Wednesday 1 August 2012

Uniform Civil Code-2

Uniform Civil Code இந்த பொருளில் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு முன்பே ,, அரசமைப்புச் சட்டம் உருவாகும் நிலையிலேயே விவாதம் நடைபெற்றதைக் கவனிக்க வேண்டும்..

அடிப்படை உரிமைகளை அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதி செய்திட வேண்டுமெனும் எண்ணத்தில் நமது அரசியல் சாசன நிர்ணய சபையில் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 30 ஆகஸ்ட் 1947 நடைபெற்ற விவாதத்தில் கருத்துகள் விவாதிக்கப்பட்டன

23 நவம்பர் 1948 அன்று அரசியல் சாசன நிர்ணய சபையில், மதராஸ் மாஹாணத்திலிருந்து உறுப்பினரான முகமது இஸ்மாயில் சாஹிப், Uniform Civil Code கொண்டு வருவனை எதிர்த்து ஒரு சட்ட முன் வடிவினை முன் மொழிந்தார். மேற்கு வங்கத்திலிருந்து உறுப்பினரான சுரேஷ் சந்திர மஜும்தார் இந்த முன் மொழிவினை எதிர்த்தார்

ஆனால் இஸ்மாயில் சாஹிப் சொல்வதனை ஏற்க வேண்டும் என இன்னுமொரு உறுப்பினர் நஸ்ரூதின் அகமது வலியுறுத்தினார்

இந்த நிலையில் உறுப்பினர் மொஹபூப் அலி பெய்க் ஷாகிப் பகதூர், சபையின் கவனத்தினை ஈர்க்கும் வண்னம் சில கருத்துகளை முன் வைத்து பேசினார். , ஏற்கனவே ப்ரிட்டிஷார் ஆட்சியில் Civil Procedure Code தனி மனிதனின் மதம் சார்ந்த நம்பிக்கைகளிலே தலையிட்டு அதனால் மத நம்பிக்கைகளுக்கு இடர் வந்திருப்பதாகவும் இப்போது இப்படி பொதுவான சிவில் சட்டம் கொண்டு வந்தால் மத நம்பிக்கைகள் அதனைக் கைக்கொள்வதிலும் இடர் தொடரவே செய்யும் என உரை செய்தார்

As far as the Mussalmans are concerned, their laws of succession, inheritance, marriage and divorce are completely dependent upon their religion

என்பதாக அவர் உரையினை நிறைவு செய்யும் போது உறுப்பினர் அனந்தசயனம் அய்யங்கார் குறுக்கிட்டு ஒரு கருத்தை சொன்னார்

(தொடரும்)

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - அரசமைப்புச் சட்டம் அறிமுகப் படுத்தும் போதே விவாதங்கள் நடைபெற்றது நன்று. ஆனால் முடிவுகள் இன்றளவும் மாற்றப்படுகின்றனவே ! தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா