Saturday 5 April 2008

குட்டிக் கதை-1 ஆசை


முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து தனது யூஷுவலான கேள்வியைக் கேட்டார்.

“உனது பக்தியை மெச்சினேன். என்ன வரம் வேண்டும்?”

“பிரபோ !! தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்; வேறெதுவும் வேண்டாம்”

“நீ மாறவேயில்லை” என்று சிரித்துவிட்டு, கடவுள் , “பக்தா !! நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்க கூட வேண்டாம். அதனடியில் நின்று கொண்டு என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளி கையை அசைத்தார். அந்த மாஜிக் மரம் அங்கே. கடவுள் ஆசிர்வாதம் கலந்த ”டாட்டா” காண்பித்துக் கொண்டே மறைந்தார்.

மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது . இது நமக்கு ஆசையை வளர்த்து நம்மை பாவம் செய்ய வைக்கும் என்ற லைனில் சிந்தித்த முனிவர் அங்கிருந்து ஓடி விட்டார்.

வரம் தரும் போது கடவுள் வார்த்தைகளில் ஒரு பிசகு செய்துவிட்டார். “அதனடியில் நின்று கொண்டு என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று சொன்னாரே தவிர முனிவர் நினத்தால் என சொல்லவில்லை. அந்த மரமும் அந்த காட்டில் யாரவது தனக்கடியில் வந்து நின்று நினைப்பார்கள் என்று காத்திருந்தது.

ஒரு நாள் அந்த வழியே ஆடு மேய்த்துக் கொண்டு ஒரு இளைஞன் வந்தான். ”அந்த” மரத்து நிழலில் கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம் என நினத்தான்.

படுத்துக் கொண்டே யோசித்தான், “ இது என்ன பொழைப்பு; தினம் தினம் இத்தனை தூரம் இத்தனை ஆட்டையும் மேய்ச்சிட்டுக்கு வந்து பத்திரமா கொண்டு போய்- ச்சை !! ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை. இந்த ராஜா ராணியெல்லாம் அரண்மனையில் சாப்பிடற விருந்த்து மாதிரி சாப்பாடு ஒரு தடவை கிடைச்சா தேவலை”

மாஜிக் மரம் தன்னுடைய முதல் அனுக்கிரஹத்தை லேட் இல்லாமல் செய்தது. அவன் கண் முன்னே ஒரு ராஜோபசார விருந்து. அவன் பயந்தே போய் விட்டான். இது ஏதோ பிசாசு வேலை என்று அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தான். பயம் தெளிந்து அந்த விருந்தை ஒரு பிடி பிடித்தான்.

மீண்டும் யோசித்தான், “ இப்படி வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு ராஜா ராணியெல்லாம் ஒசத்தியான கட்டிலில் ஆளுக விசிறிக்கிட்டே தூங்குவாங்க; நமக்கும் அப்படி கிடைச்சா நல்லாயிருக்கும்”

மரம் இந்த தடவையும் ஸ்பீடாய்.

மீண்டும் யோசித்தான், “ ஆமா ! நாம நடுக்காட்ல இப்படி படுத்திருகோமே. புலி வந்து அடிச்சா ....”. மரம் வழக்கத்தை போல ஸ்பீடாய்
-----------------
ஆசை ஒன்றைத் தொடர்ந்து ஒன்று தீயாய் எறிந்து நம்மை அழித்துவிடும் என்று சொல்லி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை இது

1 comment:

cheena (சீனா) said...

ஆசை ஆசை அழிவிற்கு ஆரம்பம்
ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை அருமை