Sunday 26 September 2010

எந்திரனுக்கு தடை வருமா ?


ரஜினிகாந்த் நடித்து வெளியிடப்பட இருக்கும் எந்திரன் திரைப்படத்திற்கு தடை விதிக்கலாமா என அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது

காரணம் என்னவாக இருக்கும் என விசாரித்ததில் திடுக்கிடும் உண்மை வெளியாகி இருக்கிறது

பிரபல விதூஷகர் இந்த திரைப்படத்திற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்னும் அக்கறையில் தனக்கு முதல் காட்சிக்கு ஓசி டிக்கெட் கிடைக்குமா என ஏறக்குறைய யாசகன் ரேஞ்சுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அரசின் கவனத்திற்கு வந்ததால் அரசு அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருக்கிறது. அந்த பிரபல விதூஷகரின் பல லட்சம் அபிமானிகள் தியேட்டர் வாசல்களை முற்றுகை இடும் அபாயம் இருப்பதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதனால் திரைப்படத்திற்கு தடை விதிக்கலாமா என அரசு யோசிப்பதாக தெரிகிறது. அரசு தரப்பிலிருந்து ஓர் உயர் அதிகாரி அந்த விதூஷகரை தொடர்பு கொண்டு சமாதானம் செய்த்ததாகவும் தெரிகிறது. எப்படியும் முதல் காட்சிக்கே டிக்கெட் ஏற்பாடு செய்துவிடுவதாகவும் , கவலை மிகுதியால் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் அளவுக்கு அதிகமாக கடன் வைத்து உற்ச்சாக பானம் அருந்திவிட வேண்டாம் என அந்த அதிகாரி அந்த விதூஷகரை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது . அரசு அதிகாரியின் சமாதான பேச்சு அந்த விதூஷகரின் வருத்தத்தினை பூஜ்யம் டிகிரிக்கு கொண்டு வந்ததா என அவரது அபிமானிகள் கவலையுடன் காத்திருப்பதாக தகவல்.. இந்த விஷயத்தில் ரஜினி என்ன நினைக்கிறார் என என அவரை தொடர்பு கொண்ட நிருபர் ஒருவரிடம் ," அளவுக்கு அதிகமாக உளறுபவருக்கும் அளவுக்கு அதிகமா தன் போட்டோவை தானே பார்த்துக்கொள்பவருக்கும் தன் அனுதாபம் எப்பவும் உண்டு" என சொன்னதாகத் தெரிகிறது

5 comments:

Anonymous said...

இது நிஜமா ????
நம்ப முடியவில்லை.
அன்புடன் ராகவன்.வ

Vasu. said...

Moulee,

Let's not attach too much importance to him. That guy will do anything for publicity.

Unmaivirumpi said...

Simply great...

KML said...

Hmmm Interesting...
Let's wait and watch what happens.

BalHanuman said...

அன்புள்ள மௌளீ,

மிகவும் அருமை. உங்கள் பணி தொடரட்டும்.