக்கி தந்துவிட்டு ஆஸ்திரேலியாபோய்விட்டு அங்கிருந்து போனில் போலிஸ் ஆபிசருடன் பேசுகிறார்

இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், லீகல் சிஸ்ட்த்திலே இருக்கும் ஒருபோலிஸ் ஆபீசர் சினிமாவின் கடைசி காட்சியிலே ,”’ “உங்க கையிலே இருக்கும்பாரம் ஜாஸ்தியா இருக்கும் போல இருக்கு, நான் வேணும்மினா தூக்கிட்டுவரவா” என கேட்கிறார்.

சமூகத்திலே சுத்தமான வாழ்க்கை என்பதை மேசேஜாக சொல்வதற்காகபுனையப்படும் சினிமாவிலே சுவாரசியம் சேர்ப்பதற்காக, சினிமாவின் ஹீரோசட்டத்தை தானே கையில் எடுத்துக் கொள்வதாக வரும் படங்கள் வியாபாரரீதியாக மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாக சொல்லலாம்.. என்னை விட அந்தபட்டியல் கமல்ஹாசனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் பட்டியலில் கவனம்செலுத்தாமல் இந்த கடிதத்தை தொடர்கிறேன்.

லஞ்சம் வாங்குபவர்கள், கடமையை சரியாக செய்யாதவர்கள், தீவிரவாதிகள்இப்படியானவர்கள் மீது சமூகம் கோபம் கொண்டிருப்பது மெய்தான். ஆனால்அவர்களை கையாள இப்படி சினிமாக் கணக்காக ஒரு ஹீரோ extraordinary சங்கதிகளுடன் போலிசுக்குத் தண்ணி காட்டி தண்டனை வழங்குவான் என்பதைசினிமா அளவில் மட்டுமே சாத்தியம் என்பதை சமூகம் தெரிந்து வைத்துதான்இருக்கிறது.

சினிமா என்பதை மெசேஜ் சொல்லும் யுக்தியாக, நீங்கள் வைத்திருக்கும்பட்சத்தில் சமூக அவலங்களுக்கு சினிமாவிலே ஹீரோ நடை முறையில் உள்ளலீகல் சிஸ்ட்த்திற்கு உட்பட்டே தண்டனை வாங்கித் தருவதாக, கதை அமைத்துஒரு படம் முயற்சி செய்து பாருங்களேன். என்ன கோர்ட் கேஸ் என படம் ஜவ்வடிக்குமோ என நீங்கள் கொஞ்சம் யோசிக்கலாம்.. ஆனால் அதையெல்லாம்தாண்டி சுவாரசியமாக கதை சொல்ல உங்களுக்குத் தெரிந்து இருக்கணும்னு நான் நம்புகிறேன்

இப்படி படம் செய்வதால் என்ன மேசேஜ் கிடைக்கும் எனவும் யோசித்தேன்.. சினிமாவிலே ஹீரோ ஒருவனும் இன்னும் சிலரும் மட்டுமே நல்லவர்கள்பிறரெல்லாம் சமூகப் பிரஞ்ஞையே இல்லாதவர்கள்.. குறிப்பாக அரசாங்கஅதிகாரிகள் சமூக அக்கறையே இல்லாதவர்கள் என்பது போல காட்டப்பட்டுவரும் வழக்கம் மாறிடலாம்.

இப்படி படம் எடுத்தால் எனக்கு கமர்ஷியலாக பாதிப்பு வரலாம் என நீங்கள்யோசிக்கலாம்.. இப்படி ரிஸ்க் எடுப்பதில் உன்னைப் போல் ஒருவன் இல்லையேகமல்.. அதனால் தான் இதை உங்களிடம் சொல்கிறேன்

இப்படி செய்தால் மட்டுமே நீங்கள் சொல்லும் moral anger சரியாகப் பொருந்திவரலாம்.. இல்லேன்னா anger மட்டும் இருக்கும். தான் மாரல் இருக்காது

Sunday, 26 July 2009

நரை


இன்றைக்குத்தான் புதுசாக ஒன்றைக் கவனித்தேன். ஷேவ் செய்யும் போது மீசையிலே இரண்டு வெள்ளை முடிகள். நரை...

சரி வயசாகிவிட்ட்தோ என நினைத்து சமாதானம் ஆகிவிட்டேன். ஆமாம் ஏன் நரை முடி... என் டாக்டர் சிநேகிதனைக் கேட்டேன்

நம் ஒவ்வொரு முடியின் வேரும் Tissue Tube ஒன்றால் கவர் செய்யப்பட்டுள்ளது. இதுக்கு பாலிக்கிள் என்று பெயர். இதிலே நிறைய பிக்மெண்ட் செல்கள் இருக்கின்றன இந்த பிக்மெண்ட் செல்கள் மெலனின் எனும் ஒரு ரசாயனத்தை உற்பத்தி செய்து கொண்டே இருக்குமாம். இந்த மெலனின் தான் கேசத்தின் நிறத்துக்குக் காரணமாம்.

வயசு ஏற ஏற மெலனின் உற்பத்தி சொற்பமாகி, கலர் சப்ளை நின்று போய் கேசத்திலே வெள்ளை அடிக்க ஆரம்பமாகிறதாம். இதே மெலனின் தான் நமது தோலின் நிறத்துக்கும் காரணமாம்.

மெலனின் பற்றாக்குறைக்கு அல்பினிசம் என்று பெயராம். இந்த அல்பினிசத்துக்கும் காது கேட்காமல் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக சொல்லி லேசாக பயம் காட்டினான்

மெலனின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொள்ள ஏதாவது மாத்திரை, டானிக் இருக்கிறதா எனக் கேட்டேன். அதான் நிறைய டை வந்திருக்கேஎன்றான்.

டை அடித்துக் கொண்டு முடியைக் கறுப்பாக்கிக் கொண்டு உலாவும் கனவான்கள் ஒன்றைக் கவனித்திருப்பார்களா தெரியவில்லை. முன் மண்டையிலே பிசிரில்லாமல் நேர்த்தியாக கருப்படித்திருப்பார்கள். அந்த நேர்த்தி பெயிண்டிங் கேசம் மாதிரி இருக்கும். உடனே இது டை அடித்த தலை என சந்தேகம் இல்லாமல் சொல்லிவிடலாம்

மெலனின் அபரிமிதமாக சுரப்பதும் உண்டாம். அதுக்கு மெலனோஜெனசிஸ் என்று பெயராம். இப்படி மெலனின் அளவு கடந்து சுரப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டேன். எல்லாம் ஹெரிட்டரிசிம்பிளாகச் சொல்லிட்டு போய்ட்டான் ஆனால் இதுக்கு ஒரு நல்ல ஆன்சர் புறநானூற்றிலே பிசிராந்தையார் சொல்லிருக்கார் பாருங்கள்

“யாண்டு பலவாக நரையில் ஆகுதல்

யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;

யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்

அல்லவை செய்யான், காக்கும்; அதந்தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே

(புறநானூறு :191 பாடியவர் பிசிராந்தையார்)

