Monday 17 October 2011

பொட்டி ஸ்ரீராமலு


என்னுடன் பணியாற்றும் அந்தப் பெண் ஹதராபாத்திலிருந்து நேற்று இரவு பேசினாள். தெலுங்கான போராட்டம் மிகவும் தீவிரமாகி, குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பவதற்கே பயமாக இருக்கின்றது. இந்த லட்சணத்தில், ஸ்கூலை மூடி வைத்தால், அங்கீகாரம் ரத்து என ஸ்கூல் நிர்வாகத்தை ஆந்திர சர்க்கார் கபர்தார் அளவில் அச்சுறுத்தி வைத்திருக்கின்றார்களாம். இதனால் ப்ரின்சிபால் தொடங்கி, ஸ்கூல் ப்யூன் வரை எல்லோரும் பெற்றோர்களுக்கு ஃபோன் செய்து குழந்தைகளை அனுப்புங்கள் ப்ளீஸ் எனக் கேட்கின்றார்களாம்..

என்ன செய்யலாம் மௌளீ என என்னிடம் அந்தப் பெண் கேட்டது..

"உங்க ஆந்திரா உருவானதன் அடிப்படையே எங்க மதாராஸ் பட்டிணத்திலே தான் தொடங்கினது தெரியுமா"ன்னு கேட்டேன்.

"என்ன சொல்றீங்க”

"ஆமாம் பொட்டி ஸ்ரீராமலு உண்ணாவிரதம் இருந்தது இங்கே மதராஸிலே தான். 1952 இதே அக்டோபர் 19 ம் தேதி.. ஆந்திரா அமைக்கனும்னு உண்ணாவிரதம் தொடங்கி , அதைத் தீவிரமாக்கி டிசம்பர் 15 அன்னிக்கு இறந்துட்டார்.. இந்த போராட்டம் தான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்க தூண்டு கோலாக இருந்ததுனு சொல்லலாம்.. இந்தப் போராட்டத்தின் நோக்கத்தில் மதராஸையும் ஆந்திராவில் இணைக்கனும்னு நோக்கம் இருந்தது..

அக்டோபர் 1 1953 லே ஆந்திரா மாநிலம் முதலில் கர்நூலை கேப்பிடலாக வைத்து அறிவிக்கப்பட்டது. 1956 வரை ஹதராபாத் ஸ்டேட் என்று தனியாக தெலுங்கானவை உள்ளடக்கிய பகுதி இருந்தது. அது இந்த புதிய ஆந்திராவிலே 1956 லே இணைக்கப்பட்டு ஹதராபாத் கேப்பிடலாகி.. இப்ப இருக்கும் ஆந்திரபிரதேசம் உருவாச்சு. இப்ப மீண்டும் தெலுங்கானானு பிரிச்சுக் கொடுனு கேட்கிறாங்க"

"ஓ அப்படியா"

”ஸ்ரீராமுலு காந்தியோட நெருக்கமான தொடர்பு கொண்டவர்னு தெரியுமா

காந்தி 10 மார்ச் 1924ல்லே கொண்டா வெங்கடப்பையா என்பவருக்கு ஒரு தந்தி அனுப்புகிறார்

சாபர்மதி ஆசிரமத்தினோடு தொடர்புடைய ஸ்ரீராமுலு, முலாப்பேட்டையிலிருக்கும் வேணுகோபாலசாமி ஆலயத்திற்குள் ஹரிஜனங்களை பிரவேசிக்க அனுமதிக்கனும்னு கோரிக்கை வைத்து மார்ச் 7 முதல் நெல்லூரில் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை நேரில் சந்தித்து,
அவருக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டுகிறேன்”

”பழைய வரலாறு... ம்ம் மேலே சொல்லுங்க”

"இந்த போராட்டத்தை ஆதரித்து மஹாத்மா 1924 மார்ச் 15 அன்று பம்பாயிலிருந்து ஓர் அறிக்கை வெளியிடறார்"

"என்னானு சொல்லுங்க"

"அப்படியே படிக்கிறேன் கேளுங்க‌

Shri Sriramulu is an unknown poor Congressman and servant of humanity working in Nellore. He has been labouring single handed for the cause to the Harijans of that place. There was a time when high hope was entertained about removal of untouchability and other social work in Nellore. An ashram was built near Nellore, but for variety of causes the activity received a set-back. Desabhakta Konda Venkatappayya was, and still is, though very old, the moving spirit in connection with these activities. It is in this place that shri Sriramulu has been quietly and
persistently working for the removal, root and branch, of untouchability.

He has been trying to have a temple opened to Harijans. He asked me the other day whether, in order to awaken public conscience in favour of such opening, he could, if all others efforts failed, undertake a fast. I sent him my approval. Now the place is astir. But some persons have
asked me to advise Shri Sriramulu to suspend his fast for removing legal difficulties of which I have no knowledge. I have been unable to give such advice.

As I am anxious that an unobtrusive servant of humanity my not die for want of public knowledge and support, I bespeak the interest of the journalists of the South, if not of all India, to find out for themselves the truth of the matter and, if what I say is borne out by facts, shame
by public exposure the opposing parties into doing the right and save a precious life.

’"மேலே சொல்லுங்க"

”ஸ்ரீராமுலு காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்றிற்கு காந்தி வார்தா ஆசிரமத்திலிருந்து ஆகஸ்ட் 3 1939 ல் பதில் எழுதிருக்காரு. அப்படியே படிக்கிறேன் கேளுங்க‌

SEGAON, WARDHA,
August 3, 1939

MY DEAR SHRIRAMULU

I have your letter. I must not write to Rajaji. You should go to the Kodambakkam Ashram and offer your services as a volunteer. They will accept you if you are a steady worker

இதன்பின்பு 1945ல் இரண்டு கடிதங்கள் பம்பாயிலிருந்து காந்தி ராமுலுவுக்கு எழுதியிருக்கின்றார். பின்னர் 1946 ல் நவகாளியிலிருந்தும், டெல்லியிலிருந்தும் கடிதங்கள் அனுப்பியிருக்கின்றார். இந்தக் கடிதங்களிலெல்லாம், தீண்டாமை ஒழிப்பின் அவசியத்தினையும் அதற்காகப் பாடுபடும் ராமுலுவை பாராட்டும் விதமாக காந்தியார் எழுதியிருந்தார்"

“ஓகே மௌளீ.. நாளைக்கு உங்களுக்கு லீவு.. கொண்டாடுங்கனு சொல்லிட்டு அந்தப் பெண் ஃபோனை வைத்துவிட்டது..

மடிநிறையப் புத்தகமுமாய் ஏன் நான் மொபைல் போனை முறைத்துப் பார்க்கிறேன் எனக் கேட்டாள் என் மனைவி.

2 comments:

க்விஸ்ஸர் said...

காந்தி ஆதரித்த மொழிவாரித் திட்டத்திற்கும், நேருவின் தலைமையில் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு.

கண்டுபிடியுங்கள் ! :)

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - வரலாற்றினைப் படிப்பது மட்டுமல்லாது பகிர்ந்து கொள்ளும் நல்ல எண்ணம் - வாழ்த்துகள் - தெலுங்கானா ஆந்திராவில் சேர்ந்து இத்தனை ஆண்டுகள் கழித்து பிரிய நினைக்கிறது. இந்தியாவில் பல் வேறு மாநிலங்கள் பிரிந்திருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா