Tuesday 23 November 2010

பாரதி மொழி பெயர்ப்பு 2

பாரதி தரிசனம் எனும் வகையில் நான் இந்த வலையில் எழுதியவை இவை




யுக புருஷன் என நான் மதிக்கும் ஒரே நபர் முண்டாசு.. அதிருக்கட்டும்

பாரதி தன் கவிதைகளை தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறான் என ஆதாரத்துடன் எழுதினால் அதற்கு பதில் சொல்லாமால் அழுதால் .. எனக்கு சிரிப்பு தான் வருகிறது

கவிதை மட்டுமா .. உரை நடை ஆங்கிலத்தில் இருக்கா என யாராவது கேட்டால்

இருக்கே.. கல்கத்தா தமிழ் சங்கம் தொகுத்திருக்கும் புத்தகத்தின் முகப்பினை இங்கே படம் எடுத்து போட்டிருக்கேன். இந்தப் புத்தகம் என்னிடம் 1993 ம் ஆண்டிலிருந்து இருக்கு

புத்தகத்தின் உள்ளிருந்து மொழிபெயர்ப்புகளையும் படம் எடுத்து போடலாமா..

ச்சே பாவம் அழுகை அதிகமாகிவிடும்

Sunday 21 November 2010

பாரதி ‍ மொழி பெயர்ப்பு






பாரதிக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு இல்லை .. இது சாரு நிவேதிதா ஆனந்த விகடன் 26 நவம்பர் 2010 தேதியிட்ட இதழில் சொல்லியிருக்கும் வசனம்.

தெரிந்தால் எழுதவேண்டும். தெரியவில்லை என்றால் ரெஃபர் செய்து கொண்டு எழுத வேண்டும்.

அட்லீஸ்ட் ஆனந்த விகடன் எடிட்டோரியலாவது இதை வெரிஃபை செய்திருக்கலாம்

பாரதி நூற்றாண்டு விழாவின் ஓர் அங்கமாக சிவகங்கை அன்னம் பதிப்பகத்தார்,

Bharati as a translator என்ற புத்தகத்தை 1982 வெளியிட்டனர். இந்த புத்தகத்தில் பாரதி தனது கவிதைகள் சிலவற்றை தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளதனை பாரதியின் சகோதரர் சி. விஸ்வநாதன் தொகுத்துள்ளார்

1982 ஆகஸ்ட் 17 ம் தேதி இந்தப் புத்தகத்தை தஞ்சாவூரில் வாங்கினேன்.

புத்தகத்தின் முக்கிய பக்கங்களை Photo எடுத்து இங்கே இணைத்திருக்கேன்

பக்கம் பக்கமாய்‍ 2

நண்பர் ஆறுமுகம் தொலைபேசியில் அழைத்தார், " சார் ஒரு சந்தேகம்"

"சொல்லுங்க சார். நல்லாருக்கீங்களா"

"நல்லாருக்கேன். அதாவது.. எழுத்துகள் சம்பந்தமா சில சந்தேகம்"

"கேளுங்க"

" ஒரு மொழியில் இல்லாத சப்தத்தை அந்த மொழியிலே எப்படி சொல்வது எப்படி எழுதுவது"

உரையாடலில் நான் அவருடன் பகிர்ந்து கொண்டதை உரையாடல் நடை தவிர்த்து

க்ளாக்சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் க்ரே மெக்கன்டிரிக்.. இவர் புகழ் வாய்ந்த Principles of Physiolgy ன் ஆசிரியர். இவர் சொன்னது பொருத்தமா இருக்குமென நினைக்கின்றேன்

Nature knows nothing of letters and syllables; words are simple phones or combination of phones and each phone is formed of vibration. This is nature's long hand method of recording speech; written or printed letters are a species of shorthand invented by man

அப்ப எழுத்து முக்கியமில்லயா

Language does not function by the spoken word alone. but may assume all forms of expression, which the physical structure of the organs of speech allow

Julius E Lips தனது Origin of things ல் சொன்னது இது

"எங்கிருந்து புடிச்சீங்க இதெல்லாம்"

"புடிக்கலை படிச்சது.. டிவி மஹாலிங்கம் எழுதுன யெர்லி சௌத் இண்டியன் பாலியோகிராபினு என் அப்பா வச்சிருந்த புக்..1982 லே 16 ரூபாய்க்கு வாங்கிருக்கார்.. .. மதராஸ் யுனிவர்சிட்டி பப்ளிகேஷன்..