எனக்கு அன்பான மனைவி.. மிக்க அன்பான குழந்தைகள்.. கடமை பெரிதென உழைக்கும் ஊழியர்கள். எல்லாவற்றிலும் மேலாக குற்றம் செய்யாத என் அரசன். அதைவிட மேலாக கொள்கையால் சிறந்த சான்றோர்கள் நிறைந்த ஊரிலே நான் குடியிருக்கிறேன். அது தான் ஆண்டுகள் பல ஆகியும் எனக்கு கேசம் நரைக்கவில்லை

Saturday, 18 July 2009

குருஷேத்ரம்-3


இதற்கு முந்தைய பதிவுகளை கீழ்க்கண்ட சுட்டிகளிலே படிக்கலாம்

குருஷேத்ரம் அறிமுகம் பதிவு

http://mowlee.blogspot.com/2009/02/blog-post.html

குருஷேத்ரம்-1

http://mowlee.blogspot.com/2009/05/1.html

குருஷேத்ரம்-2 பதிவு

http://mowlee.blogspot.com/2009/05/2.html

------------------------------


அப்ப நாங்கெல்லாம் அதை மேம்போக்காக புரிஞ்சிண்டோம்னு சொல்றியா “

அப்படி இல்லைப்பா. வேலை செய்யறது தான் உசத்தியானதுனு சொல்ற பகவான்.. அந்த வேலைக்கு கூலி எதிர்பார்க்காதேனு சொல்வாரா.. யோசிச்சுப்பாரு. நீ செய்ற வேலையை எனக்கு செய்ற பூஜையாக நினைத்துக் கொள் அப்படினு சொல்றார்

“வேலையை பூஜையா எப்படி நினைக்க முடியும்

“சரி இப்படி யோசிச்சுப் பாரு.. வேலை செய்ய purpose இருக்கே. அந்த பர்ப்பஸ் தான் முக்கியம்னு நினைக்கிறது பூஜை. இதை பஹவத் அர்ப்பணம் அப்படினு சொல்லிருக்கார் பகவான்

அப்ப ஒவ்வொருவருக்கும் ஒரு பர்ப்பஸ் இருக்குமே. அது நல்ல காரியமாகவும் இருக்கலாம். கெட்ட காரியமாகவும் இருக்கலாம்.. திருடனுக்குக் கூடத்தான் திருடறத்துக்கு பர்ப்பஸ் இருக்கும்.. அதுனாலே திருடனுக்கும் பகவான் ஆதரவு தருவாரா

ஆக்‌ஷன் என்பது வெறுமனே செய்கை மட்டுமில்லை சிவராம்.. ஆக்‌ஷனுக்கான மனோபாவமும் சேர்த்துத்தான்

எப்ப மனோபாவம்னு வருதோ.. அது செல்ஃப் டிசிப்ளினுக்கு உட்பட்ட்தாய்டுதே

கரெக்டா சொன்னே. இதை சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அழகாச் சொல்லிருக்கார்.. SELF DISCIPLINE IS NOT A MATTER OF INTELLIGENCE. IT IS A MATTER OF WILL AND EMOTIONS..” அப்படினு

“அப்படின்னா WILL தான் உசத்தியா

Will அப்படிங்கறதை காரியம் செய்ய தேவையான திட சித்தம்னு மட்டும் அர்த்தம் கொள்ளக் கூடாது

பின்ன அது என்னவாம்

“காரியத்தோட சம்பந்தமான எல்லா நிகழ்வுகளையும் தாங்கிக்கிற மனோபாவம் தான் அந்த WILL. வெறும் பிடிவாதம் WILL இல்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த நிகழ்வுகளினால் தடுமாறாம இருக்கறது தான் அந்த வில்

“சரி நான் அமெரிக்கா போக அடம்பிடிக்கிறேன்னு சொல்றியா

“நீ அந்த ப்ராஜக்டிலே ஈடுபட பர்ப்பஸ் இருந்தது. அந்த பர்ப்பஸுக்கு நீ உனக்கான கடமையைச் செஞ்சாச்சு.. ஆனா அதுக்கு அமெரிக்கா போறதுதான் பலன் அப்படினு பலனை நீயே தீர்மானம் செய்துட்டாய்... அதுனாலே அது மீதான ஈடுபாடு காரணமாக நீ அதை விடமுடியாம இருக்கிறாய்.. ஆனால் உன்னோட பலன் அமெரிக்கா போறதுத்தான் அப்படினு நீயா தீர்மானம் பண்ணிண்ட்து உன்னோட மனோபாவம்.. அது உன்னோட செல்ஃப் டிசிப்ளினிலே வந்த தடுமாற்றம் “

“புரியற மாதிரியும் இருக்கு .. கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கு

சரி உடைச்சே சொல்றேன்.. நான் செய்தேன் நான் செய்தேன்.. நான் செய்யப்போறேன் அப்படினு உன்னை முன்னே நிறுத்திண்டு இருக்கே.. அந்த நான் எனும் அகங்காரம் தான் கவலையாகவும்.. துக்கமாகவும் இப்ப உனக்கு தோணுது.. ப்ராப்ளம் உன்னோட இமோஷன்.. வேறெதும் இல்லை’’

(தொடரும்)

Monday, 15 June 2009

நிற்பதுவே


பாண்டிச்சேரியில் ஈஸ்வரன் தர்மராஜன் கோவில் தெருவிலே கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டின் மாடியிலே ஏறி எதிர் வீட்டு மொட்டை மாடியை டிஜிட்டல் காமிராவுக்குள்ளே கொண்டு வரும் முயற்சியிலே நானும் கார்த்தியும்...

திருப்தியாய் வந்த்தா படம்

.. தலையாட்டினார்

சரி கீழே இறங்கலாம் என திரும்பினால் .. “ஓய் ஸ்வாமி... இப்படி வாரும் எனக் குரல் கேட்டது

அந்த எதிர் வீட்டு மொட்டை மாடியிலே சமையல் கட்டு புகை போக்கி போலிருந்த மேடை ஒத்த இட்த்தின் மீது முண்டாசு கட்டிய பாரதி..


அவன் 10 வருஷம் குடியிருந்த அந்த வீட்டு மொட்டை மாடியில் இப்போது அவனைப் பார்க்க எனக்கு ஆச்சரியமில்லை.. அங்கிருந்தபடியே எங்களை அழைத்தான்..


“இந்தப் பக்கம் வாருமேன்


அந்த வீட்டிலே மொட்டை மாடிக்குப் போகும் வழிக் கதவு சாத்தப்பட்டிருப்பதை கார்த்தி என் காதிலே முணு முணுத்தார்.


“நண்பர் உமது காதிலே எதோ உபதேசம் செய்கிறாரே


“அது ஒன்னுமில்லை.. உங்க வீட்டிலே மொட்டைமாடிக்கு வரும் வழியிலே ஒரு கதவு இருக்கிறதல்லவா அது மூடியிருக்கு அதை சொல்றார்


“அது குறித்து நீர் கவலையுற வேண்டாம். நான் கீழே இறங்கி வருகிறேன். நீங்கள் அங்கே வந்துவிடுங்கள்.


எதிர் கொண்டு எங்களை வரவேற்று உள்ளே அழைத்துப் போனான்..


“இவர் கார்த்தி.. இவர் ருத்ரபிரசாத் என் நண்பர்கள்.. இங்கே அரவிந்தர் வாழ்ந்த வீடு உங்க வீடு இரண்டையும் பார்த்துவிட்டுப் போகலாம் என வந்தோம்

வீட்டின் உள்ளே பார்த்து குரல் கொடுத்தான் முண்டாசு , “செல்லம்மா. நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்று இங்கேதான் போஜனம்..”.. சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான்..


“பழக்க தோஷம்என சொல்லிவிட்டு எங்களைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினான்


நீங்க தான் யுக புருஷன். 100 வருஷம் தாண்டியும் எங்களோட பேசிண்டிருக்கேள்.. செல்லம்மாவும் அப்படியா


“நல்ல கேள்விதான். ஆனால் என்னைப் போல கிறுக்கனை சமாளித்தாள் எனும் வகையிலே செல்லம்மா என்னிலும் மேலானவள்.. அது கிடக்கட்டும் அது என்ன நண்பர் கார்த்தி உங்கள் காதிலே எதோ சொல்கிறாரே


“அது ஒன்னுமில்லை.. நீங்க பேனாவும் பேப்பருமாய் அமர்ந்த உடன் கவிதை தங்கு தடையில்லாம வருமானு வியப்பாகக் கேட்கிறார்


“எனக்கென்ன தெரியும்... அதெல்லாம் பராசக்தி வேலை.. அவளிடம் தான் கேட்க வேண்டும் சட்டையிலே எதையோ தொங்கவிட்டிருக்கின்றீர்களே அது என்ன


“அது பாடல் கேட்கும் கருவி.. இதோ நீங்களும் கேட்டுப்பாருங்கள்..எம்பி3 ப்ளேயரை இயக்கி முண்டாசை லேசாக நீக்கிவிட்டு ஸ்பீக்கரை காதிலே பொறுத்தினேன்.. நிற்பதுவே பாட்டைத்தான் வைத்திருந்தேன்


அற்புதம்... அற்புதம்... என் பாடலை ரொம்ப வருடம் கழித்துக் கேட்பதிலே

பரமான்ந்தம்..


எங்கள் மூவரையும் மாறி மாறிப் பார்த்தான்.. நீங்கள் மூவரும் சமீபத்திலே அத்வைதம் குறித்துக் கதைத்தீரல்லவா.. இந்த பாடலில் அத்வைதம் தான் சொல்லிருக்கேன்..


நீங்கள் அரவிந்தர் இல்லத்துக்குப் போய் வாருங்கள்.. நான் கடற்கரை வரை சென்று வருகிறேன்


காண்பதெல்லாம் மறையும் என்றால்.. மறைவதெல்லாம் காண்பமன்றோ


அடுத்த முறை சந்திக்கும் போது கேட்டுக் கொள்ளலாம் என விட்டு விட்டோம்

Sunday, 10 May 2009

குருஷேத்ரம்-2


”ஆரம்பிச்சுட்டியா. சரி வந்தாச்சு. உபதேசம் கேட்டுக்க வேண்டியது தான். சொல்லு”

“சிவராம். உலகத்திலே எதுவுமே உபதேசம் இல்லை. எல்லாம் அக்கறையாலேசெய்றது தான். தனக்கு தெரியாதையா இவன் சொல்லப் போறான் அப்படினுநினைச்சா அது உபதேசமா தெரியும். போரடிக்கும். எரிச்சலா வரும். இன்னும்சொல்லப் போனா இந்த மாதிரி அக்கறையிலே சொல்றவன் எல்லை மீறிசுதந்திரம் எடுத்து கொள்கிற மாதிரியும் தெரியும்”

“நான் அப்படியெல்லாம் நினைக்கலை. நீ சொல்லு நான் கேட்டுக்கிறேன். Probably I may be wrong நீ சொல்றதாலே எனக்கு அது புரியலாம்”

“சரி இந்த ப்ராஜக்ட் விஷயத்துக்கே வரேன். இதுக்கு நீ அமெரிக்கா போகணும்னுஏன் நினைக்கிறே”

“போச்சுறா அதான் சொன்னேனேப்பா. நான் தான் டிசைனர்”

“அப்படின்னா அமெரிக்கா போறது தான் இந்த ப்ராஜக்ட்டுக்கு நீ எதிர்பார்க்கிறபலன்; அப்படித்தானே”

“ஆஹா நீ என்ன சொல்லப் போறாய் எனத் தெரிந்து விட்ட்து. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே and all that ; ஒரே boring இந்த ஒரு விஷயத்துக்காகஇத்தனை பெரிய சாஸ்திரம்”

”நீ கவனமாகப் புரிந்து கொள்ளவில்லை என என்னால் தீர்மானமாகச் சொல்லமுடியும்”

“எப்படிப்பா. நான் வேலை செய்யனும். அதுக்கு கூலி கிடைக்கனும்னுஎதிர்பார்க்கப்பிடாது. ரிவார்டு கிடைக்குமானு நினைக்கப்பிடாது. ரெக்க்கனிஷன்கிடைக்கனும்னு நினைக்க்க் கூடாது. இதெல்லாம் சாத்தியமா. இல்லை ஏன்அப்படி இருக்கனும்”

“பார்த்தியா அதனாலே தான் சொன்னேன். நீ கவனமாகப் புரிஞ்சிக்கலைனு. நீசெய்யற வேலைக்கு கூலி, ரிவார்ட், அவார்ட், ரெக்க்கனிஷன் இதெல்லாம்எதிர்பார்க்க்க் கூடாதுனு சொல்றதை மேம்போக்காகப் புரிந்து கொள்வதாலேவரும் சிரம்ம் இது தான்”

(தொடரும்)

Saturday, 9 May 2009

குருஷேத்ரம்-1


மைதிலி அப்படியான ஓர் அகால வேளையில் போன் பண்ணி விசும்புவாள் என நானோ என் பெண்டாட்டியோ எதிர்பார்த்திருக்கவில்லை. இது மாதிரி விஷயங்களில் என்னைவிட என் மனைவி இங்கிதமாக ஹாண்டில் பண்ணுவாள் என்பதால் ரிசீவரை அவளிடம் நீட்டினேன், “ இந்தாம்மா மைதிலி மாமி லைனிலே இருக்கா; என்னவோ பிரச்சனை போலிருக்கு; என்ன்னு கேளு; லேசா அழற மாதிரி தெரியறது.

“என்னது மாமி அழறாளா. கொண்டாங்கோ நான் பேசறேன்

நாங்கள் அங்கே போனபோது சிவராமன் அப்படின் ஒன்றும் நிலை தடுமாற்ப் போயிருக்கவில்லை. மைதிலி கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிவிட்டாள்.

“சிவராம் ! என்னாச்சு ! திடீர்னு. இப்படி அப்செட் ஆகியிருக்கேள். அதுவும் லிக்கர் கன்ஸ்யூம் பண்ணிட்டு தடுமாறுகிற அளவுக்கு

“அதெல்லாம் ஒன்னும் இல்லேப்பா; இவ தான் உனக்கு போன் பண்ணி கலாட்டா பண்ணிட்டாள்

“அப்படி தெரியலையே; நீங்க ரொம்ப அப்செட் ஆகியிருக்கிறது நன்னாவே தெரியறது

“உன் கிட்டே சொல்றதுக்கென்ன; எங்க கம்பெனில ஒரு பெரிய ப்ராஜக்ட் ஆரம்பிச்சோமில்லையா

“ஆமா சொல்லிருக்கீங்க. அமெரிக்கன் க்ளையண்ட்; நல்ல சாலஞ்சிங் ரோல் கிடைச்சிருக்கு அப்படினு

“அதான். அதோட ஆப்ரேஷனல் க்வாலிட்டி டெஸ்டிங் நடக்கப் போறது. க்ளையண்ட் ப்ளேசிலே. அந்த டீமிலே நான் இல்லை; இந்த ப்ராஜக்டிலே இது வரை சம்பந்தமே படாதவா எல்லாம் பொண்டாட்டி குழந்தை சகிதம் அமெரிக்கா போக கம்பெனி எல்லாம் செய்றது; ஐம் ஜஸ்ட் எ ஸ்பெக்டேட்டர் நௌ

“நீங்க தானே ப்ராஜக்ட்டையே டிசைன் பண்ணினது

ஆமா. நான் தான் பேஸ் டிசைனிலிருந்து ஆரம்பிச்சு ஆர்க்கிடெக்சர் வரைக்கும் கொண்டு வந்தவன். டெவெலெப்மெண்டிலே ஒவ்வொரு வரியா பார்த்து பார்த்து க்வாலிடிக்கு மாரடிச்சேன்; ஆனா இப்ப க்வாலிடி டெஸ்டிங்கிலே நான் இல்லை

“இவ்வளவு தானா ! இதுக்கு தானா இத்தனை சோகம் ! என்ன சாப்பிட்டேள் ! வெறுமனே பீர் தானா இல்லை ரொம்ப காட்டமா இருக்கட்டுமேனு ரம் வரைக்கும் போய்ட்டேளா

“என்னப்பா இத்தனை சாதாரணமா சொல்ற. என் கஷ்டம் உனக்குப் புரியலையா

“சிவராம். இதிலே கஷ்டப்பட வேண்டிய அவசியமேயில்லை

“என்ன சொல்றே நீ. சாஃப்வேர் ப்ராஜக்ட்டுக்காகவும் ஒன்னோட கிருஷ்ணர் எதாவது ஸ்லோகம் சொல்லிருக்கார் கீதையிலே அப்படின்னுவே|

“அதே தான்

(தொடரும்)

Thursday, 5 March 2009

சுஜாதா ஓர் இயக்கம்


சுஜாதா ஓர் இயக்கம் என முந்தைய பதிவிலே சொல்லியிருந்தேன்

அதை நண்பர் திரு வெங்கட்ரமணன் மெய்ப்பித்துள்ளார்

கற்றதும் பெற்றதும் தொடரில் சுஜாதா அறிமுகம் செய்த நூல்களை நண்பர் கார்த்திக் தொகுத்து எழுதி அனுப்பினார். அதை அப்படியே இங்கே தந்தேன். நண்பர் திரு வெங்கட்ரமணன் அந்தப் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பது வரை சேகரித்து ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளார்



இங்கே விபரங்கள் கிடைக்கும்
http://venkatramanan.wiki.zoho.com/Sujatha-books.html

அவர் செய்த இந்த முயற்சி பிரமிக்கத் தக்கது.

Thursday, 26 February 2009

சுஜாதா சார்... WE ALL MISS YOU A LOT











நாளை பிப்ரவரி 27. இன்றோடு ஓராண்டாகிறது. நாட்காட்டிகளின் தேதிப்படி. அவர் எப்படி எப்போதும் சுவாரசியமாக இருந்தார் என்கிற ரகசியத்தை அவர் ஒளித்து வைக்கவே இல்லை.


சுஜாதா என்பவர் ஓர் எழுத்தாளராக, வெறுமனே கதை சொல்பவாராக எங்களுக்கு தோன்றவில்லை. அவர் ஓர் இயக்கம்.






தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது மரணம் எனக்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை எனச் சொல்ல முடியாது










அவரது மரணம் ஒட்டிய மன சஞ்சலத்தைப் பகிர்ந்து கொள்ள முயன்ற போது கிடைத்த நண்பர்கள் அநேகம். மிக்க் சொல்ல வேண்டுமெனில். திரு. தேசிகன். திரு கார்த்திக் சுப்ரமண்யன் எனச் சொல்ல்லாம்

சுஜாதாவிற்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும். இப்படி எல்லாத் தளங்களிலும் கால் பதித்து நடனம் ஆடி, வெற்றிக் கொடி நட்டு..



அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொஞ்ச நாள் ஸ்வாதீனமே இல்லாமல் இருந்து விட்டு தேசிகன் ,சிற்றம் சிறுகாலே.. “ என பாசுரம் படிக்க அதைக் கேட்டபடியே கண்மூடி..

இந்த மனுஷனுக்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும். இப்படி எழுத்து , எழுத்து என மாய்ந்து போனதற்கு..

எனக்குத் தெரிந்து ஒரே நோக்கம் தான்

அவர் சொன்னதும் சொல்ல முயன்றதும் ஒன்றே ஒன்றைத் தான்.











நல்ல எழுத்துகள் படிக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் நிறைய வெளிவர வேண்டும். நல்ல புத்தகங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும்






இளம் எழுத்தாளர்களை, இளம் கவிஞர்களை, நல்ல புத்தகங்களை எப்படியெல்லாம் அறிமுகம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்தார்






அவரது கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் எல்லாவற்றிலும் புத்தகம், புத்தகம் புத்தகம் தான்.

அவர் கற்றதும் பெற்றதும் கட்டுரைத் தொடரில் (அறிமுகப்படுத்திய புத்தகங்களைத் தான் நண்பர் கார்த்திக் சுப்பிரமணியன்(karthik.manian@gmail.com ) தொகுத்து தன் கைப்பட எழுதியதை இங்கே பதிந்து இருக்கிறேன்.



அவரால் வசீகரிக்கப்பட்டவர்கள் அவரால் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என சுஜாதா ஓர் இயக்கம்.

அவரது மறைவுக்கு இரங்கல் எழுதிய எழுத்தாளர் திரு. இராமகிருஷ்ணன் சொன்னதை நினைத்துக் கொள்கிறேன், போய் வாருங்கள் வாத்யாரே.. எழுத்தாய் எப்போதும் இருப்பீர்கள்




அந்த வாத்யாருக்கு மாணவர்கள் செய்யும் வணக்கம் ஒன்றே ஒன்று தான். நல்ல புத்தகங்கள் படிப்பது. நல்ல புத்தகங்களைப் பற்றி செய்திகள் பகிர்ந்து கொள்வது. அதை ஒரு இயக்கமாகத் தொடர்வது

சுஜாதா சார்... WE ALL MISS YOU A LOT

Tuesday, 17 February 2009

திரு.மாலன் அவர்களுக்கு எனது பதில்


திரு. மாலன் அவர்களின் ஜனகணமன  அதற்கு என் விமர்சனம், அதற்கு திரு. மாலன் அவர்களின் பதில்( என கடந்த பதிவுகள் 

திரு.மாலன் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை

மாலன் அவர்கள் நீண்ட கடிதத்தின் வாயிலாக சொல்ல விழைவது  தான் அந்தப் புத்தகத்தை எழுதியது 1980 எனவும் Manohar Malgonkar ன் புத்தகம் அதற்குப் பின் வெளியாகி இருக்கலாம் என்று யூகிப்பதாகவும் சொல்லியிருக்கார்

மாலனின் வரிகளை மீண்டும் பாருங்கள்

//நீங்கள் ஒரு THE MEN WHO KILLED GANDHI யைப் படித்து விட்டு எழுதுகிறீர்கள். MALGONKAR ருடைய அந்தப் புத்தகம் 1981ம் ஆண்டு வெளிவந்ததாக ஞாபகம். (நான் இன்றுவரை அதைப்படித்ததில்லை) ஆனால் நான் என் நாவலை 1980லேயே எழுதி விட்டேன்.81ல் அது பிரசுரமாகிவிட்டது//

1980 ல் தானே கூகிள் இல்லை இண்டெர்நெட் இல்லை . இப்போது இருக்கிறதே. எனக்கு மெயில் அனுப்புவதற்கு முன்பு  Manohar Malgonkar  என்பவர் The Men Who Killed Gandhi என்ற புத்தகத்தை எப்போது எழுதினார் என சரி பார்த்துவிட்டு எனக்கு மெயில் அனுப்பியிருக்கலாமே. இன்றைய தேதி மாலன் சீனியர் தானே

படிப்பவர்களுக்கு தெரிய வேண்டாமா

Manohar Malgonkar  என்பவர் The Men Who Killed Gandhi என்ற புத்தகத்தை  1978 லேயே வெளியிட்டுவிட்டார்.  அப்போதே  காந்தி கொலை தொடர்பாக  6 புத்தகங்கள் வந்துவிட்டன . ஆக மாலன் ஜனகணமன வெளியிடும் சமயத்தில் இந்தப் பொருளில் புத்தகங்கள் இருந்திருக்கின்றன

Manohar Malgonkar  எழுதிய  The Men Who Killed Gandhi சமீபத்திய பதிப்பு 2008 ல்


மாலன் அவர்கள் சொல்லியிருக்கும் சமாதானம் / விளக்கம்

//உங்கள் விமரிசனத்தில் நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். என்னுடையது Fiction வரலாற்றின் அடிப்படையில் அமைந்த Fiction.அதை நான் கதையைத் துவக்கும் முன் Prologueலேயே சொல்லி விட்டேன். ஒரு கதாசிரியனுக்கு சில உரிமைகள் உண்டு.எப்போதுமே சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதும் எந்த எழுத்தாளரும் தான் திரட்டும் எல்லாவற்றையும் எழுதிவிடுவதில்லை. கதையின் கட்டுமானம், இலக்கு இவற்றைக் கருத்தில் கொண்டு H/She will use his/her discretion.//

இது FICTION என மாலன் சொல்லியிருப்பது நிஜம். அதே Prologue ல் சம்பவங்கள் நிஜம் , சம்பாஷனைகள் தான் கற்பனை என்றும் ஒவ்வொரு விபரமும் சரி பார்க்கப்பட்ட பின்னரே எழுதியதாகவும் க்ளெயிம் செய்திருக்கிறாரே. சரி பார்த்தேன் எனச் சொல்லி வெளியிட்டால் அதிலே தப்பு இருந்தால் சொல்வது தானே விமர்சனம். அதைத் தானே செய்துள்ளேன்

இதையும் வாசகர்கள் கவனிக்க வேண்டும். 

ஆப்தே ஒரு பெண்ணுடன் சல்லாபித்திருந்தார் என பொதுவாகச் சொல்லவில்லை. ரேணு என்ற பெயரைச் சொல்லியிருக்கிறார்

அந்தப் பெண்ணின் பெயர் மனோரமா சால்வி என ஆதாரத்துடன் சொன்னால்  அது முக்கியமில்லை எனச் சொன்னால் என்ன சொல்வது

இன்னொன்று

ஆப்தே , கோட்சேயின் குவாலியர் பயணம். இதற்கு மாலன் தரும் சமாதானம் விளக்கம்

//உடனே டிரெயின் மூலம் ? நமக்கு அவர்கள் கிளம்பிய டிரெயினின் நேரம் தெரியாது. தில்லி வந்த நேரம் தெரியாது.தில்லி வந்து டிரெயின் மூலம் குவாலியர் போவதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் போலீஸ் கண்ணில் படாமல் எங்கு தங்கியிருக்க முடியும்? அங்கே கற்பனைக்கு இடமிருக்கிறது அதை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். தப்பா?//

கோட்சேவும் , ஆப்தேயும் 27-ஜனவரி-1948 மும்பையிலிருந்து விமானம் மூலம் போலி பெயரில் டெல்லி வந்த உடன் விமான நிலையத்திலிருந்து நேராக பழைய டெல்லி ரயில் நிலையம் சென்று டிரெயினில் குவாலியர் போனது ஆப்தேவிடமும், கோட்சேவிடமும் பெறப்பட்ட ஸ்டேட்மெண்ட்களில் பதிவாகியுள்ளது. எந்த டிரெயின் என்ன நேரம் என்பது உட்பட

ஆக நமக்கு தெரியாது என்று மாலன் சொல்லும் நமக்கில் நான் சேர்த்தி இல்லை. 

தப்பா என மாலன் அவர்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் - வாசகர்களிடமே விட்டுவிடலாம்

அதே போல் 21-ஜனவரி-1948 ஜேடி நகர்வாலா என்ற அதிகாரி மொரார்ஜி தேசாயை பம்பாய் ரயில் நிலையத்தில் தான் சந்தித்தார். மாலன் எழுதியிருப்பது போல மொரார்ஜி தேசாயின் அலுவலகத்தில் இல்லை. இதற்கு மாலன் அவர்கள் பதில் சொல்லவில்லை

காந்தியின் கொலை அரசின் மெத்தனத்தால் என மாலன் ரமணன் மூலம் சொல்வதாகச் சொல்லியிருக்கார்

அதைத் தான் தீர்ப்பு சொன்ன நீதிபதி ஆத்ம சரன் சொல்லிருக்கார்னு தீர்ப்பு வரிகளை அப்படியே தந்திருக்கேனே

மாலனின் கீழ்கண்ட வரிகளைப் பாருங்கள்

//என்ன, மல்கோங்கர் ஆங்கிலத்தில் வரலாறாக எழுதினார். (என் உங்கள் குறிப்புக்களிலிருந்து நான் ஊகிக்கிறேன்) நான் தமிழில் சில பரிசோதனை முயற்சிகளோடு புனைகதையாக எழுதினேன். 

