Saturday 14 June 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி-3


”நாளை சென்னை வருகிறேன்.. இந்த விமானத்தில் வருகிறேன்” என்று கிராமர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து ஒரு இமெயில்.. மனுஷன் அமெரிக்கா போயிருந்தார். அவரோட மூத்த பையன் அங்கே இருக்கான். ஒரு மாசம் இருந்துவிட்டு வருகிறார்.. ஒரு சர்ப்ரைஸ் தரலாமே என்று ஏர்போர்ட் போயிருந்தேன்.

சென்னை ஏர்போர்ட் நிர்வாகம் இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. டாய்லெட் இத்தனை சுகாதாரக் குறைச்சலாக இருக்க வேண்டாம்..


விடிகாலை நேரத்தில் வந்த அந்த விமானத்தில் தான் கிராமர் கிருஷ்ணமூர்த்தி வந்தார். என்னை ஏர்போர்ட்டில் எதிர்பார்ர்கவில்லை..


“என்னப்பா வேற யாரையும் ரிசீவ் பண்ன வந்தியா”

“இல்ல சார் உங்கள அழைச்சிண்டு போகத்தான் வந்தேன்”

“சரி வா போகலாம்”

”பயணம் எல்லாம் எப்படி சார் பையன்,, மாட்டுப்பொண்ணு எல்லாம் சௌக்கியம இருக்காளா.. உங்க பேரப் பசங்க”

“எல்லாம் சௌக்க்கியம்.. ரொம்ப சுத்தி பாக்க முடியல.. ஆனா முக்கியமான சில இடம் பார்த்தோம்.. பையன் எல்லாம் வீடியோ எடுத்தான்.. கொண்டு வந்திருக்கேன்.. சாவகாசமா பார்க்கலாம்.. ஆமா நீ உன் கார்ல தானே வந்தே”

“ஆமாம் சார்.. ஏன் கேட்றேள்”

“இல்லப்பா.. இங்கேர்ந்து போனேன் இல்லியா .. எம் பையன் ஏர்போர்ட் வந்திருந்தான். ஆனா டாக்ஸி பிடிச்சி வந்தான்.. ஏன்னு கேட்டேன்.. தன் கார் சின்னது.. நாலு பேர் தான் சௌகரியமா போலாம்.. இப்படி ஏதேதோ சொன்னான்.. அதான் கேட்டேன்”

“ஓஹோ... இப்படியெல்லாம் யோசிக்கணுமா”

“ஏம்பா பொஸ்தகம் வேணுமின்னு மெயில் பண்ணியே.. இங்க மதராஸில கிடைக்காததா”

”அதில்ல சார்.. அங்கெல்லா எல்லா பொஸ்தகமும் பேப்பர் பேக் எடிஷன் வரும்னு ஒரு சிநேகிதன் சொன்னான்.. அதான்.. சரி நீங்க தான் போய்ருக்கேளேனு ஒரு மெயில் அனுப்பினேன்”

“அது சரி.. பொஸ்தகம் பேர் சரியா அனுப்ப வேண்டாமா.. வெறுமன எழுதினவன் பேரு மட்டுமிருந்தா போதுமா பொஸ்தகப் பேரு.. யார் பப்ளிஷர் இதெல்லாம் வேண்டாமா”

இதற்குள் அவர் வீடு வந்துவிட்டது..

“ஏம்பா உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. கோலத்து மேல காரை நிறுத்தாதேனு.. எத்தனை சிரமப்பட்டு கோலம் போடறா.. பாரு டயரை தேச்சி நிறுத்தி அழிச்சிட்டே”

“ I am sorry Sir.. I will not repeat this again”

மாட்டிக் கொண்டேன்..

ஆங்கில சொற்றொடருக்காக மனுஷன் காத்திருந்த மாதிரி தோன்றியது..

“நீ உள்ள வா”... முகம் கொஞ்சம் கடுப்பாக இருக்கிறதோ

“இல்ல சார் பிரயாணக் களைப்பாயிருக்க்கும்.. நீங்க ரெஸ்ட் எடுங்கோ நான் அப்புறமா வர்றேன்”

“இல்ல ரெண்டு நிமிஷம் கூட ஆகாது”

சரி இனி தப்பிக்க முடியாது

“சந்துரு இந்தா இத தமிழில் எழுது” .. ஒரு பேப்பரில் எதையோ எழுதிவிட்டு நீட்டினார்..

I WILL NOT REPEAT என்று இருந்தது.. அதற்கு எதிரே.. நான் மறுபடியும் செய்ய மாட்டேன் என்று எழுதி அவரிடம் நீட்டினேன்

“பாத்தியா இங்க சரியா எழுதின.. வாசல்ல என்ன சொன்னே I will not repeat this again-- repeat னு சொன்னாலே மறுபடியும்னு தானே அர்த்தம் அப்புறம் ஏன் ஒரு again எக்ஸ்ட்ராவா.. அது தப்பு .. இப்ப கிளம்பு..

“சரி சார் வர்றேன் .. நீங்க ரெஸ்ட் எடுங்கோ

காரை ஸ்டார்ட் செய்யும் போது யோசித்தேன்.. இனிமே இவர்கிட்ட இங்லீஷ்ல பேசக்கூடாது.. ஒரு வார்த்தை கூட ஆமா I will not repeat this …

4 comments:

cheena (சீனா) said...

இயல்பாகச் செய்யும் தவறு தான் - சூபர் ப்ஃஉளூயஸாகச் சொல்வது தான்

தவிர்க்க வேண்டும் - தவிர்ப்போம்

cheena (சீனா) said...

அண்ணன் கண்ணன் அருமையாக நண்பரை கண் முன்னே நிறுத்துகிறார்

நல்வாழ்த்துகள்

மங்களூர் சிவா said...

நல்லா சொல்லியிருக்கீங்க!

Jawahar said...

விடுங்க சார், He does n't know nothing

http://kgjawarlal.wordpress.com