சரி தான் மஹாலிங்கம் புக்ஸ் எதும் ஆன்லைன்லே கிடைக்குதானு தேடினா ஃப்ளிப் கார்ட்டிலே பல்லவா இன்ஸ்க்ரிப்ஷன்ஸ் அப்படினுன்னு ஒரு புக் ஆறாயிரம் ரூபாய் வாங்கிடணும்"

"நீங்க சொன்ன புத்தகம் படிக்க கிடைக்குமா படிச்சுட்டு ரிடர்ன் செய்துடறேன்"

" வக்கீல் சார் நீங்களும் எனக்கு ரத்தன்லாலின் கமென்ட்ரி ஆன் இந்தியன் பீனல் கோட் தரேன் தரேன்னு சொல்லிட்டே இருக்கீங்க.. இன்னும் தரலை"

"தந்துடறேன் சார்.. சரி அப்ப போனை வச்சிரவா"

மஹாலிங்கம் புக்லேர்ந்து இன்னொரு சுவாரசியமான சமாச்சாரம் தரேன்

"ஜூலியன் ஹக்ஸ்லி என்பவர் கொரில்லா குரங்கின் வினோத நடவடிக்கை ஒன்றை பதிவு செய்து இருக்கார்

அதாவது கொரில்லா குரங்கு ஒன்னு மிருகக் காட்சி சாலையில் சுவற்றில் விழுந்த தன்னோட நிழல் அவுட் லைனை அப்படியே வரைஞ்சதாம்

லெனார்ட் பொவென் இப்படி இன்னொன்னு சொல்லிருக்கார் rhesus குரங்குகள் இதே போல தன்னோட கையை தரையில் வச்சி அதோட அவுட் லைனை குச்சி வச்சு வரையுமாம்"

"ஓ இன்ட்ரெஸ்டிங்"

"ஆனா இந்த கொரில்லா, குரங்கு சமாச்சாரம் உங்களுக்கு தன்படம் தானே வரையும் யாராவது ஜோக்கர்களை நினைவுபடுத்தினால் அது ஜஸ்ட் கோயின்சிடன்ஸ்

Wednesday 17 November 2010

நாஞ்சில் நாடன் தமிழ்


நாஞ்சில் நாடன் தமிழ்

தொடற்ச்சி‍‍ - ‍‍ இப்படி தமிழ் வார்த்தை இருக்கா

ற்ச் ‍ ‍ இப்படி வல்லின மெய் ஒட்டி வரலாமா

Sunday 14 November 2010

பக்கம் பக்கமாய்‍‍ 1


பாடப் புத்தகங்கள் தாண்டி மற்ற புத்தகங்களை எப்போது படிக்க ஆரம்பித்தேன் என என் நினைவுகளில் தேடினால் கிடைக்கவில்லை.. அரசாங்கம் சார்த்த வேலையில் இருக்கும் போது ஒரு அரசியல் தலைவர் எனக்கு பரிசாக வழங்கிய சுபாஷ் சந்திரபோஸ் குறித்த புத்தகம்.. பாரதிய வித்யா பவனின் ,"பவான்ஸ் ஜர்னல்" என என் ஆதி நினைவுகளில் இரண்டு புத்தகங்களின் நினைவுகள் முன் வந்தன.. "என்னைத்தான் நீ முதலில் படிச்சே" என இரண்டும் சண்டை பிடிப்பதாக ஒரு காட்சி அமைத்துப் பார்த்தேன்.

சில்வர் டங் சீனிவாச சாஸ்திரி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். I am not a man of one book or of a few Select Books என‌

அது போலத்தான் நானும்..கிடைத்ததை வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பதிலும் புத்தகங்களை தேடிக் கொண்டே இருப்பதிலும் எனக்கு ஒரு போதும் சலிப்பு வருவதில்லை..

நண்பர்கள் வட்டத்தையும் அப்படியே அமைத்துக் கொள்வதில் கவனம் செய்கிறேன்.. புத்தகப் பிரியர் எனில முதல் வரிசை .

நான் சோஷியல் நெட்வொர்க்கிங்கில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை ஆயினும் இப்போது சமீபமாக ஃபேஸ் புக். டிவிட்டர் என சில நிமிடங்கள் செலவு செய்கிறேன்.. இந்த தளங்களை நல்ல புத்தகங்களை குறித்த தகவல் பரிமாறும் இடமாக உபயோகிக்கலாம் என ஓர் ஐடியாவில்.. இந்த பக்கம் பக்கமாய் தொடர்

இங்கே நான் படித்த படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள். கேட்ட நல்ல சங்கீதம் இப்படி சொல்லலாம் என நினைத்து தொடர்கிறேன்.

பக்கம் பக்கமாய் என்றால் பேஜ் பேஜாக எனவும் அருகாமை எனவும் அர்த்தம் வருகிறதே என நண்பர் சொன்னார்.. ரெண்டும் ஒன்னு தான்னு சொல்லிட்டேன்.

முதல் அத்தியாயப் படம் நான் விரும்பி படித்த சிலரின் படத்துடன் தொடங்கிவிட்டால் ஒத்த சிந்தனை உள்ளவர் பக்கமாய் வருவர்.. அல்லாதார் இந்த பக்கமே வரமாட்டார் இரண்டுமே உனக்கு நல்லது என அந்த நண்பரின் ஐடியா

(இந்தப் பக்கம் வந்தவர் என் பக்கம்.. இந்தப் பக்கம் வராதவர் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது)

திருவள்ளுவர் 1(மீண்டும் சுஜாதா‍)


"சார் அது ஒன்னுமில்லை.. நீங்க எழுதினதுக்கும் இப்ப பூமில தமிழ்ல மத்தவங்க எழுதறதுக்கும் என்ன வித்தியாசம்".

'சிம்பிள் அது நான் எழுதினது. அது அவங்க எழுதினது"..

"அதில்லை சார்.. நீங்க ஒரு பெரிய ட்ரன்ட் செட்டர்.. உங்க மாதிரி வரணும்னு பலர் ஆசைப் படறாங்க அதனாலே கேட்டேன்"

"என்னை ஒரு பெஞ்ச் மார்க் ரேஞ்சுக்கு நான் என்னிக்குமே நினைச்சுன்டது கிடையாது.. நான் எழுதினதை நானே இவாலுவேட் பண்ணி நான் இத்தனை எழுதிருக்கேன் .. இதுல இத்தனை செறிவு இருந்தது .. இருக்கு. அப்படினு சொல்றதுக்கு எனக்கு தகுதியும் ஸ்டாண்டும் இருந்ததா நினைச்சுன்டதே இல்லை. எனக்கு நல்ல பாப்புலாரிட்டி இருந்ததுனு தெரியும்.. அதனாலே நான் யாரைப் பத்தி ஒரு வரி எழுதினாலும் அவங்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம்.. அவர்கள் அதை ஒரு நல்ல ஐடென்டிபிகேஷனாக எடுத்துன்டாங்க.. நான் படிப்பேன் நல்லாருந்தா ஒரு வரி எழுதுவேன்னு ஆசைப்ப்பட்டு நிறைய பேர் எனக்கு பொஸ்தகம் அனுப்புவாங்க‌

நானு படிச்சுட்டு பிடிச்சிருந்தா.. நல்லாருக்குனு ரென்டு வரி சொல்லுவேன். பிடிக்கலேன்னா ஐ வில் கீப் மை ஒப்பினியன் வித் மி.. நான் யாரையும் இவர் சரியா எழுதறதில்லைனு சொன்னதா நினைவில்லை.. அப்படி சொல்லிருந்தா நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.. பொதுவாக ஒன்னு சொல்லலாம், தமிழ் இலக்கியம், இன்டியன் பிலாசபி படிக்க ஆரம்பிச்சாலே காதுகிட்ட கொஞ்சம் ஜிவ்வுனு இருக்கும் .. நமக்கு எல்லாமே தெரிஞ்சுடுத்துனு ஒருமாதிரி ஆய்டும்.. இது உலகத்திலே வேற யாருக்குமே தெரியலேன்னு ஒரு மாதிரி அகங்காரமான மோகம் வந்துடும்.. ஆனால் இதெல்லாம் மேம்போக்கா எனக்கு தெரிஞ்சிருக்குனு உனக்கு தெரியலேன்னு காட்டிக்க படிக்கிறவங்ககிட்ட இருக்கும்.. இந்தியன் பிலாசபி பத்தி இராதாகிருஷ்ணனும்.. நம்ப காஞ்சி ஸ்வாமிகளும் தெரிஞ்சி வச்சின்டு இருந்ததைவிட இப்ப அது பத்தி மாஞ்சு மாஞ்சு எழுதறவங்களுக்கு தெரியும்னு சொல்ல முடியாது.. பரமாச்சார்யாளும் இராதகிருஷ்ணனும் இப்படி ஜிவ்வுனு காத்துல மிதக்கலை"

அப்போது அவர்களுக்கு கைட் போல நியமிக்கப்பட்டவர் தனது ஜிப்பா பாக்கெட்டில் சப்தமிட்ட ஒரு கருவியை எடுத்து அதில் தெரிந்த செய்தியைப் படித்தார்..

" ரங்கராஜன்.. உங்களது முதல் மேலுலக சந்திப்பு இன்னும் ஒரு மணி நேரத்தில்.. அடுத்து இருக்கும் வசந்த மண்டபத்தில்.. நீங்கள் சந்திக்க இருப்பது திருவள்ளுவரை"

சுஜாதா அவரை நோக்கி நட்புடன் புன்னகைத்தார்..

" ஓ வள்ளுவரா எனக்கு குறள்ல நிறைய சந்தேகம்.. அதும் தர்ட் பார்ட்லே..."

கணேஷ் வசந்தின் முதுகில் "பளார்" என ஒன்று வைத்தான்

(தொடரும்)

ரகசி‍ பார்ட் 2


பார்ட் 1 படிக்க க்ளிக் செய்யவும்


"என்னடா இது அனுராதானு ஒன்னோட ஆத்துக்காரி பேர் தந்தால் யாரோட படமோ வரது"

"போங்கோ ப்ரொபசர் இதுக்கு தான் வேண்டாம்னேன். இப்ப வரலஷ்மினு மாமி பேர் தந்து ஒங்க மெமரியை ஸ்கான் செய்தால் மாமி படம் வருமா இல்லை எஸ் வரலஷ்மி படம் வருமானு பார்க்கலாம்"

"எனக்கு வரலஷ்மியெல்லாம் ப்ரேமை இல்லை.. நான் தீவிர தேவிகா ஃபேன்.. சரி அதை விடு.. இதுலேர்ந்து என்ன தெரியறதுன்னா ராஜர் ஸ்பெரி, மைக்கெல் காஸானிகர் சொன்னது நிஜம்னு"

" யாரு அவாள்லாம்"

"சரியாப் போச்சு .. கலிபோர்னியாவைச் சேர்ந்தவா.. ஸ்பிளிட் பர்சனாலிட்டி பத்தி ரிசர்ச் செய்திருக்கா.. ஸபெரிக்கு நோபெல் பரிசு கூட கிடைச்சது"

" ஓ நோபெல்"

"என்னடா ஓ நோபெலா

"யாராவது நோபெல் ப்ரைசஸ் வாங்கினா . அவரை எனக்கு எட்டாங்கிளாசிலேயே தெரியும்.. நான் ஒம்பதாங்கிளாஸ் படிக்கும் போதே அவரோட ரிசர்ச் பத்தி படிச்சிருக்கேன்னு சொல்லிண்டு திரிய நானென்ன ஓசி பாசியா"

"சரி ப்ரொபசர் விஷயத்துக்கு வருவோம்.. இப்ப இந்த ரகசியாலே என்ன காரியம் ஆகும்".

"என்ன இப்படி கேட்டுட்ட .. இது மாதிரி ஒரு லை டிடக்டர் உண்டா சொல்லு இன்னி தேதிக்கு. போலிசிலே இதை வச்சின்டு ஒரு அக்யூஸ்ட் க்ரைம்லே தொடர்பு வச்சிருந்தானா இல்லையானு நிமிஷத்துல கண்டு பிடுச்சுரலாம்.. மிலிட்டிரி ஆப்பரேஷன்லே எத்தனை உளவாளிகளைப் பிடிப்பா.. அவன்கிட்ட என்ன தகவல் இருக்குனு சுலபமாக சொல்லிடலாமே"

"எக்ஸலென்ட் .. அதே மாதிரி டாக்டர்ஸுக்கும் ரொம்ப யூஸ் ஆகும்".

"அதே தான்.. இப்ப இதோட அல்காரிதம் பத்தி சொல்றேன் கிட்ட வா"

(தொடரும்)