Thursday 14 April 2011

எஸ்.வி. சேகர்‍ - கலைஞர் - குதிரை


சமீபத்தில் எஸ்வி சேகர் முதல்வர் கலைஞரை சந்தித்தார் அப்போது அன்பு பரிசாக குதிரைப் படம் ஒன்றை வழங்கினார் சேகர்.

அப்போது நடந்த உரையாடல் ( கற்பனை உரையாடல் சாமி )

"ஏம்பா சேகர் இதென்ன குதிரைப் படம். உள்குத்து ஏதும் இருக்கா

"இல்லீங்க ஆனா ஒரு குதிரைக் கதை சொல்ல நீங்க அனுமதிக்கனும்"

"தாராளமா சொல்லுப்பா"

சேகர் சொன்ன குதிரைக் கதை :

“என்னப்பா என்னிக்கு உன்னோட மரண தண்டனையை நிறைவேத்தறாங்க”

”தண்டனையா.. அடப் போங்க பெரியவரே.. இன்னும் ஒரு மாசம் இருக்கு அதுக்கு”

“நீ என்னப்பா சொல்றே”

“ இப்ப வேண்டாம். சாப்பிட எல்லாரையும் ஒண்ணா உக்கார வைப்பாங்களே அப்ப
விவரமா சொல்றேன்”

நடந்தது இது தான். ஓர் இளைஞன். செய்யாத குற்றத்திற்கு சிறைப்பட்டான். மரண
தண்டனை விதித்து விட்டனர். தண்டனை நிறைவேற்றம் செய்ய நாள் குறிக்கும்
நடைமுறைக்காக அவனை அரசர் முன் அழைத்துப் போனார்கள். அங்கிருந்து திரும்பு வரும் போது எதிர்ப்பட்ட சக் கைதியிடம் அவன் செய்த உரையாடல் தான் அது.

“சாப்பாட்டு நேரத்துல சொல்றேன்னு சொன்னியே என்னனு சொல்லு”

“ அது வந்துங்க. நம்ம மன்னருக்கு குதிரைங்க வளர்க்கறதுல ஆசைனு
உங்களுக்குத் தெரியுமே”

“ அதான் ஊருக்கே தெரியுமே. நம்ம கிட்ட வாங்கற வரிக்காசெல்லாம் குதிரைக்கே போகுது”

“அங்கதான் இருக்கு விஷயம்.. நீ கடைசியா ஏதாவது சொல்ல விரும்பறியானு ராசா கேட்டாரு”

“ அட அப்புறம்”

“ஆமா ராசா ஆனா அதை உங்க காதுல தான் சொல்லுவேன்னு சொன்னேன்”

“ரொம்பத் தைரியம் தான் உனக்கு. என்ன ஆச்சு ராசா ஒத்துகிட்டாரா இல்லியா”

“ கொஞ்சம் தயங்கினாரு. அப்புறம் சரின்னாரு”

“ சீக்கிரம் சொல்லுப்பா”

“ நான் ராசா இருந்த மேடைக்கு மெதுவா ஏறிப்போனேன். மண்டி போட்டுகிட்டேன். ராசாவும் மெதுவா கொஞ்சம் குனிஞ்சாரு. அவரு காதுல சொன்னேன்.. அப்புறம் நிமிர்ந்து கூட்டத்தைப் பார்த்து இவனின் மரண தண்டனை இன்னும் ஒரு மாசம் தள்ளி வைக்கிறேன் அப்படின்னாரு “

“ அட அப்படி என்னதான் சொன்னே”

“ ராசா எனக்கு குதிரைங்களை பறக்கிற சக்தி உள்ளதா மாத்திடற மந்திரம்
தெரியும்னேன். மொதல்ல நம்பல. அப்புறம் நான் சொன்னேன். என்னை உங்க
குதிரைங்க கிட்ட விடுங்க நான் மெதுவா மந்திரம் சொல்லி அதுங்க பறக்கிற
மாதிரி செஞ்சிடுவேன்னேன். ஒரு மாசம் அந்த மந்திரத்தை குதிரைங்க கேட்டா
நிச்சயம் பறந்துரும்னேன்”

“அடப்பாவி அந்த மாதிரி ஒரு மந்திரம் உனக்குத் தெரியும்னு சொல்லவேயில்லையே”

”எனக்கு அந்த மாதிரி ஒரு மந்திரம் தெரியாது ஆனா பாருங்க- இப்ப ஒரு மாசம்
தண்டனை தள்ளிப் போயிருக்கு. இன்னும் ஒரு மாசம் உயிரோட இருக்கப் போறேன்.

