Monday 21 April 2008

சுஜாதாவிடம் கற்றதும் ... பெற்றதும்-1


நாகர்கோவிலில் ஒரு கல்யாணம். அதற்காக போயிருந்தேன். எனது கல்லூரித் தோழன் சிவகுமார் கன்னியாகுமரிதான். எனவே கல்யாணம் முடிந்த கையோடு அவன் வீட்டுக்குப் போனேன்.

மீன்பிடி விசைபடகில் கடலில் ஒரு ரவுண்டு அழைத்துக் கொண்டு போனான். விவேகாநந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இரண்டையும் ரியர் வ்யூவில் பார்த்தேன். சில போட்டோக்களும் எடுத்தேன்.

“சிவா இப்படியே. தெற்கே போனால் அண்டார்டிகா வந்துடாது “

“ வழியிலேயே கோஸ்ட் கார்ட் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய்டுவான்.. வேணா ஒன்னு பண்ணலாம் கொஞ்ச தூரம் தெற்கே போயிட்டு அப்படியே கிழக்கே வந்து திரும்பிடலாம். சன் செட்டிங் கடல்லேர்ந்தே பாக்கலாம்”

நானும் உற்சாகமானேன். என்னுடைய கைப்பையில் வைத்திருந்த பொடி செய்த அவோமின் எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன்.

“என்னடா அது “

”வாந்தி வந்தால் .... அதுக்குதான்.. கடல்ல ரொம்ப நேரம் பயணம் பண்ணினால் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாந்தி வரும்"
--
எல்லன் பொடி போலிருந்த மருந்து பொட்டலத்தை எடுத்து வைத்தாள். “எமிலி ! கடற்பிரயாணத்தில் வாந்தி வந்தால் இதை சாப்பிடு “
- சுஜாதாவின் "ரத்தம் ஒரே நிறம்"

1 comment:

cheena (சீனா) said...

சுஜாதாவின் எழுத்துகள் அவரது அனுபவத்தில் உணர்ந்த உண்மைகள் தான்