Thursday 29 July 2010

சுஜாதா.. ஜெயமோகன் .. இலக்கியம்




இது ஜெயமோகன் அவர்களின் வலையில் காணப்படும் கட்டுரைக்கான எதிர்வினை எனக் கொள்ளலாம்

http://www.jeyamohan.in/?p=7505

கேள்வி சுஜாதாவின் மரணத் தருவாயில் அவரால் சொல்லப்பட்ட ஒரு சொற்றொடருக்கு என்ன காரணம் இருக்க இயலும் எனும் ஒரு வாசகனின் கேள்வி . இந்தக் கேள்விக்கு விடை அளிக்க எத்தனித்த திரு. ஜெயமோகன் வழக்கம் போல சுஜாதாவின் எழுத்திற்கான இலக்கிய அந்தஸ்த்து குறித்து எழுதியுள்ளார்.

கட்டுரை ஆயுர் வேத மருத்துவ முறை குறித்து தொடங்கி அது எப்படி இலக்கியத்தோடு ஒப்பிடலாம் என்பதாய் தொடங்குகிறது

Betrand Russel, Inference as a Habit எனும் கட்டுரையில் Syllogism குறித்து விளக்கியிருப்பார்; Syllogism என்றால் இரண்டு வாக்கியங்களை சொல்லிவிட்டு அதன் வழியே மூன்றாவது வாக்கியத்தினை உண்மை என நிறுவ எத்தனிப்பது.
சுஜாதாவின் எழுத்து இலக்கியமா இல்லையா என்பதற்கான ஜெயமோகன் அவர்களின் வாக்கியங்களும் Syllogism முறையிலேயே அமைந்துள்ளன என சொல்லலாம் ஆனால் எடுபடவில்லை

ஜெயமோகன் அவர்கள் உளவியல் சார்ந்த தத்துவ சார்புகளை அதிகம் வாசிப்பவர் , விவாதிப்பவர் என்பது நன்கறிந்த விஷயம் . தர்க்கத்தில் Syllogism நிறைய பங்களிப்புகளை செய்திருந்தாலும் ; தர்க்க சாஸ்திரத்தில் Syllogism கோலோச்சியிருந்தாலும் Betrand Russel , I have never come across any case of new Knowledge obtained by means of Syllogism ; It must be admitted that, for a method which dominated logic for two thousan years, this contribution to the world's stock of Logic for two thousan years, this contribution to the world's stock of Information can not be considered as weighty என சொல்லியிருப்பதை சுட்டிக் காட்ட விழைகிறேன்

ஜெயமோகன் அவர்கள் வழக்கமாக கையாளும் Syllogism இங்கே எடுபடாமல் போவதற்கும் இது தான் காரணம்

பொதுவில் தமிழ்நாட்டில் ஒரு பழக்கம். தானாக வரிந்து நீதிபதியாகி விடுவது. யார் தமிழன் ... எது நடிப்பு .. எதெல்லாம் இலக்கியம் .. இது போன்ற தளங்களில் அளவுகோல்கள் , தராசுகள் , அளவுக் குவளைகளை தன்னிச்சையாக அமைத்துக் கொண்டு களமிறங்கும் நீதிபதிகள்

இப்படி அளப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால் அளவுகோல் தான் விந்தையானது . பதினோரு அங்குல ஸ்கேல். ஒரே தட்டுள்ள தராசு . ஓட்டையான குவளைகள்

ஜெயமோகன் இதற்கு தானும் விதி விலக்கல்ல என்பது போல தெரிவது தான் வேதனை.

Tuesday 27 July 2010

நல்லதோர் வீணை


அழகர் கோவில்- குடும்ப சகிதம் சென்றாலும் கோவிலுக்குள் செல்லவில்லை. நல்லதாக ஆயிற்று. ஆலயத்தின் வெளியே வந்து நிற்கும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கார்கள் வரும் வழியிலிருந்து திடீரென உதயமாகி முண்டாசு நடந்து வருவதைப் பார்த்தேன். வழியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையுடன் பேசுவதற்காக உட்கார்ந்து கொண்டான்.

நான் விரைந்து சென்று அவனையடைந்து பக்கத்தில் நின்றேன். உட்கார்ந்த நிலையிலிருந்தே என்னை நிமிர்ந்து பார்த்தான்

"நீர் இங்கு தான் இருப்பீர் என யூகித்தே வந்தேன்"


" என்னை நீங்கள் தேடினீர்களா " .. நிஜமாகவே எனக்கு ஆச்சர்யம்


"உமக்கு அதில் என்ன சந்தேகம். நீர் பொழுது சாய்ந்து பொழுது விடிந்தால் என்னைத் தேடிக் கொண்டே இருக்கின்றீர்"


எனக்கு சிரிப்பு வந்துவிட்டது ..


"என்ன ஸ்வாமி. இப்படி நகைக்கின்றீர். நாம் இரண்டு தரம் சந்தித்திருகின்றோம். அப்போதெல்லாம் உம்மைத் தேடி நான் வந்தததாக தோன்றும். ஆனால் அகத்தளவிலே நீர் என்னைத் தேடியதால் நான் வந்தேன். நான் சரியாகத்தான் சொல்கின்றேனா"


"நீங்கள் சொல்வதில் என்றைக்குமே பிசகிருக்காது என்பதில் எனக்கு நம்பிக்கை "


"உதட்டளவில் இருக்கிறதோ உங்கள் நம்பிக்கை" என கண் சிமிட்டினான் முண்டாசு


" உங்களிடம் மறைக்க முடியுமா .. எனது சந்தேகம் உங்களைக் குறித்தல்ல. அந்தப் பாட்டில் என்ன சொல்ல வருகின்றீர் என தெளிவு செய்து கொள்ள ரொம்ப நாளாக ஆசை"


"நீர் பாடலைச் சொல்லும் .. அல்ல அல்ல .. பாடியே காண்பியும் "

நல்லதோர் வீணை செய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி - எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்வல்லமை தாராயோபட்ட - இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கேசொல்லடி சிவசக்தி - நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ


விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்நசையறு மனம் கேட்டேன் - நித்தம்நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன்


தசையினைத் தீச்சுடினும் - சிவசக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்அசைவுறு மதி கேட்டேன்


இவைஅருள்வதில் உனக்கேதும் தடையுளதோ

"என்ன உமது ஐயம்"

"உங்களுக்கு சரியானதொரு அங்கீகாரம் கிட்டலைன்னு ஒரு வருத்தம் தெரியறது பாட்டிலே"

"எப்படி இவ்வாறு சொல்கின்றீர் என அறியலாமா ?"

"நலம் கெட புழுதியில் ... சுடர் மிகும் அறிவு .. என்பதாக தாக்குதல் உளதே"

"பராசக்தி !!! இப்படியுமா நினைப்பார் "

"நீங்கள் விளக்கம் சொல்லிவிட்டால் எனக்கு மனசு அமைதியாகும் "

"ஒரு பெரும் முயற்சியில் இருப்பவனுக்கு அது குறித்த அறிவு மட்டும் போதுமா இல்லை அதை செயலாக்க திடமும் மனவுறுதியும் வேண்டுமா "

"இரண்டும் தான்"

"அறிவைக் கொடுத்த சரஸ்வதியிடம் திடமும் மனவுறுதியும் கேட்டுப் பாடியிருக்கின்றேன்"

நான் யுக புருஷனாய் மதிக்கும் அவனை நமஸ்கரித்தேன்

"என் பரி பூர்ண ஆசிர்வாதங்கள். அதோ உமது குடும்பத்தார் வந்துவிட்டனர்"

காற்றிலே கலந்தான்