Tuesday 13 May 2008

ப்ரியமானவளே


ஒரு ஆங்கில உரையாடல். கட்சிக்காரர்- வக்கீலிடையே. விவாகரத்து வழக்குக்காக வக்கீலிடம் வந்த ஒருவர்,

“I want to get one of those dayvorces”
Advocate,”Well do you have any grounds?”
“Yes I have about 140 Acres”
“No; you do not understand- Do you have a case?”
“No; I do not have a case; but I have a John Deere”
“No; you really do not understand. I mean do you have any grudge?”
“Yes I have a grudge where I park my John Deere”
“No Sir. Please listen carefully; do you have a suite?”
“Yes I got it now. I have suit... And wear it to churches on Sunday”
“Aha ... Does your wife beat you up?”
“No attorney we both get up by 4.30 “
“My God. Why do you want a divorce?”
“Well, I can never have a meaningful conversation with her”

(எனது ஆதர்ச ஸ்டீபன் கோவேயின் 8TH HABIT புஸ்தகத்திலிருந்து.)

இவரது இன்னொரு பிரபலமான புஸ்தகம் THE SEVEN HABITS OF EFFECTIVE FAMILIES. இந்த புஸ்தகத்தை கல்யாணம் ஆகாத அல்லது சமீபத்தில் கல்யாணம் ஆனவர்கள் படிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.. குறைந்த பட்சம் ஒரு வருஷ கல்யாண வாழ்க்கை அல்லது அதுக்கு மேலே உள்ளவர்களுக்கான புஸ்தகம் அது.

புது கல்யாண மாப்பிள்ளைகள் எனது எச்சரிக்கையை மீறி படித்துவிட்டு ”நங்”கென்று மனைவிகையால் குட்டு வாங்கி, குட்டி கிண்ணம் சைசுக்கு தலையில் புடைத்துக் கொண்டால் நான் ஜாவாப்தாரியில்லை..

அந்த புஸ்தகத்தின் சாரம்சம் இதுதான்.
By Accepting people you are not condoning their weakness or agreeing with their opinion; you are simply affirming their intrinsic worth; you are acknowledging that they think or feel in a particular way. You are freeing them of the need to defend, protect and preserve themselves.”

நல்லது தானே என்கிறீர்களா?

அதுதான் இல்லை இந்த நிலைக்கான பயிற்சி படிப்படியானது.; தினசரி வாழ்க்கையை யதார்த்தமாய் பார்த்தால் இந்த ஸ்டேஜுக்கு ஒரு வருஷத்தில் வந்துவிடலாம் எடுத்தவுடனே பாய்ந்தால் சொம்பால் அடிவாங்க வேண்டியதுதான்.

தினசரி எல்லாவற்றிற்கும் கணவனும் மனைவியும் நடுஹாலில் “ வா பார்த்துர்ரேன் இன்னிக்கு “ என்ற ரேஞ்சில் நின்றால் ரொம்ப விபரீதம்.

இந்த மாதிரி பொஸ்தகம் படித்துதான் கணவன் மனைவி உறவை ஸ்திரப்படுத்திக்கணுமா என்று கேட்பவர்களுக்கு வாங்கி படித்துவிட்டு சொல்லுங்கள். கொஞ்சம் கூட பிரயோஜனம் இல்லையென்று சொன்னால் புத்தகப் பணத்தை நான் வாபஸ் செய்கிறேன். ஒரு கண்டிஷன் கணவன் மனைவி இரண்டு பேரும் படிச்சாகணும். இரண்டு பேருமே ஒரே மாதிரி ,”இந்த புஸ்தகம் வேஸ்ட்” என்று சொன்னால் உத்திரவாதமாய் பணம் வாபஸ்.

No comments: