Saturday 2 April 2011

சக பயணி- 2


நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் என் சட்டை பாக்கெட்டில் இருந்த பேனாவைப் பார்த்துக்

கொண்டிருந்தார். அந்த பேனாவில் காந்தியாரின் உருவம் பதித்திருந்தார்கள்

" சார் இந்தப் பேனா எனக்கு நான் பணியாற்றிய அலுவலகத்தில் எனக்கு அன்பு பரிசாக வழங்கியது. காந்தி குறித்து நீங்கள் என்னிடம் வினவியதற்கு இந்த பேனா காரணமாக இருக்கும் என யூகிக்கிறேன்"

" உங்கள் யூகம் மிகச் சரியானது. இது போன்ற பரிசுகளில் பெரும்பாலும் சாமி படங்கள் மதப் பெரியவர்களின் படங்கள் இருக்கும். முதன் முறையாக காந்தி படம் பதித்த கிஃப்ட் பேனாவைப் பார்க்கிறேன். உங்களுக்கு காந்தியின் மீது ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் தான் இப்படி வைத்துக் கொண்டிருக்க முடியும் என யூகித்து உங்களிடம் அப்ப்டி ஒரு கேள்வி கேட்டேன். நீங்கள் பதிலுக்கு என்னைக் கேள்வி கேட்டதால், உள்ளுக்குள் விஷயங்களை கோர்வைப்படுத்திக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். அதுவுமல்லாது காந்தி சிற்சில விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தாலும் பொதுவில் He is a symbol of good அதனால் உங்கள் மேல் ஒரு நல்மதிப்பு வரும் அதற்காக இதை வைத்துக் கொண்டிருக்கலாம் எனவும் யோசித்துக் கொண்டிருந்தேன்"

"நல்லது சார். நான் உங்களை பதிலுக்கு கேள்வி கேட்டது என்னை நான் தயார் செய்து கொள்ள ஒரு சிறிய அவகாசம்; நீங்கள் யூகம் என சொன்னதை நான் மித் (Myth) என சொல்வேன்.. எனது கருத்து இந்த விஷயத்தில் மிகவும் காரமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு என் வருத்தங்கள் ஆனால் என் கருத்துக்கான விளக்கம் சொல்ல நீங்க்ள் எனக்கு அனுமதி அளிப்பீர்கள் என கருதுகிறேன்"

"தாரளமாக சொல்லுங்கள்"

"யூகம் என்றும் அனுமானம் என்றும் சொல்லப்படுபவை ஒருவரின் நம்பிக்கை கட்டமைப்பில் (Belief Structure) ஒரு ஸ்தானம் எனச் சொல்லுவேன்"

"எனக்கு முழுமையாகப் புரியவில்லை சார்"

"ஒருவரின் நம்பிக்கை கட்டமைப்பு Opinions, Desires, Convictions, Values என அடுக்குகள் கொண்டவை என நான் கருதுகிறேன். இதில் கீழடுக்கு ஒப்பீனியன் எனக் கொண்டால் மேலான அடுக்கு வேல்யூஸ் என பொருள் கொள்ள் வேண்டும்."

"இதை இந்த தருணத்தில் ஏன் சொல்கின்றீர்கள் என தெரிந்து கொள்ளலாமா"

"சொல்கிறேன் சார். காந்தி படம் வைத்துக் கொண்டால் அது நல்லவர் எனும் அடையாளத்துக்கு உதவும் என நீங்கள் யூகிப்பதாக சொன்னீர்கள் அல்லவா. அதன் பொருட்டு இதைச் சொன்னேன்"

"ஆம் அப்படித்தான் யூகித்தேன். இப்போது கோர்ட் ஹாலில் எல்லாம் காந்தி படம் மாட்டப்பட்டுள்ளது. எதற்க்காக ? இங்கே நல்லது நடக்கும் ; உண்மை இருக்கும் என ஒரு உணர்வைத் தோற்றுவிப்பதற்க்காக. அது மட்டுமல்லாது அவர் தேசப் பிதா எனும் அடையாளம் பெற்று விட்டார் என்பதற்க்காவும்; He is mere a convention there என்பது என் எண்ணம்”


"மிக எளிமையாக அல்ல அல்ல மிக சாதாரணமாக சொல்லிவிட்டீர்க்ள். இதில் எனது கருத்தினை பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். எனக்கு உதவியாக இருக்கும் என கருதுவதால் எனது மடிக் கணிணியை உயிர்ப்பித்து உபயோகித்துக் கொள்ளலாமா"

"தாரளமாக சார்.. அதற்கு முன்னால் ஒரு கப் காஃபி அருந்தலாமா"

"செய்யலாம். நான் காஃபியில் சர்க்கரை சேர்த்துக் கொள்வதில்லை.. இதோ காந்திக்கு மீண்டும் வருகிறேன்

உண்மை என்பது வெறும் பொய் தவிர்ப்பது எனும் நிலையில் காந்தியார் இருக்கவில்லை. அதை எப்போதும் தவிர்ப்பது எனும் நிலையில் இருந்தார். நீங்கள் இராகவன் நரசிம்மன் அய்யர் என்பவர் குறித்து அறிந்திருப்பீர்கள்... ?"

"இல்லை சார்"

"இராகவன் அய்யர் எழுதிய The Moral and Political Thought of Mahatma Gandhi நூலில் காந்தியாரை மேற்கோள் காட்டி சொல்லியதை சுட்டினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்

As truth is the sbstance of morality , man is a moral agent only to the extent that he embraces and seeks the truth. By truth is not merely meant the absstention from lies, not just the prudential conviction that honesty is the best policy in the long run , but even more that we must rule our life by this law of truth at any cost. We must say No when we mean NO , regardless of the consequences

இதில் நீங்கள் ஒன்றைக் கவனிக்கலாம். உண்மை உரைப்பது என மேலோட்டமாக இல்லாமல் உண்மையை தேடுவது என ஆழமாக் சொல்லப்பட்டிருக்கின்றது. இப்படியான தேடலினால் தான் காந்தியார் படம் நீதிமன்ற கூடங்களில் மாட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்"

"காந்தியாரே ஒரு பாரிஸ்டர்.. ஆனால் அவரால் இப்படி ஒரு உண்மைத் தேடலில் வெற்றி கொள்ள இயன்றதா "

"நீங்கள் காந்தியாரை கருப்பு அங்கி அணிந்து கொண்டு. கட்சிக்காரரை சட்டத்தின் பார்வையில் இருந்து காப்பாற்ற அல்லது சட்டத்தின் பார்வையில் வேண்டும் எனும் அளவுக்கு நிவாரணம் பெற்றுத் தரும் வக்கீல் / பாரிஸ்டர் அளவில் பார்த்தீர்கள் என்றால் இந்த சங்கதியினைப் புரிந்து கொள்வதில் சற்று சிரமம் இருக்கும்"

"ஓ அப்படியா .. வேறு எப்படி புரிந்து கொள்ள வேண்டும்"

"மேலும் தொடர்வதற்குள் இதோ காஃபி வந்து விட்டது.. அருந்திய பின் தொடரலாம்"

(பயணம் தொடரும்)

2 comments:

VSK said...

very intersting beginning! Waiting for the continuation!

Unknown said...

Anbu Mouli Sir, Saha Payani-2 um very very intresting and thought provoking.

Otriyur chandru