இந்த ஒரு மாசத்துல ராசா மனடசு மாறலாம். தண்டனை குறையலாம். இல்லே வேற ராசா வரலாம். ஒரு வேளை குதிரை பறந்தாலும் பறக்கலாம் யாருக்குத் தெரியும்”

"தம்பி சேகர் கதை நல்லாத்தான் இருக்கு நானும் ஒரு குதிரைக் கதை சொல்லவா"

"அய்யா அதைக் கேட்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.. சொல்லுங்க சொல்லுங்க‌

கலைஞர் சொன்ன குதிரைக் கதை

ஒரு விவசாயி. தன்னுடைய பண்ணைத் தேவைகளுக்காக ஒரு குதிரை வாங்கினார்.

அவரது நண்பர்கள் அவர் அதிக விலை கொடுத்து விட்டார் அந்தக் குதிரை அவ்வளவு விலை பெறாது என சொல்லி அவரை கேலி செய்தனர். அவர் நன்றாக ஏமாந்து விட்டதாகச் சொல்லி வந்தனர். ஆனால் அவர் இதையெல்லாம் சட்டை செய்யவில்லை

ஒரு நாள் அந்தக் குதிரை கட்டியிருந்த கட்டை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது.

விவசாயி அதை துரத்திப் பிடிக்க முயன்றார். அது பக்கத்தில் இருந்த
காட்டினுள் ஓடி மறைந்தது. விவசாயி சோர்ந்து போனார்.குதிரை ஓடிப்போன
விஷயம் அவர் நண்பர்களுக்குத் தெரிந்தது. கேலி அதிகமாகி விட்டது. ஆனாலும் விவசாயி தான் ஏமாறவில்லை என்று சொல்லிக் கொண்டார்

ஓடிப் போன குதிரை ஒரு நாள் அதுவாகவே காட்டிலிருந்து திரும்பி வந்து
விட்டது. தனியாக வரவில்லை. இன்னொரு குதிரையை கூடவே கூட்டிக் கொண்டு வந்தது. விவசாயிகு ஆனந்தம் பிடிபடவில்லை. இப்போது அவர் தன் நண்பர்களிடம் பெருமையாக பேசினார் , “ பார்த்தீர்களா. என்னவோ நான் ஏமாந்து விட்டதாக சொன்னீர்களே. இப்ப என்ன சொல்றீங்க” நண்பர்கள் ஒன்றும் சொல்லவில்லை

வந்த் இரண்டாவது குதிரை மிகவும் முரடாக இருந்தது. விவசாயியின் பையன் 18 வயது இளைஞன். அவனுக்கு இந்த புது குதிரை ரொம்ப பிடிச்சி போச்சு. அதன் மீது தாவி ஏறி அதை ஓட்டிப் பழக முயற்சித்தான். இப்படி செய்து
கொண்டிருக்கும் போது ஒரு நாள் அந்த முரட்டுக் குதிரை அவனைக் கீழே தள்ளி அவனுக்கு கால் எலும்பு முறிந்து விட்டது.

விவசாயியின் நண்பர்கள் ,” அது ஏதோ காட்டுக் குதிரை போலிருக்குப்பா பாரு
பையன் காலை உடைச்சிருச்சு, குதிரைஐ துரத்தி விடுப்பா “ என்றனர்

விவசாயி அதெல்லாம் எதுக்கு வேண்டாம் எல்லாம் நன்மைக்கே என்று விட்டு
விட்டார்

மறுநாள் அந்த நாட்டின் மீது அண்டை அரசன் படையெடுத்து வந்தான், இந்நாட்டு அரசன் 18 வயதான இளைஞர்கள் எல்லோரும் படையில் சேர வேண்டும் என்று அறிவிப்பு செய்து உடனே வீடு வீடாக சென்று அப்படியான இளைஞர்க்ளை படையில் சேர்த்து வர தன் தளபதிகளைப் பணித்திருந்தான்

படைத் தளபதிகள் வீடு வீடாக வந்தனர். விவசாயியின் மகன் காலை முறித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து அவனை விட்டு விட்டனர். ஆனால் விவசாயியின் நண்பர்களின் மகன்கள் அவர்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும்
வலுக்க்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்

அப்போது விவசாயியின் நண்பர்கள் அந்தக் குதிரை தான் விவசாயியின் மகனை படையொ சேர்வதிலிருந்து காப்பாற்றிற்று என்றனர்

விவசாயி இருக்கலாம் என்றார்


2 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - கதைகள் இரண்டுமே சரி -உண்மையிலேயே குதிரை படம் கொடுத்ததன் பொருள் என்னவாய் இருக்கும். ம்ம்ம்ம்ம் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

சேகர் சொன்ன (கற்பனைக்) கதை ஜுபரோ ஜுப்பர்! அரசியல் நையாண்டிக்கு, நேரத்துக்கேற்ற பஞ்சோடு அருமையான கதை.

ட்விட் பண்ணிக்கிறேன் உங்க கதையோட சுட்டியை.