Friday 27 January 2012

எனக்கும் "பத்ம" விருது

நேற்றைக்கு பேப்பரில் முதல் பக்கததில் பத்ம அவார்ட்ஸ் படத்துடன் தொடங்கியது. இன்னாருக்குக் கொடுத்திருக்கலாம் என்பதான அபிப்ராயங்கள் ஆங்காங்கே அலசப்பட்டன

வழக்கமாக மாம்பலத்தில் பகல் 2 மணிக்கு கரண்ட் நின்று 3 மணிக்கு வரும். விடுமுறை தினமாதலால், ஒரு மணிக்கே சாப்பிட்டு விட்டு, தூக்கத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். கையில் கிண்டில், இன்னொரு பக்கம் இந்த லாப்டாப், வழக்கமாக சில புத்தகங்கள். இரவு எட்டு மணிக்கு டி வி தரமாட்டோம் வேட்டையாடு விளையாடு பார்க்க வேண்டும் என்பதான ரிசர்வேஷன் குரல்கள்.

அந்த சமயத்தில் எனக்கும் ஒரு பத்ம அவார்ட் கிடைத்தது

ஃபேஸ் புக் இன்பாக்சில் ஒரு தகவல் இருக்கிறது படி என்றது சிவப்புக் கலரில் 1

திறந்தேன்

Can you explain "Nietzsche's Eternal Recurrence Theory" ? Can it be correlated to Indian Philosophy?

Was reading Jeyamohan's "Jagan Mithyai" in Thisaikalin Naduvae Collection, so got interested to know more about it from you.

என்று ஒரு தகவல்

நான்,

சொல்றேன்.. ஆனால் chat ல் சொன்னால் சுவையிருக்காதே.. ஞாயிறு அன்றைக்கு அழைத்துப் பேச இயலுமா. நீங்க என்னை அழைச்சாலும் ஓகே தான். 98406-56627

என்று பதில் அனுப்பினேன்

அங்கிருந்து

Neenga unga profilela pottelnale santhosham thaan.... I have big group of friends with whom I can share your writings.They all love ur writings, I often share urs in my group.


செய்தி அனுப்பியது பத்ம ப்ரியா

இதனையே எனக்கு வழங்கிய பத்ம அவார்ட் என சந்தோஷிக்கிறேன்

அப்பா சொல்லித்தான் முதலில் நீட்ஷே படிக்கத் தொடங்கினேன். அதுவும் எங்கே வைத்து என்கிறீர்கள். பெருவுடையார் ஆலயம் என அறியப்படும் ஆவுடையார்கோவிலில் வைத்து படிக்க ஆரம்பித்தேன்

திருவாசகத்தில் ஆனந்தத்து அழுத்தல் என 10 பாடல்களில் ஒரு பாடல் ஞாபகத்துக்கு வருகிறது

நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை
யேய வாக்கினால்
தினைத்த னையு மாவ தில்லை சொல்ல
லாவ கேட்பவே
அனைத்து லகு மாய நின்னை ஐம்பு
லன்கள் காண்கிலா
எனைத்தெ னைத்த தெப்பு றத்த தெந்தை
பாத மெய்தவே.


உலகம் அனைத்திலும் அவனே இருக்கிறான் அவனை அடைய மனம், ஐம்புலன்கள் , வாக்கு இவை உதவுமா என்றால் இந்த அந்தகரண introvert சங்கதிகள் கூட பிரபஞ்சத்தில் இருக்கும் சாதாரண மெட்டீரியலை நுகர்வதற்கே பயனாகின்றன. காரணமான பரமனை வழிபடுவதற்கு அவை கொஞ்சம் கூட பயன் தரமாட்டா

பத்ம ப்ரியாவிற்கு: நீங்கள் கேட்டது அவசியம் எழுதுகிறேன்.. இன்றைக்கு லேசாக மாணிக்கவாசகனை வைத்து Eternal Recurrence, ஜஸ்ட் தொடங்கி வைக்கிறேன். சில தினங்களில் விரிவாக எழுதுகிறேன்

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - பத்ம விருது வந்ததற்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ..........# கொடுத்து வச்சவரையா - பதம் விருது தேடி வருது .......

VSK said...

வாழ்த்துகள் 'பத்ம' மௌலிஜி!
வழக்கமாக ஏதேனும் சாதனைக்குப் பின்னரே இதுபோன்ற விருதுகள் வழங்கப்படும். ஆனால், உங்கள் மேல் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையினால், இந்த 'பத்ம' விருது, நீட்சே பற்றி எழுதும் முன்னரேயே வந்துவிட்டது! இனி விருதுக்கான கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :))

BalHanuman said...

அன்புள்ள மௌளீ,

உங்களுக்கு நீட்ஷேவை அறிமுகப்படுத்தியது உங்கள் அப்பாவா ? வியப்பாக இருக்கிறது. அவர் உங்களுக்கு ஒரு சிறந்த தோழராக இருந்திருக்கிறார் என்று புரிகிறது.

திருவாசகத்துடன் ஆரம்பித்தது மிகச் சிறப்பு. திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார். பத்ம ப்ரியா புண்ணியம் கட்டிக் கொண்டார். இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...