Sunday 10 May 2009

குருஷேத்ரம்-2


”ஆரம்பிச்சுட்டியா. சரி வந்தாச்சு. உபதேசம் கேட்டுக்க வேண்டியது தான். சொல்லு”

“சிவராம். உலகத்திலே எதுவுமே உபதேசம் இல்லை. எல்லாம் அக்கறையாலேசெய்றது தான். தனக்கு தெரியாதையா இவன் சொல்லப் போறான் அப்படினுநினைச்சா அது உபதேசமா தெரியும். போரடிக்கும். எரிச்சலா வரும். இன்னும்சொல்லப் போனா இந்த மாதிரி அக்கறையிலே சொல்றவன் எல்லை மீறிசுதந்திரம் எடுத்து கொள்கிற மாதிரியும் தெரியும்”

“நான் அப்படியெல்லாம் நினைக்கலை. நீ சொல்லு நான் கேட்டுக்கிறேன். Probably I may be wrong நீ சொல்றதாலே எனக்கு அது புரியலாம்”

“சரி இந்த ப்ராஜக்ட் விஷயத்துக்கே வரேன். இதுக்கு நீ அமெரிக்கா போகணும்னுஏன் நினைக்கிறே”

“போச்சுறா அதான் சொன்னேனேப்பா. நான் தான் டிசைனர்”

“அப்படின்னா அமெரிக்கா போறது தான் இந்த ப்ராஜக்ட்டுக்கு நீ எதிர்பார்க்கிறபலன்; அப்படித்தானே”

“ஆஹா நீ என்ன சொல்லப் போறாய் எனத் தெரிந்து விட்ட்து. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே and all that ; ஒரே boring இந்த ஒரு விஷயத்துக்காகஇத்தனை பெரிய சாஸ்திரம்”

”நீ கவனமாகப் புரிந்து கொள்ளவில்லை என என்னால் தீர்மானமாகச் சொல்லமுடியும்”

“எப்படிப்பா. நான் வேலை செய்யனும். அதுக்கு கூலி கிடைக்கனும்னுஎதிர்பார்க்கப்பிடாது. ரிவார்டு கிடைக்குமானு நினைக்கப்பிடாது. ரெக்க்கனிஷன்கிடைக்கனும்னு நினைக்க்க் கூடாது. இதெல்லாம் சாத்தியமா. இல்லை ஏன்அப்படி இருக்கனும்”

“பார்த்தியா அதனாலே தான் சொன்னேன். நீ கவனமாகப் புரிஞ்சிக்கலைனு. நீசெய்யற வேலைக்கு கூலி, ரிவார்ட், அவார்ட், ரெக்க்கனிஷன் இதெல்லாம்எதிர்பார்க்க்க் கூடாதுனு சொல்றதை மேம்போக்காகப் புரிந்து கொள்வதாலேவரும் சிரம்ம் இது தான்”

(தொடரும்)

2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அடுத்த பகுதி எப்போ சார்? :)

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - அடுத்த பகுதிகள் படித்துவீடு இங்கு வருகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா