Sunday 12 June 2011

கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் 11 ஜூன் 2011


சமச் சீர் கல்வி குறித்து பேராசிரியர் திரு முத்துக் குமரன் அவர்கள் உரை நிகழ்த்திய கூட்டம்.

சமச் சீர் கல்வி குழுவின் தலைவராக செயலாற்றி அரசுக்கு பரிந்துரைகள் கொண்ட அறிக்கையினை சமர்ப்பித்தவர்.

மக்கள் மத்தியில் புரிந்து கொள்ள மறந்துவிட்ட ஒரு தகவலுடன் பேராசிரியர் தனது உரையினைத் தொடங்கினார்.

விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ள இந்த சமச் சீர் கல்வி திட்டத்தினை மக்கள் ஸ்டேட் போர்ட் பாடத் திட்டம் , மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் இரண்டுக்கும் இடையேயான தரம் சார்ந்த விவகாரம் என Abstract செய்து கொண்டுள்ளனர்

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 1977 ம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கின என்பதால் அவை உயர் கல்வி தரத்துடன் விளங்கியதாக ஒரு பிம்பம் உருவாகிவிட்ட உண்மையினைச் சொன்னார் முத்துக் குமரன்

இது குறித்து என் தரப்பில் கூடுதல் விபரங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன்

1966 ம் ஆண்டு வரை தமிழகத்தின் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகப் பொறுப்பில் இயங்கின‌

1966 ம் ஆண்டு மதுரையில் காமராஜர் பல்கலைக் கழகம் உருவான பின் அதன் செயல்பாட்டுக்கென நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அதன் நிர்வாகப் பொறுப்பிற்கு மாறின

இந்த் நிலை 1976 வரை நீடித்தது

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை அரசின் நிர்வாகப் பொறுப்பில் கொண்டு வரலாம் எனும் பரிசீலனை 1976 ல் தொடங்கியது

அதன் அடிப்படையில் இதற்கான திட்ட வரைவு , கல்வித் துறை தனது துறைக்கான அரசு ஆணை எண் 2816 நாள் 29 நவம்பர் 1976 அன்று வெளியானது
தொடர்ச்சியாக மெட்ரிக்குலேஷன் கல்விக்கு என தனியாக ஒரு போர்ட் அமைப்பினை உருவாக்கிட பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் பரிந்துரைத்தார் அதன் அடிப்படையில் அதுவரை சென்னை மற்றும் மதுரைப் பல்கலைக் கழங்கங்களின் பொறுப்பில் இருந்த மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரின் நிர்வாகப் பொறுப்பிற்கு
மாற்றப்பட்டன. இதற்கான கல்வித் துறையின் அரசாணை எண் 1720 நாள் 25 ஜூலை 1977 ( ஜூலை 25 உங்கள் பிறந்த நாளாயிற்றே எனும் என் மனைவியின் நினைவூட்டலை புறம் தள்ளி தொடர்கிறேன்)

இந்த அரசாணையின் படி Board of Matriculation Schools உதயமானது. சென்னை மதுரைப் பல்கலைக் கழகங்களின் சின்டிகேட் தீர்மானங்களும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை இனி தமிழக அரசிடம் தந்துவிட சம்மதித்து இருந்தன‌

பள்ளிக் கல்வி இயக்குநரின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்க் இருக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் விவகாரங்களுக்காக ஒரு Inpectorate உருவாக்கி அதன் தலைமை நிர்வாகியாக Inspector of Matriculation Shools எனும் பொறுப்பில் மாவட்ட கல்வி அதிகாரி அந்தஸ்த்தில் ஒரு அதிகாரியினை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அரசாணை எண் 2678 கல்வித் துறை நாள் 29 டிசம்பர் 1977 அன்று வெளியிடப்பட்டது

பள்ளிக் கல்வி இயக்குநரின் நிர்வாக பொறுப்பில் மெட்ரிக்குலேஷன் கல்விக்கென தனி ஆய்வாளர் அமைக்கப்பட்டு நவம்பர் 2001 வரை மெட்ரிக்குலேஷன் கல்வி நிர்வாகம் இயங்கியது

பின்னர் மெட்ரிக்குலேஷன் கல்விக்கென் தனி இயக்குநரகம் உதயமானது . இதற்கான அரசு ஆணை 188 நாள் 08 நவம்பர் 2001

இனி மீண்டும் பேராசிரியர் முத்துக் குமரனின் உரைக்கு வருகிறேன். அவர் உரைத்த மிக முக்கியமான சங்கதிகள்

1. ஸ்டேட் போர்ட் , மெட்ரிக்குலேஷன் போர்ட் இரண்டுக்குமான பாடத்திட்டங்களில் அதிக வேறுபாடு இல்லை.

2. சமச் சீர் கல்வி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் குழுவின் பரிந்துரை. அதில் கல்வியின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் எனும் அடிப்படையும் அதனை அடைவதற்கு தேவையான நெறி முறைகள் எவை எவை என்பதும் எங்கள் பரிந்துரையின் அம்சம்

இந்த விவகாரம் நான்கு தனித் தனியான பாடத்திட்டங்கள் இயங்கிய தமிழ்நாட்டில் இனி மாநில பள்ளிக் கல்வி நிர்வாகப் பொறுப்பின் கீழ் ஒரே பாடத்திட்டம் தான் எனும் ஒற்றை வரியாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது

பேராசிரியர் முத்துக்குமரன் அவர்கள் சொன்ன மிக முக்கியமான கருத்து

I have competency to say what the School education to impart the students but I have no competency to say what syllabi would be suitable to achieve this ; that is the implementation part and teachers of school education alone are competent to decide on this ; I am not ashamed of saying that I am not competent to decide on school syllabi

கூட்டம் முடிந்து அவர் விடை பெறும் போது மாடிப்படி இறங்கிய வண்ணம் அவர் எல்லோரிடமும் பேசிக் கொண்டு வந்தார்

அவரிடம் நான் சொன்னேன்," கூட்டம் தொடங்கும் போது ஒன்று சொன்னீர்கள் . உங்களது பரிந்துரை அறிக்கையினைப் படிக்காமலே தான் பலர் விமர்சனம் செய்கிறார்கள் விவாதிக்கின்றார்கள் என ; ஆனால் நான் உங்கள் அறிக்கையினை முழுவதும் வாசித்திருக்கிறேன் அதன்றி இந்த பரிந்துரை அடிப்படையில் சமச் சீர் கல்வி சட்டமாக அறிமுகம் ஆன போது அதனை எதிர்த்து உயந் நீதி மன்றத்தில் 2010 ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்ட்டு அதன் தீர்ப்பினை முழுவதும் வாசித்திருக்கிறேன். அதில் நீதிபதி திருமதி பிரபா ஸ்ரீதேவன் உங்கள் அறிக்கையின் விபரங்கள் குறித்து மிக விபரமாக அலசியிருக்கிறார். National Curriculam Frame Work , Kothari Committee Report இவற்றுடன் உங்கள் அறிக்கை எப்படி இசைந்திருக்கிறது எனவும் நீதிபதி விபரமாக சொல்லியிருக்கிறார் " என பகிர்ந்து கொண்டேன்..

அவருக்கு விடை தரும் போது , I have not competency என சொல்வதற்கும் அதை சொல்ல வெட்கப்படவில்லை எனச் சொல்வதும் மிகப் பெரிய குணம் சார் ”
என்றேன்

"நான் உண்மையைத் தானே சொன்னேன்” என்றார்

பாடத்திட்டம் பாடம் அப்படி இருந்தது இப்படி இருக்க வேண்டும் என்று எழுதும் மஹானுபாவர்கள் கவனிப்பார்களாக‌

5 comments:

manjoorraja said...

சமச்சீர் கல்வி முறையின் சிலவிசயங்களில் அரசுடன் அவர் முரண்பட்டார் என எங்கோ படித்த ஞாபகம். அதைப்பற்றி பேசவில்லையா?

arulselvan said...

மிக்க நன்றி. முடிந்தால் இன்னும் சற்று விரிவாக பகிரப்பட்டவற்றை எழுதுங்கள்.
அருள் செல்வன்

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

அவர் சொன்னதின் மிகச் சரியான சாரத்தை சொல்லியிருக்கேன்.

பாடத்திட்டம் என்பது மட்டுமல்ல பரிந்துரை

அதனால் தான் சொன்னார் கமிட்டியின் அறிக்கையினைப் படிச்சுட்டு வாங்கனு

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - நாட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்னையில் - ஒரு முக்கிய மனிதரின் உரை. சரியானதொரு உரை தான். பொறுத்திருந்து பார்ப்போம் - நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா

Ganpat said...

Dear CM,

The following should be the Governing principles for the state's education..

No bright and deserving student should be deprived of higher education OR dull and uninterested student should get higher education on caste or economics based reasons

There shall be four levels

Dull
Normal
Bright and
Prodigies

These shall be identified at various class levels and should study separately as per their groups.

The division shall be done at the age of 10(class 6),14(class 10),and 19(under graduation)

In short, all would study the same syllabi from the age of 3 to 10(LKG to class 6) and then branch out in to the four groups viz

Dull
Normal
Bright and
Prodigies

and from 10 to 14 there would be three levels only viz Normal,Bright & Prodigies
and from 14 to 19 there would be two levels only viz Bright & Prodigies
Beyond 19 only prodigies would be there.

Needless to say the entire education is free with free hostels and the teachers would be paid well and would be well trained to take classes for various levels.

The grouping will not be based only on the marks but on the consistency of performance and the teacher's assessment of the student's potential.

A tall wish eh?

Regards,