Wednesday 30 March 2011

சக பயணி-1

சுமார் 400 கி.மீ தூரத்தை பகல் நேரத்தில், இரயில் பயணத்தில் அதுவும் கோடை தொடங்கிய நேரத்தில் பயணித்துக் கடக்க வேண்டிய சந்தர்ப்பம். சக பயணிகள் இது மாதிரியான தருணங்களில் பொழுது போக்க மிகவும் உதவுவார்கள். கையில் வைத்திருக்கும் வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் கைமாறும். அரசியல், சினிமா, சமூக அவலங்கள், சமூக அக்கறைகள் என உரையாடல்களும் களம் மாறி மாறி நேரம் நழுவும்.


மிக அருகில் அமர்ந்திருக்கும் ஒரு சக பயணி சமூகம் சார்ந்த அவரது கருத்தை நிறுவிடவும், நாம் அதனுடன் ஒத்துப் போவதும் இல்லை முரண்படுவதுமாக பல சமயம் இலக்கில்லாது., பற்பல சந்தர்ப்பங்களில் உரையாடும் கருத்துக்கு நம் தரப்பிலோ அல்லது அவர் தரப்பிலோ வலுவற்ற சான்றுகள் ஏதுமே இல்லாது உரையாடல் அந்த இரயில் வண்டியை விட வேகமாக பயணிக்கும். முரண்பட்ட கருத்துக்களே ஆயினும் இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய கண்ணியம் ஒட்டிக் கொண்டிருக்கும். அது ஒருவரை ஒருவர் முதன் முறை அறிந்துள்ளோம் என்பதால்.

எனக்கு இப்படியான பயணத்தில் வாய்த்த சக பயணி., அந்தப் பயணம் முழுமைக்கும் ஒரே சங்கதியைப் பற்றி உரையாடி வந்தது எனக்கான ஆச்சரியம். அவருக்கு 70 வயது கடந்திருக்கும் ஏன் 80 கூட இருக்கலாம். பாசஞ்சர் லிஸ்டில் பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும்.. அவர் தான் உரையாடலைத் தொடங்கினார்

“உங்களுக்கு காந்தியக் கொள்கைகள் மீது நம்பிக்கை இருக்கின்றதா”

நான் இந்தக் கேள்விக்கு எப்பவுமே உற்சாகமாக ஆமாம் என தலையாட்டி விடுவேன் அன்றைக்கு என்னவோ பதில் கேள்வி கேட்டேன்

“காந்தியக் கொள்கைகள் என திட்டவட்டமாக எதைச் சொல்லுகின்றீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா”

(பயணம் தொடரும்)

2 comments:

Jawahar said...

ஆனாலும் நீங்க ரொம்ப மோசம். இன்னும் கொஞ்சம் எழுதிட்டு பிரேக் போடலாமில்லே?

http://kgjawarlal.wordpress.com

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

கே ஜி சார்
இது வரை பாகம் 7 வரை எழுதிட்டேனே