Thursday 29 July 2010

சுஜாதா.. ஜெயமோகன் .. இலக்கியம்




இது ஜெயமோகன் அவர்களின் வலையில் காணப்படும் கட்டுரைக்கான எதிர்வினை எனக் கொள்ளலாம்

http://www.jeyamohan.in/?p=7505

கேள்வி சுஜாதாவின் மரணத் தருவாயில் அவரால் சொல்லப்பட்ட ஒரு சொற்றொடருக்கு என்ன காரணம் இருக்க இயலும் எனும் ஒரு வாசகனின் கேள்வி . இந்தக் கேள்விக்கு விடை அளிக்க எத்தனித்த திரு. ஜெயமோகன் வழக்கம் போல சுஜாதாவின் எழுத்திற்கான இலக்கிய அந்தஸ்த்து குறித்து எழுதியுள்ளார்.

கட்டுரை ஆயுர் வேத மருத்துவ முறை குறித்து தொடங்கி அது எப்படி இலக்கியத்தோடு ஒப்பிடலாம் என்பதாய் தொடங்குகிறது

Betrand Russel, Inference as a Habit எனும் கட்டுரையில் Syllogism குறித்து விளக்கியிருப்பார்; Syllogism என்றால் இரண்டு வாக்கியங்களை சொல்லிவிட்டு அதன் வழியே மூன்றாவது வாக்கியத்தினை உண்மை என நிறுவ எத்தனிப்பது.
சுஜாதாவின் எழுத்து இலக்கியமா இல்லையா என்பதற்கான ஜெயமோகன் அவர்களின் வாக்கியங்களும் Syllogism முறையிலேயே அமைந்துள்ளன என சொல்லலாம் ஆனால் எடுபடவில்லை

ஜெயமோகன் அவர்கள் உளவியல் சார்ந்த தத்துவ சார்புகளை அதிகம் வாசிப்பவர் , விவாதிப்பவர் என்பது நன்கறிந்த விஷயம் . தர்க்கத்தில் Syllogism நிறைய பங்களிப்புகளை செய்திருந்தாலும் ; தர்க்க சாஸ்திரத்தில் Syllogism கோலோச்சியிருந்தாலும் Betrand Russel , I have never come across any case of new Knowledge obtained by means of Syllogism ; It must be admitted that, for a method which dominated logic for two thousan years, this contribution to the world's stock of Logic for two thousan years, this contribution to the world's stock of Information can not be considered as weighty என சொல்லியிருப்பதை சுட்டிக் காட்ட விழைகிறேன்

ஜெயமோகன் அவர்கள் வழக்கமாக கையாளும் Syllogism இங்கே எடுபடாமல் போவதற்கும் இது தான் காரணம்

பொதுவில் தமிழ்நாட்டில் ஒரு பழக்கம். தானாக வரிந்து நீதிபதியாகி விடுவது. யார் தமிழன் ... எது நடிப்பு .. எதெல்லாம் இலக்கியம் .. இது போன்ற தளங்களில் அளவுகோல்கள் , தராசுகள் , அளவுக் குவளைகளை தன்னிச்சையாக அமைத்துக் கொண்டு களமிறங்கும் நீதிபதிகள்

இப்படி அளப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால் அளவுகோல் தான் விந்தையானது . பதினோரு அங்குல ஸ்கேல். ஒரே தட்டுள்ள தராசு . ஓட்டையான குவளைகள்

ஜெயமோகன் இதற்கு தானும் விதி விலக்கல்ல என்பது போல தெரிவது தான் வேதனை.

6 comments:

rudras prasadams said...

இது முன்னரே சுஜாதா சொன்னது போல ஒருவரின் எழுத்து வெகுஜன ரசனையுடன் பெருமளவு ஒத்து இருந்தால் அது இலக்கியமல்ல என்ற "இலக்கிய தர நிர்ணயிப்பாளர்களின் " முன்முடிவின் வெளிப்பாடு தான் என்றே சொல்லத்தோன்றுகிறது.

பத்மநாபன் said...

’’மறைந்த முன்னோடி சுஜாதா ‘’ எழுதிய ஜெயமோகனா இதை எழுதியது எனும் ஆச்சர்யத்தை வரவழைத்தது.

இலக்கியமோ கலக்கியமோ.... வாசகனை தன்னை மட்டும் படிக்கவைக்காமல் , சிறந்தனைத்தும் தேடித்தேடிப்படிக்கும் பழக்கத்தை எற்படுத்தினார்.

அதற்கு மேல் என்ன வேண்டும்.

Karthick said...

யார் இலக்கியம் படைப்பவர்,எது இலக்கியம் ஆகிறது என்பதற்கான வரையறைகளை யாராலும் இன்று வரை திட்டவட்டமாகக் கூற இயலவில்லை என்றே தோன்றுகிறது.மேலும்,இவ்வளவு ஆற்றலும், ஆளுமையும்,திறமையும் கொண்ட சுஜாதாவிடம் இது போன்ற விமர்சனங்களுக்கு பதில் இல்லாமல் இல்லை.அவருடைய கட்டுரைகளிலேயே ”இலக்கியம் படைப்பதை மனதில் கொண்டு, Existential Crisis, Angst என்று ஜல்லியடிப்பதை விட, எனக்கு சுபாவமாக வரும் எழுத்தை எழுதுவதையே விரும்புகிறேன்” என்றே குறிப்பிட்டுள்ளார்.எது போன்ற விவாதங்கள் எழுந்தாலும்,சுஜாதா என்ற பன்முக எழுத்தாளர் ஏற்படுத்திய தாக்கம் வேறு எந்த எழுத்தாளனும் அல்லது பெருவாரியான எழுத்தாளர்கள் இன்று வரை ஏற்படுத்தாத ஒன்று.இதுதான் இலக்கியம் என்று மனப்பால் குடிக்கும் இலக்கியவாதிகளுக்கு படைப்பை அளிப்பதைவிட,பரவலான ஜனசமூகத்துக்கு ரசனையைக் கற்றுக்கொடுத்த ஒரே எழுத்தாளர் சுஜாதா என்பதை மறுக்க இயலாது.

BalHanuman said...

அன்புள்ள மௌளீ,

சுஜாதா பற்றிய இந்திரஜித் கட்டுரையில் இருந்து.....
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3226

ஜெயமோகன் கட்டுரையைப் படித்தபோது எனக்கு இதுதான் தோன்றியது.

ஒரு குப்பை லாரி தன்னைப் போலவே வர வேண்டும் என்று தண்ணீர் லாரி ஆசைப்பட்டதாகச் சொல்கிறது.

படம் பார்க்கப் பிடிக்காது என்று பொய் சொல்லிவிட்டு, நிறைய படங்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் ஜெயமோகன், சினிமா மனிதர்கள் மீது மிகப்பெரிய அபிமானமும் மோகமும் கொண்டவர்.

மற்ற அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் மீது அவருக்குக் காழ்ப்பு மட்டுமே உண்டு.

நல்ல மனிதர்களை ஏன் அவருக்குப் பிடிக்கவில்லை?

இதுபற்றி அவரே ஒருமுறை விளக்கம் தந்திருக்கிறார். தேடிப் படித்துப் பாருங்கள்.

ஜெயமோகன் எல்லாரையும் சொன்னார். பொறுத்துக்கொண்டோம்.

சுஜாதாவைச் சொன்னால் சோறு கிடைக்காது!

அரவிந்த் S said...

இதை படித்த பின் எனக்கு தோன்றியது இது தான் . புத்தகமே வாசிக்காமல் இருந்த பலரை வாசிக்க வைத்த எழுத்து அது ... இவர்கள் எல்லாம் எதை இலக்கியம் என்று சொல்கிறார்களோ அதை எல்லாம் என்னை வாசிக்க செய்த எழுத்து அது . . எனக்கு ஜெயமோகன் , ராமகிருஷ்ணன் , மனுஷ்ய புத்திரன் , நா.முத்துக்குமார் , நாஞ்சில் நாடன் , அசோகமித்திரன் போன்றோரை அறிமுகப்படுத்திய எழுத்து அது . ஒரு வேளை நல்ல விசயங்களைச் சுட்டி காட்டுவது இல்லக்கியம் இல்லை போல

vijayaragavan said...

Sujatha's writings have done a blunder to the so-called Tamil Illakkiyam. Wonder how?
It's one of the reasons for writers like Jayamohan to come to this arena.
In his same post, JM mentions,
"ஞானத்தின் விதை உள்ளே இருப்பவன் எங்கும் எதிலும் மிச்சமில்லாமல் பணிய முடியாது. அந்த ஞானம் முற்றிக்கனிந்து யோகமாக ஆனதென்றால் அது நம்மை விடுதலை செய்யக்கூடியதுதான்."

How to read this first line, in the following order?
ஞானத்தின் விதை - உள்ளே இருப்பவன் - எங்கும் எதிலும் - மிச்சமில்லாமல் - பணிய முடியாது.
OR
ஞானத்தின் விதை உள்ளே இருப்பவன் - எங்கும் எதிலும் மிச்சமில்லாமல் பணிய முடியாது.

First of all, what he meant by this statement? And how he would prove that to others? I mean how he would objectify that?
To me (may also not be true) JM seems to be a person who blows his own trumpet , when he says,
"சுபமங்களாவின் நிகழ்ச்சி ஒன்றில் கோமல் சுவாமிநாதன் துணையுடன் சுஜாதாவை நான் முதலில் சந்திக்கும்போது என்னிடம் அவர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசித்ததுண்டா என்றார். அத்தகைய நூல்களை வாசித்ததுண்டு என எப்படிச் சாதாரணமாகச் சொல்ல முடியும் என்று கேட்டேன். வாசித்துக் கொண்டே இருக்கிறேன் என்றேன். அந்தப் பதில் சுஜாதாவுக்கு மிகவும் பிடித்திருந்தது." .

Jayamohan should listen to Velukudi Krishnan's Upanyaasam on Vishnu Sahasranaamam.

It is Maya, the powerful, as
it's explorers are bound to it
And it is Maya, the powerful.

Myself, Sujatha , JM and his friend Dr.Rudran , rest everything are inside this Maya and few are talking 'Rubbish'.