Sunday 18 May 2008

இப்படிக்கு


இது சில நாள் முன்பு விஜய் டி.வியில் ஒளிபரப்பான “இப்படிக்கு ரோஸ்” ஒரு குறிப்பிட்ட நாள் நிகழ்ச்சியின் விமர்சனப் பதிவு.

நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓர் அரவாணி. நிகழ்ச்சியில் ”வரைவுஇலா மான்இழையார்” இருவரும் புகழ் பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதாவும் கலந்து கொண்டனர்.

”வரைவுஇலா மான்இழையார்”- இந்த சொற்பிரயோகத்திற்காக என்னிடம் இமெயில், சாட், செல்போனில் சண்டை பிடிக்கும் உத்தேசம் யாருக்காவது இருக்குமானால் நேரே பக்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு எதிரே போய் நின்று கொண்டு சண்டை போடவும்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு பெண்களை இருட்டிலிருந்து மஹா வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ”உனது தொழில் சூட்சுமங்கள்” என்ன என்னவென்று கேள்வி கேட்டார்கள். எதிர்பாராமல் இந்த தொழிலில் சிக்கிக் கொண்ட பெண்மணியும், எனக்கு இது தான் ரொம்பப் பிடிச்சிருக்கு என சொன்ன பெண்ணும் டிவியின் பப்ளிசிட்டிக்கு ரொம்பவும் உபயோகமாக இருந்திருப்பார்கள். அதிலும் ஒரு ”வரைவுஇலா மான் இழையார்” எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொன்னதைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை.

மனிதனின் பாலியல் ஆசைகளும் அது மறுக்கப்படுவதும் தான் சமூகத்தில் CRIME RATE அதிகமானதற்கு காரணம் என ”வரைவுஇலா மான்இழையார்” சொன்னது வேதனை. அதைவிட சோதனை ”இந்த தொழிலுக்கு” சட்ட அங்கீகாரம் தந்துவிட்டால் குற்றங்கள் குறையும் என்ற வாதம்.

Traffic in Human Being என்று மிக நாகரீகமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 23 வது ஷரத்தில் சொல்லப்பட்டு தடை செய்யப் படவேண்டியதாகவும் சொல்லப் பட்ட இந்த தொழில் ஒரு குற்றம். தண்டனைக்குரிய குற்றம். இது Exploitation வகையிலான மனித உரிமைக்கு எதிரான குற்றம்.

இந்த தொழிலைச் செய்துவிட்டு தண்டனை அடையும் பெண்கள் மீண்டும் மீண்டும் அந்த அவலத்திற்கே தள்ளப்படலாகாது என்று சமூக அமைப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் விஜய் டிவி காற்றலைகளில் பரந்துள்ள TELECAST பலத்தால் அந்த அவலத்தை சட்ட ரீதியாக்க வேண்டும் என்ற குரலை பதிவு செய்ய முயற்சிப்பது CHEAP PUBLICITY ரகம்

ஐரோப்பாவில் சில நாடுகளில் நடக்கிறது , தாய்லாந்தில் நடக்கிறது.. அங்கேயெல்லாம் ஜன சபை கூடி இதைச் செய்யலாம் என அறிவித்து “தொழில்” அமோகமாக நடக்கிறது என்றும் இந்த நிகழ்ச்சியில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. அங்கேயெல்லாம் பாலியல் தொழில் அங்கீகாரம் பெற்றுவிட்டதனால் CRIME RATE குறைவாக இருப்பதாகவும் ராத்திரி 10 மணிக்கு மேல் பெண்கள் அங்கே வெளியில் சுதந்திரமாக போகலாம் வரலாம் என்ற எந்த புள்ளியியல் விபரமும் இல்லாத வாதம் வேறு.

சில பத்து வருஷங்களுக்கு முன்பு பாலைவனம் மாதிரி இருந்த துபாய் இப்போது எப்படி இருக்கிறது. பெரும்பான்மையாக Expatriate Work Force ஐ நம்பி இருக்கும் அந்த ஊரில் Sex Work Legalize பண்ணப்படவில்லை. அங்கு ராத்திரி 10 மணிக்கு ஒரு பெண் பாதுகாப்பாக வெளியே போய் வரமுடியும். உலகத்தின் எதோ ஒரு சில மூலைகளில் நடப்பதால் அது சௌகர்யம் என்று சொல்வது விதண்டாவாதம்.

Sex Urge பசி மாதிரி மலம் மாதிர் ஓர் உடலியற் கூறு என்று ”வரைவுஇலா மான்இழையார்” சொல்லிவிட்டு இதையெல்லாம் தடை செய்ய முடியுமா எனக் கேட்பது, நான் கெட்டுப் போய்விட்டேன். எல்லோரும் கெட்டுப் போகலாம் வாருங்கள் என கூப்பிடுவது மாதிரி இருக்கிறது. பசித்தால் எதை வேண்டுமானால் சாப்பிடலாமா.

அப்புறம், ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஒரு மாயை அது இந்தியாவில் ஐரோப்பியர்கள் வந்த பின் வந்த VICTORIAN MORAL என்று சொன்னது தான் நல்ல தமாஷ். பிரிட்டிஷ் சர்க்கார் வருவதற்கும் முன்பு இந்தியாவில் இந்த கொள்கையே இல்லை என்பது ”வரைவுஇலா மான்இழையார்” சொல்லும் வாதம்.

ஐரோப்பியர் இங்கே கால் வைப்பதற்கு பலப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கே ”ஒருவனுக்கு ஒருத்தி”க்கு காப்பியங்களும் பாட்டுகளும் நிறைய இருக்கின்றன. அதே சமயம் கி.மு 300 ல் மௌரிய காலத்திய ”அர்த்த சாஸ்திரத்தில்” (ஆமாம் சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தில் தான்) ”இந்த தொழிலில்” இருப்பவர் வருமான வரி கட்ட வேண்டும் என்றும் இந்த தொழிலை ரெகுலேட் செய்ய “Ganika Pratiganika “ என்று அரசு அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளது.

மனித நாகரீகத்தின் எந்த நிலையையும் பிற நாட்டவரைப் பார்த்த் பின் தான் தெரிந்த கொள்ள வேண்டும் என்ற நிலை இந்தியாவுக்கு இல்லை. இதற்கு முன்பும் இருந்தது இல்லை


Human Trafficking சட்ட விரோதம் என்ற நிலையில் இருக்கும் போதே ஆள் கடத்தல் நடக்கும் போது சட்ட அங்கீகாரம் கொடுத்துவிட்டால் கடத்தல் ஜாஸ்தியாகிவிடாதோ.; எப்படி குறையும் என எதிர்பார்க்கிறார்கள் என புரியவில்லை.

Council of Europe Convention, Human Traffic ஐ அங்கீகரிக்க சொல்லவில்லை;மாற்றாக இந்த் வேலை செய்பவர்களை சுளுக்கு எடுக்க சொல்லி வற்புறுத்தி வருகிறது.

கி.மு காலத்திய சிந்தனையாளர் கன்பியூஷியஸ் சொன்னதை ”வரைவுஇலா மான்இழையார்” படித்திருக்க சாத்தியம் இல்லை.


”What is God given is what we call human nature. To fulfill the law of human nature is what we call the moral law. The cultivation of the moral law is what we call as culture.

The moral law is a law from whose operation we can not for one instant in our existence escape”



உலகம் முழுக்க AIDS ஐ ஒழிக்க போராடிக்கொண்டிருக்கும் போது இங்கே பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கலாம் என ஆராதிப்பதும் அதற்கான டிவி நிகழ்ச்சிக்கு வியாபார நிறுவனங்கள் உபயதாரர் ஆகி இருப்பதும் Social Irresponsibility.

கண்டனத்துக்கு உரியது.

No comments: