Sunday 3 April 2011

கூடுமாயில் பிரமசரியம் கொள்


மதராஸ் பட்டணத்தை சுற்றிப் பார்க்கவென வரும் வெளியூர் ஜனங்கள் தப்பாமல் வரும் இடம் எக்மோர் ம்யூசியம் கட்டிடம். பக்கத்தில் இருக்கும் கன்னிமரா நூலகத்திலே புத்தகம் யாசித்துப் பெற்று திரும்பினேன். வாகன நிறுத்துமிடத்தை நெருங்கின போது,

"ஓய் இங்கே வாரும் என 'அதட்டல்'" கேட்டது. வலப்புறம் திரும்பிப் பார்த்தேன். அங்கே தூரத்தில் முண்டாசு.

"உங்களுக்கு மூக்கு வேர்ப்பது எனக்கு புதிததல்ல"

"அது சரி பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே, என பட்டினத்துப் பிள்ளை சொன்னதைப் படித்திருப்பீரே"

"அது தான் நான் என்ன யோசித்திருந்தேன் என யூகித்து விட்டீர்களே"

" நீர் யூகித்ததும் யூகித்த வழி போய் உத்திரம் காணாது குழம்பியதும் தெரிந்த பின் மேலுலகில் என்ன வேலை என இங்கே வந்து விட்டேன். தென்னந்தோப்பும், கிணறும் கேட்டு பாட்டுக் கலந்திடவென் பத்தினிப் பெண் எனத் தானே கேட்டேன்
வெறுமனே பெண் எனக் கேட்டிருந்தால் இன்றைக்கு இன்றைக்கு நாகரீகக் கேடாக இளைஞரும் யுவதியும் களிப்பு என்ற பெயரில் கலாச்சார சீரழிவு செய்வதற்கு ஒப்பாக ஆகியிருக்குமே"

"எல்லாம் சரிதான் ; நேரடியாகவே பாடலுக்கு வருகிறேன்.

கூடுமாயில் பிரமசரியம் கொள்.
கூடுகின்றிலதெனில் பிழைகள் செய்து
ஈடழிந்து நரக வழிச்செல்வாய்
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்

இது தான் எனக்கு ஐயம் தந்த பாடல். கலியாணம் செய்து பிள்ளைகள் பெற்ற தகப்பன் எழுதும் பாடலா இது"

" ஹோ ஹோ ஹோ !!!!!! பராசக்தி பராசக்தி...இது தானா உமது ஐயம்"

"சிரிக்காமல் விஷயத்துக்கு வாருங்கள்"

" வீடு உறா வணம் யாப்பதை வீடு என்பர்
மிக இழிந்த பொருளை பொருள் என்பார்
நாடும்கால் ஓர் மணமற்ற செய்ய செய்கையை
நல்லதோர் மணம் ஆமென நாட்டுவார்

இப்படி நாட்டுவார்களை குறித்து பாடிய பின் தான் இம் மணம் என குறிப்பிட்டு உரைத்தேனயல்லாது பொதுவில் மணம் செய்யாதே எனவா பாடினேன்"

" நான் உங்களை நமஸ்கரிக்கிறேன். என்னை ஆசிர்வாதம் செய்யணும்"

சாஷ்டாங்கமாக விழுந்தேன்.

முண்டாசு பாடினான். பாடினான். பாடியபடியே விண்ணளவு உயர்ந்தான்.

அப்படியே சொல்லிவிட்டேன் ஐயோ திருவுளத்தில் எப்படி நீர் கொள்வீரோ யானறியேன்.. ஆரியரே

காதலருள் புரிவீர் காதல் இல்லையென்றிடிலோ சாதல் அருளி தமது கையாற் கொன்றிடுவீர் எனக் குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண் !!!!!!

என் கண்ணிலிருந்து மறைந்தான்

1 comment:

Anonymous said...

நன்றி மௌலி, மிக அருமை

ராம்