Sunday 5 June 2011

சக பயணி 7



"வெவ்வேறு வடிவங்களோ அல்லது செயல்களோ கடவுளை நமக்கு காட்டிவிட இயலுமா" மன்னன் கேட்ட கேள்வி

என் சக பயணி இடை மறித்தார், " சார் இந்த விளக்கம் எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது"

"ஓ அப்படியா.. சரி சில கேள்விகள் கேட்டு பதில் சொல்ல வைப்பதன் மூலம் உங்களுக்கு நான் சொல்ல விழைவதை விளக்க இயலுமா எனப் பார்க்கிறேன்"

"சரி கேளுங்கள்"

"உங்களுக்கு கடவுள் எப்போதெல்லாம் தேவைப்படுகிறார்"

"இதென்ன கேள்வி. கடவுள் என்ன தேவைப்படுகிறார் எனும் வகைக்கான பொருளா இல்லை தின்பண்டமா"

"எனக்கு மிகவும் வேலை வைக்காமல்.. நீங்களே இந்த சப்ஜெக்டை மிகவும் சுலபமாக்கிவிட்டீர்கள். நம்மில் பலர் கடவுள் எனும் சித்தாந்தத்தை உணர்ந்திருக்கின்ற வகையினைக் கவனியுங்கள். Daily அவரவருக்கு உண்டான க்டமை நிறைவேற்ற கடவுள் எப்படி தேவைப்படுகிறார். நமக்கு எந்த இடையூறு வருவதை தடுக்கவும், நமக்கு மிகவும் ஒத்தாசையாக இருக்கவும். நமது வேலைகள் சிறப்புற நடந்துவிட்டால் நன்றி சொல்லி மகிழ்ந்து கொள்ள ஒருவனாகவும், வியாதியே வராத வாழ்க்கை வழங்கிடவும், அப்படியே வந்துவிட்டால் அதனை நீக்கும் வைத்தியனாகவும் இப்படி பலவாறாக ஒரு தனிமனித தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்கும் பணியாளனாக கடவுள் நமக்கு தினசரி வாழ்வில் இழையோடுகிறார் அல்லவா"

"ஆமாம் இதில் என்ன தவறு"

" இப்படி தனிமனித நோக்கங்களை நிறைவேற்றும் அம்சம் எப்படி ஒரு மஹாத்மாவின் சிந்த்னைக்கு கடவுளாக இருக்க இயலும் சார் ! அவருக்கு இப்படியான தனிமனித கடவுளில் விருப்பமில்லை. அவரது இராம பக்தி அல்லது பக்தியை அவர் வெளிப்படுத்த கையாண்ட முறைகள் யாவுமே இப்படியான தனிமனித நோக்கம் நிறைவேற்றும் ஓர் அம்சத்தினை அவர் கடவுளாக கொண்டிருந்தார் என்பதைக் காட்டவோ நிறுவவோ இல்லை.. அவர் நம்பிய கடவுள் எல்லாத் தனிமனிதனையும் வழிநடத்தும் நன்னெறி, இன்னும் மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமெனில் எந்த காரணத்துக்காகவும் மனிதருள் வேற்றுமை பாராட்டாத மனோபாவம் அதன் வழியில் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கை முறை அதனை எந்த வித காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாமல் மிகத் திடமாகப் பின்பற்றும் மனோதிடம் இவைதான் அவர் நம்பிய கடவுள் , அவர் தொழுத கடவுள் இந்தக் கடவுளின் பாதையில் சென்றால் தனிமனிதனின் தேவைகள் அவன் உழைப்பின் மூலமே பூர்த்தியாகும் என்பதும் அவரது நம்பிக்கை. சுருக்கமாக சொன்னால் அவர் கொண்டிருந்த கொள்கையை ஞான யோகமாகவும் தான் செய்ய வேண்டியதை கடமை உணர்வுடன் சோர்வின்றி அச்சமின்றி நிறைவேற்றும் கர்மயோகியாகவும் அவர் வாழ்ந்தார் அவருடைய மொழியிலேயே சொல்வதெனில் Performance of duty and observance of morality are convertible terms. To observe morality means mastery over our mind and over our passions. So doing we know ourself"

தொடரின் ஏனைய பகுதிகளைப் படிக்க வலப்பக்கம் சிறியதாக உள்ள காந்தியாரின் படத்தினைக் க்ளிக் செய்யவும்

பயணம் தொடரும்

2 comments:

களிமிகு கணபதி said...

அருமை !

தொடருங்கள். கூடவே பயணிக்கிறேன்.

கௌதமன் said...

தொடருங்கள்.