Monday 13 August 2012

மீண்டும் சுஜாதா ( திருவள்ளுவர் சந்திப்பு)

மீண்டும் சுஜாதா தொடரினை பல காரணங்களினால் என்னால் தொடர இயலாது போனது

ஆனால் மீண்டும் தொடராக தொடர்ந்து எழுதிட தீர்மானிக்கிறேன்


எனது ப்ளாக்கில் "மீண்டும் சுஜாதா" எனும் லேபிளில் இந்த தொடரினை தொடரலாம். தொடரின் பழைய பதிவுகளை அங்கே படிக்கலாம்

----

மீண்டும் சுஜாதா ( திருவள்ளுவர் சந்திப்பு)

"வாருங்கள் ரங்கராஜன்.. நலமாக இருக்கின்றீர்களா"

சுஜாதாவுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது..

"என்னை ஞாபகம் வச்சு கூப்பிடறீங்களே அதெப்படி"

"நீங்கள் தானே என்னை சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருப்பதாக இங்கிருக்கும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்"

"ஆமாம் எனக்கு கொஞ்சம் சந்தேகமெல்லாம் இருந்தது.. அதையெல்லாம் மனசிலே வச்சிக்கிட்டே தான் திருக்குறளுக்கு உரை எழுதினேன்"

"அப்படியா.. நீங்களும் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கின்றீர்களா"

"இந்தியாவிலே ஒன்னு நீங்க கவனிக்கனும் வள்ளுவர் அய்யா"

"வசந்த் சும்மாரு.. டிஸ்டர்ப் பண்ணாத"

"அதென்ன பாஸ் .. நான் பேசினாலே எனக்கு தடை போடறீங்க"

"அவர் சொல்ல வந்ததை சொல்லட்டுமே"

"பார்த்தீங்களா பாஸ் வள்ளுவரே சொல்லிட்டார்.. நான் சொல்ல வந்தது என்னான்னா .. இந்தியாவிலே வக்கீல் உத்தியோகத்திலே பெரிசா பேர் எடுக்கனும்னா.. இன்டியன் கான்ஸ்டிட்யூஷன் பத்தி தடிமனா பொஸ்தகம் போட்டு கொறஞ்சது தொளாயிரம் ரூபாய்க்கு விலை வச்சு விக்கனும்.. அது மாதிரியே தமிழிலே எழுதிப் பேர் வாங்கனும்னா.. அவசியம் திருக்குறளுக்கு விளக்கம் எழுதனும்.. அப்படி ஒரு சம்பிரதாயம்"

"ஆனால் நான் வார்த்தைக்கு வார்த்தை விளக்கி அர்த்தம் எழுதல தெரியுமா .. வசந்த்.. ஓரளவுக்கு ரிசர்ச் பண்ணிதான் எழுதிருக்கன்னு நினைக்கிறேன்"

"உங்களுக்குள் இப்படி விவாதம் வேண்டாம் என நினைக்கிறேன்.. ரங்கராஜன் நீங்கள் உங்கள் ஐயங்களைச் சொல்லலாமே.. "

" என்னோட ஆரம்ப சந்தேகம்.. உங்களுக்கு இப்படி ஒரு மாரல் கான்டெக்ஸ்ட் கொண்டு வரணும்னு எப்படி தோணிச்சு.. உங்களுக்கு எதைப் பார்த்து எதைப் படிச்சு இப்படி எழுதனும்னு ஆர்வம் வந்தது"

"எந்த மனிதனுக்கும் அவனுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்.. அப்படித்தானே.."

"ஆமாம் அய்யா .. அதிலே எந்த சந்தேகமும் இல்லை"

"ஆனால் ஒவ்வொருவருக்கும் அர்த்தம் மாறுபடும்.. அது இயற்கை.. இதையும் ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன்"

"ஒப்புக் கொள்கிறேன் .. அப்படி மாறுவது இயற்கை தான்"

"ஆனால் மனிதன் தனிப்பட்டவனில்லையே.. அவன் பிறரோடு இணைந்தும், உறவாடியும் வாழ்வு நடத்த அவசியம் இருக்கிறது. அப்போது தான் அவர்களுக்கு நீதி போதனைகள் தேவைப்படுகின்றன.. இதோ இந்த இரண்டு வழக்குறைஞர்களிடம் கேட்டால்.. குற்றவியல் சட்டங்களின் தொடக்கமும் நோக்கமும் சொல்வார்களே.. அவையும் அப்படித்தானே இருக்கும்.. சரி தானே கணேஷ், வசந்து"

"என்னைப் பேர் சொல்லி நீங்களே அழைச்சது எனக்கு புல்லரிக்கிறது.. ஆனால் வசந்துனு சொல்லாதீங்க. ப்ளீஸ் வசந்த்... அத்தினிதான்.. து வெல்லாம் இல்லை.. அது என்னமோ வயசான மாமி கூப்பிடற மாதிரி இருக்கு'

"அய்யா நான் உங்களைக் ஒன்று கேட்கலாமா.. "

"தாராளமாகக் கேளுங்கள் கணேஷ்.. "

"சந்தோஷம் அய்யா.. இப்ப கிரிமினல் சட்டங்களைக் கவனிச்சீங்கன்னா IPC 511 செக்‌ஷன் தான்

1860 ம் வருடம் இந்தியன் பீனல் கோட் ( Indian Penal Code) அமுலுக்கு வந்தது. அவ்வப்போது கால சூழலுக்கு ஏற்ற மாற்றங்களுடன் இன்னும் அது இந்திய கிரிமினல் சட்ட நடைமுறைகளில் ஒரு முக்கியமான சட்டம்.


மஹாபாரத யுத்தம் முடிந்த பின் இருதரப்பிலும் இறந்துபட்ட குருவம்சத்தாரின் உடல்களின் அடக்கம் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக்கடன்களை மஹரிஷி தௌம்மியரைக் கொண்டு தர்மன் செய்கிறான். ஈமக் கடன்கள் செய்து முடித்த நிலையிலே அவன் மிகுந்த சோகத்திலே இருக்கிறான், இத்தனை மரணங்களா என்ற எண்ணம் அவனை மிகவும் துயரப்படுத்துகிறது

இந்நிலையில் தான் அரசனாகப் பொறுப்பும் ஏற்க வேண்டும். உறவினர்களின் மரணம் என்ற கவலை ராஜ்யப் பொறுப்பேற்க்க வேண்டிய கடமைமையினையும் தாண்டி அவனை வாட்டுகிறது.

தனக்கு அரசப் பதவி வேண்டாம். காட்டுக்குப் போய் தவ வாழ்க்கை மேற்கொண்டு அங்கேயே மடிகிறேன் என்ற நிலைக்கு வருகிறான்

அவனை திருதராஷ்டிரன், தௌம்மியர், வியாசர், கிருஷ்ணர், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், திரௌபதி எல்லோரும் தேற்றுகின்றனர்

இதிலே மற்றெல்லோரது அறிவுரைகளைவிட அர்ஜுனனது அறிவுரை முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது (கிருஷ்ணனிடம் கீதை கேட்ட Effect போலும் !!!!)

அர்ஜுனனின் பேச்சு அரசனின் தண்டனை அதிகாரங்களைப் பற்றிய அறிவுரையாகவும் அற உரையாகவும் இருக்கிறது

இந்த இடத்திலே க்ருத யுகத்திலே ஆக்கப்பட்ட ஒரு லட்சம் ஸ்லோகங்களால் ஆன வைசலாட்சகம் என்ற தண்டனை சாஸ்திரம் குறித்தும் அது பின்னர் எப்படி படிப்படியாக Concise ஆக்கப்பட்டது என்பதைப் பற்றியும் வியாசர் சொல்கிறார்

வைசலாட்சகம் பிரம்மாவால் 1,00,000 ஸ்லோகங்கள் கொண்டதாக முதலில் சமைக்கப்பட்டது. இது என்ன இத்தனை ஜாஸ்தியாக இருந்தால் எப்படி எல்லோரும் இதை படித்து பின்பற்ற சிரமமாக இருக்குமே என சிவபெருமான் அதை 10,000 ஸ்லோகங்களாக சுருக்கினார்.பின்னர் இந்திரன் அதை 5,000 ஸ்லோகங்களாகவும், அதன் பின்னர் பிரஹஸ்பதி 3,000 ஸ்லோகங்களாகவும் அதன்பின் அசுர குருவான சுக்கிராச்சாரியார் 1,000 ஸ்லோகங்களாகவும் சுருக்கியதாகவும் வியாசர் குறிப்பு தருகிறார்.

நீங்களும் இப்படி பெரிய நம்பரில் தொடங்கி யோசிச்சு குறைச்சதுண்டா"

(தொடரும்)

No comments: