Sunday 27 July 2008

கடிதம்-2



கடிதம் என்று சொன்னாலே காதல் இல்லாமல் இருக்காது. எனது குடும்ப நண்பர் ஒருவர் ”பேனா நண்பராக” ஒரு பெண்ணுடன் அறிமுகமாகி ரொம்ப நாள் சுவாரசியமாக கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

அந்தப் பெண் தீடீரென “ஐ லவ் யூ” என்று கடுதாசி போட்டுவிட்டது. மனுஷன் முதலில் தயங்கினார். என்னைப் போல புண்ணிய ஆத்மாக்கள் எதற்கு இருக்கிறோம்.. அவரை உசுப்பேத்தி சம்மதம் பெற்றோம். அதன் பின் இரண்டு கடிதங்கள்.. அந்தப் பெண் இலங்கையிலிருந்து வந்த அகதி என்று தெரிந்தது. நண்பர் குடும்பம் அவசரமாக அவருக்கு சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள்.. அந்த இலங்கைப் பெண் என்ன ஆனாள் என்று தெரியவில்லை..

அகிலன் அவர்களின் “ஆனால் “ என்ற கதையை என்னால் மறக்கவே முடியாது.. 1954 லிலேயே இத்தனை சுவாரசியமான ஒரு கதை இருந்திருக்க முடியுமா என்று இப்போதும் வியக்கிறேன்.
திருச்சியிலிருக்கும் கல்யாணராமன்.. குன்னூரிலிருக்கும் தியாகராஜன் இவர்களின் கடிதங்களே கதை.

கதை 1954 செப்டம்பர் 15 கல்யாணராமனின் கடிதமாய் தொடங்கி அதே செப்டம்பர் 30 தியாகராசனின் அவசரத் தந்தியுடன் முடிகிறது.

அப்போதே பெண்களை இவ்வளவு உன்னிப்பாக “அப்சர்வ்” செய்யும் பழக்கம் இருந்திருக்கிறது.

ஹாய்ஸத்துக்குப் பஞ்சமில்லாத நடை.

(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

No comments: