Tuesday 17 February 2009

திரு. மாலன் அவர்களின் பெருந்தன்மை


திரு. மாலன் அவர்களின் ஜனகணமன என்ற நூலுக்கு நான் எழுதிய விமர்சனம் இங்கே (http://mowlee.blogspot.com/2009/02/blog-post_14.html)

இதனை சுட்டி திரு. மாலன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவரிடமிருந்து ஒரு நீண்ட பதில் மின்னஞ்சல் வந்திருந்தது

அதனை இங்கே அப்படியே பதிகிறேன். திரு. மாலன் அவர்கள் எனது விமர்சனத்தை ஆங்காங்கே அப்படியே பதிந்து அதற்கு அவரின் பதிலையும் ஆங்காங்கே தந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. 

திரு. மாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. 
---
இனி திரு, மாலன் அவர்களின் மின்னஞ்சல் 

அன்புள்ள திரு. சந்திரமெளலீஸ்வரன்,

வணக்கம்.

ஜனகணமன பற்றிய தங்கள் விமர்சனம் கிடைத்தது. மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு நூலை ஆராய்ந்திருக்கிறீர்கள் அதை விட முக்கியம், உங்கள் கருத்தை நூலெழுதியவருக்கு அனுப்பி அவரது கருத்தை அறிந்து கொள்ள மேற்கொண்டிருக்கும் முயற்சி.(நீங்கள் விமர்சிக்கிற எல்லா நூல்களுக்கும் இப்படி செய்கிறீர்களா அல்லது நான் 'வலை'யில் அகப்படுபவனாக இருப்பதால் எனக்கு இது நடக்கிறதா என அறிந்து கொள்ள ஆவல். எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியே. உங்கள்முயற்சிக்கு நன்றி.

என்னுடைய கோணத்திலிருந்து சில தகவல்கள். இவற்றை. விளக்கங்களாக ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

1. "இந்த சின்னத் தகவல் இன்றளவில் கூகிளில் கோட்சே என்று தட்டினால் ஷண நேரத்தில் தகவல் வந்து விழுந்து விடும்."

நான் ஜனகணமனவை எழுதியது 1980ம் ஆண்டு. அதாவது 29 வருடங்களுக்கு முன்பு. அப்போது கணினி இ¨ணயம், கூகுள் எதுவுமே எனக்குப் பரிச்சயமாகியிருக்கவில்லை. என்னுடைய தேடுதலுக்கு நான் நூலகங்களையும் நூல்களையுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அது க்ஷண நேர வேலை அல்ல. அப்போது இது குறித்து அதிக நூல்களும் இல்லை

2.ஜணகணமன அதே கால கட்டத்தில் தினமணிக் கதிரில் தொடராக வெளிவந்தது.(அப்போது நான் தினமணி ஆசிரியரல்ல)பத்திரிகைத் தொடர்கதைகளுக்கு உரிய சில வரம்புகளும் நிர்பந்தங்களுக்கும் உட்பட அதை எழுத நேர்ந்தது. என்ற போதிலும் அதில் பல சோதனைகளை செய்து பார்க்க முயற்சித்தேன். (ஒரே ஒரு கற்பனை பாத்திரம்.தியேட்டரிகல் உத்தி) என் முன் தலைமுறையில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வை என் அடுத்த தலைமுறைக்கு சொல்ல முற்படும் முயற்சி. (அதனால்தான் என் மகனுக்கு எழுதிய கடிதம்)

3.அதன் முதல் பதிப்பு 1988ல் வெளிவந்தது. கிழக்கின் பதிப்பாக நீங்கள் பார்ப்பது நான்காம் பதிப்பு.

4."சுதந்திர இந்தியாவின் முதல்பயங்கரவாதம்- காந்தியின் கொலைக்கு புத்தக ஆசிரியர் மாலன் தந்திருக்கும் ஓர் அடைமொழி." அட்டையின் முகப்பில் நீங்கள் காணும் வரிகள் என்னுடையது அல்ல. பதிப்பகத்தாருடையது. அந்த அட்டை வரியும் 'தீவிரவாதம்' என்றுதான் குறிப்பிடுகிறது  நீங்கள் குறிப்பிடுவது போல பயங்கரவாதம் என்றல்ல.

5."தன் குரலைச் சொல்ல சந்தர்ப்பம் தந்து மேல் முறையீடு செய்வதற்கும் வாய்ப்பளித்து May It Please Your Honour எனத் தொடங்கி சுமார் 140 பத்திகளுடைய ஒரு நீண்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கும் பொறுமை பெற்றதாய் இருந்த்து அந்த சுதந்திரம்."அது ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற நீதிமன்ற நடைமுறை  

இனி உங்கள் கருத்துக்கள் மீது:

காந்தி மேற்கொண்ட கடைசி உண்ணாவிரதம் ரூ.55 கோடி விவகாரத்தினால் அல்ல, இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக என டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் செய்தியின் காரணமாக நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது. அதற்கு அப்படி ஒரு கோணம் உண்டு. ஆனால் எனது கோணத்திற்கான ஆதாரமாகக் கருதுபவை:

1.மவுண்ட்பேட்டனின் Press attache ஆக இருந்த ஆலம் கேம்பல் ஜான்சனின் 12 ஜனவரி 1948க்கான நாட்குறிப்பு:

"During his talk with Mountbatten, Gandhi went out of the way to ask for a frank opinion about India's refusal to pay to Pakistan the fifty-five crores from the cash balances, which Mountbatten did not hesitate to give him, saying that he considered the step to be both unstatesmanlike and unwise  
காந்தி மவுண்ட்பேட்டனிடையே நடந்த இந்த சந்திப்பு, அவர் தனது பிரார்த்தனைக் கூட்டத்தை முடித்து விட்டு வந்த பின் நடந்தாக ஆலன் குறிப்பிடுகிறார். இந்த சந்திப்புக்கு காந்தியே முன் முயற்சி எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

2.காந்தியின் கடைசி உண்ணாவிரதம் குறித்து லாரி காலின்ஸ் & டொமினிக் லாப்பியர் எழுதுவது: " But the fast also perplexed many, because unlike Calcutta, no out burst of violence had preceeded Gandhi's sudden decision to begin it. Delhi was tense, but the communal massacres in the city had stopped"

3.அதே ஆசிரியர்கள்: " Gandhi's decision to make the payment to Pakistan of its 550milllion rupees a condition for ending his fast also infuriated a wide segment of public opinion and divided the Indian Government"

4 அதே ஆசிரியர்கள்; Just before midday (Jan.13 1948) the members of that cabinet gathered around the man who was becoming again the conscience of India. Headed by Nehru and Patel, they had abandoned their sumptuous office buildings to hold a cabinent meeting around the charpai of the man who had opened the doors of those edifices for them.The subject that brought them to Gandhi's bedside was his demand for the payment of Pakistan's  550 million rupees.

இவற்றிலிருந்து நாம் வரக்கூடிய முடிவுகள்:

1.இந்தியா, பாகிஸ்தானுக்குரிய 55 கோடி ரூபாயை கொடுக்க மறுப்பது குறித்து காந்திக்கு மனஉளைச்சல் இருந்திருக்கிறது.
2.ஆனால் அதைக் குறித்து நிர்வாக ரீதியாக சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள அவர் விரும்பியிருக்கிறார்.நேரு படேல் இருவரது கருத்திற்கு அப்பால் ஒரு Neutral Opinionஐ அவர் பெற விரும்பியிருந்திருக்கலாம். அந்தத் தெளிவு கிடைக்குமுன் அவர் பிரார்த்தனை கூட்டம் போன்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அது குறித்துப் பேசுவதை தவிர்த்திருந்திருக்கலாம்
3.அவர் உண்ணாவிரதம் ஆரம்பிக்கும் போது தில்லியில் பதற்றம் தணிந்திருந்தது
4.அவர் இந்து முஸ்லீம் பிரசினைக்காக ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். எனவே அந்த ஒரு காரணம் மட்டும் அமைச்சரவையைப் பதற்றமடையச் செய்திருக்காது.
5.இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கான உண்ணாவிரதம் என்ற ஒன்று மட்டுமே அவரைக் கொலை செய்வதற்கான Provocationஆக கோட்சே-ஆப்தேக்கு இருந்திருக்காது


>>எட்டாம் அத்தியாயம் விஷ்ணு கர்க்காரே டெல்லிக்கு வந்தும் தனக்கு துப்பாக்கி கிடைக்கவில்லையே என அங்கலாய்க்கும் வரிகளுடனும் அதற்கு குவாலியர் பக்கம் தானே போய் வாங்கி வரலாம் என்ற சமாதனத்துடனும் முடிகிறது. இங்கேயும் தகவல்களில் முரண்பாடு. இரண்டாவது கொலை முயற்சிக்கு டெல்லிக்கு வரும் ஆப்தேயும் கோட்சேவும் தான் குவாலியர் போகின்றனர்<<

கர்காரே குவாலியர் போனதாக நான் எழுதியிருக்கிறேனா என்ன?

>>கோட்சேயும் ஆப்தேவும் தான் 27-ஜனவரி-1948 டெல்லிக்கு விமானத்தில் வந்த உடன் குவாலியருக்கு ட்ரெயின் மூலம் போய் தத்தாத்ரேய பர்சுரே என்பவரிடம் பெரட்டா என்ற இத்தாலிய மாடல் துப்பாக்கியை வாங்கி வந்தனர்.<<

உடனே டிரெயின் மூலம் ? நமக்கு அவர்கள் கிளம்பிய டிரெயினின் நேரம் தெரியாது. தில்லி வந்த நேரம் தெரியாது.தில்லி வந்து டிரெயின் மூலம் குவாலியர் போவதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் போலீஸ் கண்ணில் படாமல் எங்கு தங்கியிருக்க முடியும்? அங்கே கற்பனைக்கு இடமிருக்கிறது அதை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். தப்பா?
 
குவாலியர் போகும் முன் அவர்கள் கார்க்கரேயை ரயிலடியில் சந்திக்கிறார்கள். இது கார்கரேயே சொன்னது

இந்தக் கதையை எழுதுவதற்காக நான் திரட்டிய பல விஷயங்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை:
உதாரணத்திற்குச் சொல்வதென்றால்:

  • தூக்கிலிடும் சில நிமிடங்களுக்கு முன் ஆப்தே மயங்கி விழுந்து விட்டான்.அவனைத் தூக்கு மேடைக்குத் தூக்கிக் கொண்டு போய்தான் கயிற்றை மாட்டினர்கள்.
  • அதே போல பாட்கே அப்ரூவராக மாறியது. அவனது வாக்கு மூலத்தை வைத்துத்தான் குற்றம் சாட்டப்பட்ட எண்மரில் எழுவர் தண்டிக்கப்பட்டனர். அதிலும் இருவர் (பார்சுரே, கிஸ்தயா) இருவரும் அப்பீலில் விடுவிக்கப்பட்டது.
  • சவார்க்கர் பற்றியும் அதிகம் எழுதவில்லை.அவர் போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதால் கீழ்க் கோர்ட்டிலேயே விடுவிக்கப்பட்டுவிட்டார்.
  • கோட்ஸே பெரி மேசன் நாவல்களின் விசிறி என்பது
  • இதைப் போல்தான் ஆப்தேயின் காதல் விளையாட்டுக்கள் பற்றியும் அதிகம் எழுதவில்லை. கதைக்குத் தேவையான அளவு மட்டும் பயன்படுத்திக் கொண்டேன்.
இதைப் பற்றியெல்லாம்/ இவர்களைப் பற்றியெல்லாம் நான் அதிகம் எழுதாதற்குக் காரணம் இது காந்தியைக் கொல்லத் திட்டமிட்டவர்களைப் பற்றிய நூல் அல்ல.
 
நான் சொல்ல விரும்பியது காந்தியைக் கொன்றது அரசாங்கத்தின் மெத்தனம். இது தொடர்பான பல விவரங்கள், விவாதங்கள் நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

கடைசியில் ரமணன் மனதில் ஓடும் எண்ணம்: 'காந்தியைக் கொன்றது கோட்சே இல்லை, அந்தக் கூட்டமில்லை. அரசாங்கம் அதன் மெத்தனம்' அநேகமாக இந்த வரியோடு கதை முடிகிறது.

 உங்கள் விமரிசனத்தில் நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். என்னுடையது Fiction வரலாற்றின் அடிப்படையில் அமைந்த Fiction.அதை நான் கதையைத் துவக்கும் முன் Prologueலேயே சொல்லி விட்டேன். ஒரு கதாசிரியனுக்கு சில உரிமைகள் உண்டு.எப்போதுமே சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதும் எந்த எழுத்தாளரும் தான் திரட்டும் எல்லாவற்றையும் எழுதிவிடுவதில்லை. கதையின் கட்டுமானம், இலக்கு இவற்றைக் கருத்தில் கொண்டு H/She will use his/her discretion.

>>ஹோட்டல் கிரீன் பேலஸில் ரூம் நம்பர் 212 ல் தங்கியிருந்ததாகச் சொல்கிறார் மாலன். ஆனால் அவர்கள் தங்கியிருந்தது SEA GREEN HOTEL

>>கோட்சே அப்படி நாமினேட் செய்தது ஜனவரி 13-1948.(Reference No:1) அவனும் ஆப்தேயும் சீ கிரின் ஹோட்டலில் தங்கியிருந்தது ஜனவரி 14 முதல் 17 வரை<<

>>கோட்சே பழைய டெல்லி ரயில் நிலைய ரிடயரிங் ரூமில் நாரயண ராவ் என்ற பெயரில் அறை எடுத்து தங்கியதாகச் சொல்கிறார் மாலன். ஆனால் கோட்சே விநாயக் ராவ் என்ற பெயரில் அறை எடுத்திருந்தான்<<

வரலாறு என்றால் நீங்கள் சுட்டுகிற இவையெல்லாம் பிழைதான்.ஆனால் ஒரு புனைகதையில் அவர்கள் ஒரு வசதியான ஹோட்டலில் தங்கினார்கள், மாற்றுப் பெயர்களில் தங்கினார்கள், என்ற தகவல்கள் போதுமானது. 
ஆப்தே சல்லாபி, கோட்சே நேர் எதிர் என்பதைத்தான் 3ம் அத்தியாயம் சொல்ல முயற்சிக்கிறது.

அதைக் காட்டத்தான் ஆப்தே பெண் சிநேகிதியுடன் குலாவிக் கொண்டிருந்த போது கோட்சே தனது சொத்தான இன்ஷீரன்ஸ் பாலிசிகளுக்கு இரண்டு பெண்களை பயனாளிகளாக நியமித்தான் என்ற தகவல் பயன்படுத்தப்படுகிறது . இங்கே தேதியா முக்கியம்?

மற்றப்படி-

ஆப்தேயும், கோட்சேயும் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டது நவம்பர் 15 1949 அதிகாலை. நான் எழுதியிருப்பது நவம்பர் 14 1949

காந்திக்கு வயது 75 அல்ல, 79 ஆகிய பிழைகளை நான் ஏற்கிறேன். அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.
(இந்தத் தவறுகள் கதையை எந்த விதத்தில் பாதிக்கிறது என அறிய ஆவல்)

>>காந்தியின் கொலை மிக சமீபத்திய சரித்திரமே. இதற்கான ஆதரங்களை சேகரிப்பதில் மாலன் அவர்களுக்கு மிகுந்த சிரமம் இருந்தது என்று அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கதை சொல்வதில், கதை சொல்லும் யுத்தியில் செலுத்திய கவனம் கதைக்கான ஆதரங்களை சேகரிப்பதிலும் அதை சரிபார்ப்பதிலும் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.<<

காயப்படுத்துகிறீர்கள் மெளலி. நான் இதை எழுதிய 1980ல் காந்தியின் கொலை பற்றிய விவரங்கள் அதிகம் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டிருக்கவில்லை. பாடப் புத்தகங்களில் கோட்சேயைப் பற்றித் தகவல் ஏதும் கிடையாது. கோட்சே கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தைப் பார்க்க விரும்பினேன்.அது தடை செய்யப்பட்டிருந்தது. இங்கு எங்கும்கிடைக்கவில்லை. தில்லியில் நேரு நினைவு நூலகத்தில் இருப்பதாக அறிந்தேன்.

சென்னையிலிருந்து தில்லி போனேன். சென்னையிலிருந்து இரு இரவுகள் பயணம்.  எனக்கு தில்லியில் தங்க நண்பர்களோ உறவினர்களோ கிடையாது.விடுதியில்தான் தங்கினேன். இந்தி தெரியாது. ஆனாலும் போனேன். அதைப் படித்தேன். அன்று அங்கு xerox வசதி கிடையாது. குறிப்புகள் எடுத்தேன்.அது எவ்வளவு நெடிய ஆவணம் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். கோட்சே என்ற personalityயைப் புரிந்து கொள்ள அது உதவியது.(இன்று அந்த வாக்குமூலம் May it please your honour என்ற பெயரில் புத்தகமாக வந்திருக்கிறது)

பிர்லா ஹவுசை நேரில் சென்று பார்த்தேன். அன்று அதற்கு இன்று போல தீஸ் ஜனவரி மார்க்கிலிருந்து வாசல் கிடையாது. அருகில் உள்ள தீஸ் ஜனவரி லேனிலிருந்துதான் உள்ளே போக முடியும். ஆனால் அது ஏன் காந்தி மீதான முதல் முயற்சி தோற்றது என்பதைப் புரிந்து கொள்ள உதவியது

காந்தியைக் கொன்ற நேரத்தில் கோட்சே என்ன உடை அணிந்திருந்தான் என்ற தகவலைப் பல இடங்களில் தேடினேன்.அங்கிருந்த ஒரு பிபிசி ரிப்போர்ட்டர் ஒரு eye witness account எழுதியிருக்கிறார் எனத் தெரிய வந்தது. அவர் பெயர் வின்சென்ட் ஷீன் எனத் தெரிந்ததும் பிரிட்டிஷ் கவுன்சில் சென்று தேடினேன். அந்தப் புத்தகத்திற்கு கொலைக்குத் தொடர்பானது என்று ஊகிக்க முடியமல் ஒரு பெயர்: Lead Kindly Light. அது காந்தியைப் பற்றிய புத்தகம்.அவரது கொலையைப் பற்றியது அல்ல. ஆனால் அதில் அவர் கொலைச் சம்பவமும் வருகிறது. அதைப் படித்ததும் ஏன் ராணுவ அதிகாரிகள் அணிகிற உடையை கோட்சே தேர்ந்தெடுத்தான் என்ற கேள்வி எழுந்தது. அவனுக்கு ராணுவத்தில் சேர்கிற எண்ணம் சிறு வயதில் இருந்தது, அவனது தந்தை அதற்கு எதிராக இருந்தார் எனத் தெரிந்தது. ஏன் எதிராக இருந்தார் என்று பார்த்தால் அவர் மாமிசம் சாப்பிடுவதை விரும்பாத பிராமணர். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று.

லாப்பியர் சென்னை வந்தபோது அவரை சந்தித்து உரையாடி சில விஷயங்களைத் தெளிவு செய்து கொண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் ஒரு 15 அத்தியாய நாவல் எழுதுவதற்காக.அது எழுதப்பட்ட காலத்தில் கதை எழுதுகிறவர்கள் அப்படியெல்லாம் மெனக்கிடுவது கிடையாது. காரணம் இதில் அதிக சன்மானம் கிடையாது. அந்த சன்மானத்தையும் ஒரு Boy meets the girl கதை எழுதி சம்பாதிக்க முடியும். ஆனால் நான் அதைச் செய்யவில்லை.

நீங்கள் ஒரு THE MEN WHO KILLED GANDHI யைப் படித்து விட்டு எழுதுகிறீர்கள். MALGONKAR ருடைய அந்தப் புத்தகம் 1981ம் ஆண்டு வெளிவந்ததாக ஞாபகம். (நான் இன்றுவரை அதைப்படித்ததில்லை) ஆனால் நான் என் நாவலை 1980லேயே எழுதி விட்டேன்.81ல் அது பிரசுரமாகிவிட்டது.
 
என்ன, மல்கோங்கர் ஆங்கிலத்தில் வரலாறாக எழுதினார். (என் உங்கள் குறிப்புக்களிலிருந்து நான் ஊகிக்கிறேன்) நான் தமிழில் சில பரிசோதனை முயற்சிகளோடு புனைகதையாக எழுதினேன். 

என்றைக்குமே தமிழ் எழுத்தாளனது முயற்சிகளுக்கு எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடாது. அது இளப்பமாகத்தான் கருதப்படும்.

  .
>>மாலன் போன்ற சீனியரான ஒருவரிடம் இத்தனை சறுக்கல்களா என ஆச்சரியப் படுக்கிறேன்<< (sic)

இதை எழுதியபோது மாலன் சீனியர் அல்ல. அப்போது அவனுக்கு வயது 30. அப்போதுதான் பத்திரிகைத்துறையில் அடியெடுத்து வைத்திருந்தான்.இது அவனுடைய 2 வது நாவல்
 
இதை உங்கள் ப்திவில் வெளியிடுவீர்கள் என் நம்புகிறேன்

அன்புடன்
மாலன்

8 comments:

Karthick said...

It is highly appreciable that Mr.Malan has taken your review on his book in the right sense.It also shows how unfeigned he is.

But,What I feel from reading Malan's Reply is that he expects the readers to appreciate his work only because it is an experimental novel(If we can call so) based on a history.

R.K.Narayan's Waiting for the Mahatma,Sujatha's Nachu Poigai all were based on the history and the right amount of imagination.In these examples,none of the historical events were misinterpreted.

It is unfair to expect from the readers to praise Janaganamana only because it is the first novel to touch on Ghodse.

The experiment is appreciable but not the result of it.

Regards,
Karthick S

மாலன் said...

Dear Mr. Karthick,

I have never said in my reply that my work should be praised or appreciated.I always hold the opinion that once it is published it belongs to the public domain.

All I am asking is please don't sit on judgments without knowing the other side of the coin.

Incidentally there are two factual errors in your mail:
1.Nachupoigai is a sci-fi based on mythology, not on history.(It first appeared on Thisaigal when I was its editor
2.Waiting for Mahatma is not on Mr.Gandhi's assassination.But it figures in the last chapter as an incident.

regards
Maalan

Chitravenkateswaran said...

I agree with Mr Karthik.

என்ன சொல்ரார்.... குப்பற விழந்தலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்றா.....

Anonymous said...

சரி மாலன்

அதென்ன திருத்திக்கிறேன்னு சொல்லாமே திருத்த முயற்சி செய்கிறேன்

Karthick said...

Dear Mr.Malan,
"I have never said in my reply that my work should be praised or appreciated."
இப்படி எழுதிருக்கிறீர்களே,
"என்றைக்குமே தமிழ் எழுத்தாளனது முயற்சிகளுக்கு எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடாது. அது இளப்பமாகத்தான் கருதப்படும்".
இவ்வரிகளுக்கு என்ன சார் அர்த்தம்?
அங்கீகாரம் எதிர்பார்ப்பதைத் தான் appreciate எனச் சொன்னேன்.
Appreciate என்றால் to value or regard highly; place a high estimate on
என்ற அர்த்தம் இருக்கிறதே.

Regards
Karthick S

Unknown said...

மாலன்/ச.மௌ.வின் இரு பதிவுகளும் என் ரீடரில். இது இந்தப் பதிவில் என் முதல் பின்னூட்டம்.

மாலன் சார், 1980இல் முழுமையற்ற முயற்சிகள், அதிலும் இத்தனை வருடங்களாக நான்கு பதிப்புகள் வந்து (இப்போவாவது) தவறெனத் தெரிந்திருந்தும் திருத்த முயலாமை, தவறுக்கு பொறுப்பேற்காமல் (அட்டைவரி பதிப்பகத்தார் போட்டது இன்னபிற) நழுவுவது, எல்லாம் போச்சுன்னா தமிழ் எழுத்தாளனுக்கு அங்கீகாரம் இல்லைன்னு சொல்லிக்கலாம்.

“அமெரிக்காவில் காபியை மூக்கால் குடிப்பார்கள்”னு நாலு வாரம் பேப்பரில் போட்டால் அது தானே உண்மை?

நீங்கள் ‘எடுத்த முயற்சிகள், இனி வரும் பதிப்புகளில் இவற்றை திருத்த முயற்சிக்கிறேன்’னு என்று மட்டும் சொல்லியிருந்தா நம்பிக்கை வந்திருக்கும்:-(

மெளலி (மதுரையம்பதி) said...

விமர்சனத்தை படித்து பதிலும் அளிக்க முயன்றிருப்பதே பெருந்தன்மைதான். நான் இந்த பதிலைக் கூட அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துக்கள்.

Unknown said...

கடுமையான வாதங்களை பகிர்ந்து கொண்டுள்ள ஒரு நிகழ்வாக இது அமைந்து விட்டது, என்றாலும் மாலன் தனது தவறுகளை திருத்த சம்மதித்திருப்பது ஒரு ஆரோக்கியமான ஆரம்பம், ஆனாலும் தனது புதிய ப்திப்புகளில் அவர் திருத்தாமல் விட்டது ஒரு புதிராகத்தான் இருக்கிறது, கூடவே freedom at midnight ல் கூட காந்தியின் உண்ணாவிரதம் பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டிய பணத்திற்குதான் என்பதுபோல் படித்ததாக நினைவு,