Tuesday 6 May 2008

சுஜாதாவிடம் கற்றதும் ... பெற்றதும்-2


நான் இன்ஜினியரிங் டிப்ளமோ படிக்கும் போது HEAT POWER ENGINEERING என்று ஒரு பாடம் உண்டு. அந்த பாடம் நடத்திய வாத்தியாரும் பாடத்திற்காக சிபாரிசு செய்யப்பட்ட புஸ்தகமும் நல்ல புஷ்டியாக இருந்தார்கள்.

சுமார் முக்கால் அடி THICKNESS ல் எனக்கு அறிமுகம் ஆன முதல் பாட புஸ்தகம் அதுதான். அதுவரை நான் பார்த்துப் பழகிய பாட புஸ்தகங்கள் எல்லாம் ரொம்பவுமே ஒல்லியானவை.

THERMAL ENGINEERING என்று தலைப்பிட்டு A. S SARAO என்ற மஹானுபாவன் எழுதிய அந்த மெகா சைஸ் புத்தகத்தில் எது பாடம் எது படம் என்று தெரியாமல் சிரத்தையாக குழம்பியிருக்கிறேன். இந்த புஸ்தகத்தில் காணப்படும் குறியீடுகளை கிரேக்க தேசத்தில் கூடப் பார்ர்க முடியாது என்று இன்னமும் நம்புகிறேன்.

இந்த பாடத்தில் தெர்மோடைனமிக்ஸ் முதல் விதி, இரண்டாம் விதி, கெல்வின் பிளாங் ஸ்டேட் மெண்ட், பெர்ப்பெட்சுயல் மோஷன் என்று சில சங்கதிகள் உண்டு. படித்த மூணு வருஷமும் இந்த மூன்று சங்கதிகள் பாடய்ப்படுத்தின. கட கட என மனப்பாடம் செய்து வரி பிசகாமல் பரிட்சையில் எழுதி நல்ல மார்க்கில் பாஸ் செய்தேனே ஒழிய சத்தியமாய் ஒன்றும் புரியவில்லை. அந்த வாத்தியாரும் இதனை சொல்லித்தர ரொம்பவும் பிரயத்தனப்ப்டவில்லை.

1986 ல் படிப்பு முடிந்து உடனே வேலைக்கும் சேர்ந்துவிட்டேன். ஆறு வருஷம் கழித்து சுஜாதவின் “ஏன் எதற்கு எப்படி” படித்தேன். அதில் குமாரி பூமா வைரமணி, போடி நாயக்கனூர் கேள்வி : நிலையான இயக்கம் (PERPETUAL MOTION) என்றால் என்ன?


சுஜாதா, பர்பெட்சுயல் மோஷனில் நடந்த நடந்து கொண்டிருக்கும் பல வருஷ ஆராய்ச்சி சுவாரசியங்களை சொல்லிவிட்டு.

“நிலையான இயக்கம் என்பது விஞ்ஞான விதிகளின் படி சாத்தியமே இல்லை. தெர்மோடைனமிக்ஸில் இரண்டு விதிகள் தாம் சதி செய்கிறன” என எழுதி விட்டு சரியாக 42 சொற்களில் தெர்மோடைனமிக்ஸ் முதல் விதி, இரண்டாம் விதி, கெல்வின் பிளாங் ஸ்டேட் மெண்ட் மூன்றையும் விளக்கியிருந்தார்.

சுளீரென்று புரிந்தது. மூணு வருஷம் தண்ணி காட்டிய சங்கதிகள் !!

உடனே அந்தப் பக்கத்தை அப்படியே XEROX செய்து நான் படித்த அந்த பாலிடெக்னிக் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினேன். பத்து நாளில் பதில் வந்தது,

“ நன்றி .. உடனே "ஏன் எதற்கு எப்படி" வாங்கி படிக்கிறேன். Science ஐ இத்தனை simple ஆக சொல்ல முடியுமானால் ஆசிரியர்கள் எல்லோரையுமே முயற்சி செய்யச் சொல்லுகிறேன் ”

1 comment:

cheena (சீனா) said...

அறிவியலை எளிய தமிழில் விளக்கும் திறமை சுஜாதாவிடம் உண்டு - பல புத்தகங்கள் படித்திருக்கிறேன்