என்றைக்குமே தமிழ் எழுத்தாளனது முயற்சிகளுக்கு எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடாது. அது இளப்பமாகத்தான் கருதப்படும்.//


இதையும் மாலன் என்ற இன்றைய சீனியரிடம் நான் எதிர்பார்க்கவில்லை

திரு. மாலன் அவர்களின் பெருந்தன்மை


திரு. மாலன் அவர்களின் ஜனகணமன என்ற நூலுக்கு நான் எழுதிய விமர்சனம் இங்கே (http://mowlee.blogspot.com/2009/02/blog-post_14.html)

இதனை சுட்டி திரு. மாலன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவரிடமிருந்து ஒரு நீண்ட பதில் மின்னஞ்சல் வந்திருந்தது

அதனை இங்கே அப்படியே பதிகிறேன். திரு. மாலன் அவர்கள் எனது விமர்சனத்தை ஆங்காங்கே அப்படியே பதிந்து அதற்கு அவரின் பதிலையும் ஆங்காங்கே தந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. 

திரு. மாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. 
---
இனி திரு, மாலன் அவர்களின் மின்னஞ்சல் 

அன்புள்ள திரு. சந்திரமெளலீஸ்வரன்,

வணக்கம்.

ஜனகணமன பற்றிய தங்கள் விமர்சனம் கிடைத்தது. மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு நூலை ஆராய்ந்திருக்கிறீர்கள் அதை விட முக்கியம், உங்கள் கருத்தை நூலெழுதியவருக்கு அனுப்பி அவரது கருத்தை அறிந்து கொள்ள மேற்கொண்டிருக்கும் முயற்சி.(நீங்கள் விமர்சிக்கிற எல்லா நூல்களுக்கும் இப்படி செய்கிறீர்களா அல்லது நான் 'வலை'யில் அகப்படுபவனாக இருப்பதால் எனக்கு இது நடக்கிறதா என அறிந்து கொள்ள ஆவல். எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியே. உங்கள்முயற்சிக்கு நன்றி.

என்னுடைய கோணத்திலிருந்து சில தகவல்கள். இவற்றை. விளக்கங்களாக ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

1. "இந்த சின்னத் தகவல் இன்றளவில் கூகிளில் கோட்சே என்று தட்டினால் ஷண நேரத்தில் தகவல் வந்து விழுந்து விடும்."

நான் ஜனகணமனவை எழுதியது 1980ம் ஆண்டு. அதாவது 29 வருடங்களுக்கு முன்பு. அப்போது கணினி இ¨ணயம், கூகுள் எதுவுமே எனக்குப் பரிச்சயமாகியிருக்கவில்லை. என்னுடைய தேடுதலுக்கு நான் நூலகங்களையும் நூல்களையுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அது க்ஷண நேர வேலை அல்ல. அப்போது இது குறித்து அதிக நூல்களும் இல்லை

2.ஜணகணமன அதே கால கட்டத்தில் தினமணிக் கதிரில் தொடராக வெளிவந்தது.(அப்போது நான் தினமணி ஆசிரியரல்ல)பத்திரிகைத் தொடர்கதைகளுக்கு உரிய சில வரம்புகளும் நிர்பந்தங்களுக்கும் உட்பட அதை எழுத நேர்ந்தது. என்ற போதிலும் அதில் பல சோதனைகளை செய்து பார்க்க முயற்சித்தேன். (ஒரே ஒரு கற்பனை பாத்திரம்.தியேட்டரிகல் உத்தி) என் முன் தலைமுறையில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வை என் அடுத்த தலைமுறைக்கு சொல்ல முற்படும் முயற்சி. (அதனால்தான் என் மகனுக்கு எழுதிய கடிதம்)

3.அதன் முதல் பதிப்பு 1988ல் வெளிவந்தது. கிழக்கின் பதிப்பாக நீங்கள் பார்ப்பது நான்காம் பதிப்பு.

4."சுதந்திர இந்தியாவின் முதல்பயங்கரவாதம்- காந்தியின் கொலைக்கு புத்தக ஆசிரியர் மாலன் தந்திருக்கும் ஓர் அடைமொழி." அட்டையின் முகப்பில் நீங்கள் காணும் வரிகள் என்னுடையது அல்ல. பதிப்பகத்தாருடையது. அந்த அட்டை வரியும் 'தீவிரவாதம்' என்றுதான் குறிப்பிடுகிறது  நீங்கள் குறிப்பிடுவது போல பயங்கரவாதம் என்றல்ல.

5."தன் குரலைச் சொல்ல சந்தர்ப்பம் தந்து மேல் முறையீடு செய்வதற்கும் வாய்ப்பளித்து May It Please Your Honour எனத் தொடங்கி சுமார் 140 பத்திகளுடைய ஒரு நீண்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கும் பொறுமை பெற்றதாய் இருந்த்து அந்த சுதந்திரம்."அது ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற நீதிமன்ற நடைமுறை  

இனி உங்கள் கருத்துக்கள் மீது:

காந்தி மேற்கொண்ட கடைசி உண்ணாவிரதம் ரூ.55 கோடி விவகாரத்தினால் அல்ல, இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக என டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் செய்தியின் காரணமாக நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது. அதற்கு அப்படி ஒரு கோணம் உண்டு. ஆனால் எனது கோணத்திற்கான ஆதாரமாகக் கருதுபவை:

1.மவுண்ட்பேட்டனின் Press attache ஆக இருந்த ஆலம் கேம்பல் ஜான்சனின் 12 ஜனவரி 1948க்கான நாட்குறிப்பு:

"During his talk with Mountbatten, Gandhi went out of the way to ask for a frank opinion about India's refusal to pay to Pakistan the fifty-five crores from the cash balances, which Mountbatten did not hesitate to give him, saying that he considered the step to be both unstatesmanlike and unwise  
காந்தி மவுண்ட்பேட்டனிடையே நடந்த இந்த சந்திப்பு, அவர் தனது பிரார்த்தனைக் கூட்டத்தை முடித்து விட்டு வந்த பின் நடந்தாக ஆலன் குறிப்பிடுகிறார். இந்த சந்திப்புக்கு காந்தியே முன் முயற்சி எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

2.காந்தியின் கடைசி உண்ணாவிரதம் குறித்து லாரி காலின்ஸ் & டொமினிக் லாப்பியர் எழுதுவது: " But the fast also perplexed many, because unlike Calcutta, no out burst of violence had preceeded Gandhi's sudden decision to begin it. Delhi was tense, but the communal massacres in the city had stopped"

3.அதே ஆசிரியர்கள்: " Gandhi's decision to make the payment to Pakistan of its 550milllion rupees a condition for ending his fast also infuriated a wide segment of public opinion and divided the Indian Government"

4 அதே ஆசிரியர்கள்; Just before midday (Jan.13 1948) the members of that cabinet gathered around the man who was becoming again the conscience of India. Headed by Nehru and Patel, they had abandoned their sumptuous office buildings to hold a cabinent meeting around the charpai of the man who had opened the doors of those edifices for them.The subject that brought them to Gandhi's bedside was his demand for the payment of Pakistan's  550 million rupees.

இவற்றிலிருந்து நாம் வரக்கூடிய முடிவுகள்:

1.இந்தியா, பாகிஸ்தானுக்குரிய 55 கோடி ரூபாயை கொடுக்க மறுப்பது குறித்து காந்திக்கு மனஉளைச்சல் இருந்திருக்கிறது.
2.ஆனால் அதைக் குறித்து நிர்வாக ரீதியாக சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள அவர் விரும்பியிருக்கிறார்.நேரு படேல் இருவரது கருத்திற்கு அப்பால் ஒரு Neutral Opinionஐ அவர் பெற விரும்பியிருந்திருக்கலாம். அந்தத் தெளிவு கிடைக்குமுன் அவர் பிரார்த்தனை கூட்டம் போன்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அது குறித்துப் பேசுவதை தவிர்த்திருந்திருக்கலாம்
3.அவர் உண்ணாவிரதம் ஆரம்பிக்கும் போது தில்லியில் பதற்றம் தணிந்திருந்தது
4.அவர் இந்து முஸ்லீம் பிரசினைக்காக ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். எனவே அந்த ஒரு காரணம் மட்டும் அமைச்சரவையைப் பதற்றமடையச் செய்திருக்காது.
5.இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கான உண்ணாவிரதம் என்ற ஒன்று மட்டுமே அவரைக் கொலை செய்வதற்கான Provocationஆக கோட்சே-ஆப்தேக்கு இருந்திருக்காது


>>எட்டாம் அத்தியாயம் விஷ்ணு கர்க்காரே டெல்லிக்கு வந்தும் தனக்கு துப்பாக்கி கிடைக்கவில்லையே என அங்கலாய்க்கும் வரிகளுடனும் அதற்கு குவாலியர் பக்கம் தானே போய் வாங்கி வரலாம் என்ற சமாதனத்துடனும் முடிகிறது. இங்கேயும் தகவல்களில் முரண்பாடு. இரண்டாவது கொலை முயற்சிக்கு டெல்லிக்கு வரும் ஆப்தேயும் கோட்சேவும் தான் குவாலியர் போகின்றனர்<<

கர்காரே குவாலியர் போனதாக நான் எழுதியிருக்கிறேனா என்ன?

>>கோட்சேயும் ஆப்தேவும் தான் 27-ஜனவரி-1948 டெல்லிக்கு விமானத்தில் வந்த உடன் குவாலியருக்கு ட்ரெயின் மூலம் போய் தத்தாத்ரேய பர்சுரே என்பவரிடம் பெரட்டா என்ற இத்தாலிய மாடல் துப்பாக்கியை வாங்கி வந்தனர்.<<

உடனே டிரெயின் மூலம் ? நமக்கு அவர்கள் கிளம்பிய டிரெயினின் நேரம் தெரியாது. தில்லி வந்த நேரம் தெரியாது.தில்லி வந்து டிரெயின் மூலம் குவாலியர் போவதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் போலீஸ் கண்ணில் படாமல் எங்கு தங்கியிருக்க முடியும்? அங்கே கற்பனைக்கு இடமிருக்கிறது அதை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். தப்பா?
 
குவாலியர் போகும் முன் அவர்கள் கார்க்கரேயை ரயிலடியில் சந்திக்கிறார்கள். இது கார்கரேயே சொன்னது

இந்தக் கதையை எழுதுவதற்காக நான் திரட்டிய பல விஷயங்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை:
உதாரணத்திற்குச் சொல்வதென்றால்:

  • தூக்கிலிடும் சில நிமிடங்களுக்கு முன் ஆப்தே மயங்கி விழுந்து விட்டான்.அவனைத் தூக்கு மேடைக்குத் தூக்கிக் கொண்டு போய்தான் கயிற்றை மாட்டினர்கள்.
  • அதே போல பாட்கே அப்ரூவராக மாறியது. அவனது வாக்கு மூலத்தை வைத்துத்தான் குற்றம் சாட்டப்பட்ட எண்மரில் எழுவர் தண்டிக்கப்பட்டனர். அதிலும் இருவர் (பார்சுரே, கிஸ்தயா) இருவரும் அப்பீலில் விடுவிக்கப்பட்டது.
  • சவார்க்கர் பற்றியும் அதிகம் எழுதவில்லை.அவர் போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதால் கீழ்க் கோர்ட்டிலேயே விடுவிக்கப்பட்டுவிட்டார்.
  • கோட்ஸே பெரி மேசன் நாவல்களின் விசிறி என்பது
  • இதைப் போல்தான் ஆப்தேயின் காதல் விளையாட்டுக்கள் பற்றியும் அதிகம் எழுதவில்லை. கதைக்குத் தேவையான அளவு மட்டும் பயன்படுத்திக் கொண்டேன்.
இதைப் பற்றியெல்லாம்/ இவர்களைப் பற்றியெல்லாம் நான் அதிகம் எழுதாதற்குக் காரணம் இது காந்தியைக் கொல்லத் திட்டமிட்டவர்களைப் பற்றிய நூல் அல்ல.
 
நான் சொல்ல விரும்பியது காந்தியைக் கொன்றது அரசாங்கத்தின் மெத்தனம். இது தொடர்பான பல விவரங்கள், விவாதங்கள் நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

கடைசியில் ரமணன் மனதில் ஓடும் எண்ணம்: 'காந்தியைக் கொன்றது கோட்சே இல்லை, அந்தக் கூட்டமில்லை. அரசாங்கம் அதன் மெத்தனம்' அநேகமாக இந்த வரியோடு கதை முடிகிறது.

 உங்கள் விமரிசனத்தில் நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். என்னுடையது Fiction வரலாற்றின் அடிப்படையில் அமைந்த Fiction.அதை நான் கதையைத் துவக்கும் முன் Prologueலேயே சொல்லி விட்டேன். ஒரு கதாசிரியனுக்கு சில உரிமைகள் உண்டு.எப்போதுமே சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதும் எந்த எழுத்தாளரும் தான் திரட்டும் எல்லாவற்றையும் எழுதிவிடுவதில்லை. கதையின் கட்டுமானம், இலக்கு இவற்றைக் கருத்தில் கொண்டு H/She will use his/her discretion.

>>ஹோட்டல் கிரீன் பேலஸில் ரூம் நம்பர் 212 ல் தங்கியிருந்ததாகச் சொல்கிறார் மாலன். ஆனால் அவர்கள் தங்கியிருந்தது SEA GREEN HOTEL

>>கோட்சே அப்படி நாமினேட் செய்தது ஜனவரி 13-1948.(Reference No:1) அவனும் ஆப்தேயும் சீ கிரின் ஹோட்டலில் தங்கியிருந்தது ஜனவரி 14 முதல் 17 வரை<<

>>கோட்சே பழைய டெல்லி ரயில் நிலைய ரிடயரிங் ரூமில் நாரயண ராவ் என்ற பெயரில் அறை எடுத்து தங்கியதாகச் சொல்கிறார் மாலன். ஆனால் கோட்சே விநாயக் ராவ் என்ற பெயரில் அறை எடுத்திருந்தான்<<

வரலாறு என்றால் நீங்கள் சுட்டுகிற இவையெல்லாம் பிழைதான்.ஆனால் ஒரு புனைகதையில் அவர்கள் ஒரு வசதியான ஹோட்டலில் தங்கினார்கள், மாற்றுப் பெயர்களில் தங்கினார்கள், என்ற தகவல்கள் போதுமானது. 
ஆப்தே சல்லாபி, கோட்சே நேர் எதிர் என்பதைத்தான் 3ம் அத்தியாயம் சொல்ல முயற்சிக்கிறது.

அதைக் காட்டத்தான் ஆப்தே பெண் சிநேகிதியுடன் குலாவிக் கொண்டிருந்த போது கோட்சே தனது சொத்தான இன்ஷீரன்ஸ் பாலிசிகளுக்கு இரண்டு பெண்களை பயனாளிகளாக நியமித்தான் என்ற தகவல் பயன்படுத்தப்படுகிறது . இங்கே தேதியா முக்கியம்?

மற்றப்படி-

ஆப்தேயும், கோட்சேயும் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டது நவம்பர் 15 1949 அதிகாலை. நான் எழுதியிருப்பது நவம்பர் 14 1949

காந்திக்கு வயது 75 அல்ல, 79 ஆகிய பிழைகளை நான் ஏற்கிறேன். அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.
(இந்தத் தவறுகள் கதையை எந்த விதத்தில் பாதிக்கிறது என அறிய ஆவல்)

>>காந்தியின் கொலை மிக சமீபத்திய சரித்திரமே. இதற்கான ஆதரங்களை சேகரிப்பதில் மாலன் அவர்களுக்கு மிகுந்த சிரமம் இருந்தது என்று அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கதை சொல்வதில், கதை சொல்லும் யுத்தியில் செலுத்திய கவனம் கதைக்கான ஆதரங்களை சேகரிப்பதிலும் அதை சரிபார்ப்பதிலும் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.<<

காயப்படுத்துகிறீர்கள் மெளலி. நான் இதை எழுதிய 1980ல் காந்தியின் கொலை பற்றிய விவரங்கள் அதிகம் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டிருக்கவில்லை. பாடப் புத்தகங்களில் கோட்சேயைப் பற்றித் தகவல் ஏதும் கிடையாது. கோட்சே கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தைப் பார்க்க விரும்பினேன்.அது தடை செய்யப்பட்டிருந்தது. இங்கு எங்கும்கிடைக்கவில்லை. தில்லியில் நேரு நினைவு நூலகத்தில் இருப்பதாக அறிந்தேன்.

சென்னையிலிருந்து தில்லி போனேன். சென்னையிலிருந்து இரு இரவுகள் பயணம்.  எனக்கு தில்லியில் தங்க நண்பர்களோ உறவினர்களோ கிடையாது.விடுதியில்தான் தங்கினேன். இந்தி தெரியாது. ஆனாலும் போனேன். அதைப் படித்தேன். அன்று அங்கு xerox வசதி கிடையாது. குறிப்புகள் எடுத்தேன்.அது எவ்வளவு நெடிய ஆவணம் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். கோட்சே என்ற personalityயைப் புரிந்து கொள்ள அது உதவியது.(இன்று அந்த வாக்குமூலம் May it please your honour என்ற பெயரில் புத்தகமாக வந்திருக்கிறது)

பிர்லா ஹவுசை நேரில் சென்று பார்த்தேன். அன்று அதற்கு இன்று போல தீஸ் ஜனவரி மார்க்கிலிருந்து வாசல் கிடையாது. அருகில் உள்ள தீஸ் ஜனவரி லேனிலிருந்துதான் உள்ளே போக முடியும். ஆனால் அது ஏன் காந்தி மீதான முதல் முயற்சி தோற்றது என்பதைப் புரிந்து கொள்ள உதவியது

காந்தியைக் கொன்ற நேரத்தில் கோட்சே என்ன உடை அணிந்திருந்தான் என்ற தகவலைப் பல இடங்களில் தேடினேன்.அங்கிருந்த ஒரு பிபிசி ரிப்போர்ட்டர் ஒரு eye witness account எழுதியிருக்கிறார் எனத் தெரிய வந்தது. அவர் பெயர் வின்சென்ட் ஷீன் எனத் தெரிந்ததும் பிரிட்டிஷ் கவுன்சில் சென்று தேடினேன். அந்தப் புத்தகத்திற்கு கொலைக்குத் தொடர்பானது என்று ஊகிக்க முடியமல் ஒரு பெயர்: Lead Kindly Light. அது காந்தியைப் பற்றிய புத்தகம்.அவரது கொலையைப் பற்றியது அல்ல. ஆனால் அதில் அவர் கொலைச் சம்பவமும் வருகிறது. அதைப் படித்ததும் ஏன் ராணுவ அதிகாரிகள் அணிகிற உடையை கோட்சே தேர்ந்தெடுத்தான் என்ற கேள்வி எழுந்தது. அவனுக்கு ராணுவத்தில் சேர்கிற எண்ணம் சிறு வயதில் இருந்தது, அவனது தந்தை அதற்கு எதிராக இருந்தார் எனத் தெரிந்தது. ஏன் எதிராக இருந்தார் என்று பார்த்தால் அவர் மாமிசம் சாப்பிடுவதை விரும்பாத பிராமணர். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று.

லாப்பியர் சென்னை வந்தபோது அவரை சந்தித்து உரையாடி சில விஷயங்களைத் தெளிவு செய்து கொண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் ஒரு 15 அத்தியாய நாவல் எழுதுவதற்காக.அது எழுதப்பட்ட காலத்தில் கதை எழுதுகிறவர்கள் அப்படியெல்லாம் மெனக்கிடுவது கிடையாது. காரணம் இதில் அதிக சன்மானம் கிடையாது. அந்த சன்மானத்தையும் ஒரு Boy meets the girl கதை எழுதி சம்பாதிக்க முடியும். ஆனால் நான் அதைச் செய்யவில்லை.

நீங்கள் ஒரு THE MEN WHO KILLED GANDHI யைப் படித்து விட்டு எழுதுகிறீர்கள். MALGONKAR ருடைய அந்தப் புத்தகம் 1981ம் ஆண்டு வெளிவந்ததாக ஞாபகம். (நான் இன்றுவரை அதைப்படித்ததில்லை) ஆனால் நான் என் நாவலை 1980லேயே எழுதி விட்டேன்.81ல் அது பிரசுரமாகிவிட்டது.
 
என்ன, மல்கோங்கர் ஆங்கிலத்தில் வரலாறாக எழுதினார். (என் உங்கள் குறிப்புக்களிலிருந்து நான் ஊகிக்கிறேன்) நான் தமிழில் சில பரிசோதனை முயற்சிகளோடு புனைகதையாக எழுதினேன். 

என்றைக்குமே தமிழ் எழுத்தாளனது முயற்சிகளுக்கு எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடாது. அது இளப்பமாகத்தான் கருதப்படும்.

  .
>>மாலன் போன்ற சீனியரான ஒருவரிடம் இத்தனை சறுக்கல்களா என ஆச்சரியப் படுக்கிறேன்<< (sic)

இதை எழுதியபோது மாலன் சீனியர் அல்ல. அப்போது அவனுக்கு வயது 30. அப்போதுதான் பத்திரிகைத்துறையில் அடியெடுத்து வைத்திருந்தான்.இது அவனுடைய 2 வது நாவல்
 
இதை உங்கள் ப்திவில் வெளியிடுவீர்கள் என் நம்புகிறேன்

அன்புடன்
மாலன்