Tuesday 26 April 2011

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா


தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

ஒன்றை நன்றாக கவனிக்க முடிகிறது. இந்திய அளவில் பேசப்படும் விஷயங்கள் சோஷியல் நெட்வொர்க்கில் நன்றாக அலசப்படுகின்றன.

டுவிட்டர், பேஸ் புக், லிங்ன்ட் இன். ஆனால் அவற்றில் எல்லாம் உணர்ச்சி மிதப்புகள் அதிகமாக இருப்பதாக நினைக்கின்றேன். காரணம் அந்த விஷயங்கள் குறித்த தகவல்கள் இப்போதெல்லாம் ஊடகங்களில் சுடச் சுடச் கிடைக்கின்றன. ஊடக செய்திகள் சுட்டிக் காட்டும் தன்மையைத் தாண்டி சுவாரசியம் சேர்ப்பதற்காக விவாதம் எனும் பெயரில் செய்தியினை விரிவாக சொல்கிறோம் எனும் பெயரில் ஒரு கண்ணோட்டத்தினை ஓர் எண்ண அலையினை மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கின்றார்கள்

உதாரணத்திற்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணை; தொடர்புடைய அமைச்சகத்தில் பொறுப்பு வகித்த அமைச்சர் மத்திய புலனாய்வுத் துறையால் கைது, தொடர்ச்சியா விசாரணை குற்றப் பத்திரிக்கை தாக்கல்.. இன்னொரு வழக்கில் மற்றுமொரு புள்ளி கைது..

இவர் கைது ஆவாரா .. இத்தனை கோடி ரூபாய் என்ன ஆனது. சம்பவங்களை யூகிக்க இயலாத கோணத்தில் வீடியோவாக காண்பித்த வண்ணம் உள்ளார்கள்;

செய்தியில் வீடியோவில் காட்டப்படும் எல்லோரும் குற்றம் இழைத்தே இருப்பார்கள். இவர்களுக்கு என்ன விசாரணை வேண்டியிருக்கிறது. உடனே தூக்கில் போடாமால் என்கிற அளவில் கூட சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் பரவலாகவும் உணர்வு பூர்வ்மாகவும் ஆதங்கங்கள் தென்படுகின்றன‌

ஒருவர் ரிமாண்டில் கைதாகி இருக்கும் போதே அல்லது ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் எண்ணம் கொண்டு அவர் தண்டனை அனுபவித்து வருவதாகவும் எண்ணம் கொண்டு அதனை ஒட்டியவாறே சிந்தனை துளிகள் இந்த தளங்களில் பார்க்க முடிகிறது. இதன் நீட்சியை யோசித்துப் பார்க்கிறேன். செய்திகளின் அதீத
தன்மையால் நம் மனதில் ஒருவகையாக நீதிபதி பொறுப்பு ஏற்றுக் கொண்டு குற்றவாளி முத்திரை குத்திவிடுகிறோம்.

ஆனால் நிதர்சனத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இந்திய நீதி பரிபாலன முறைகளில் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமின் முறையீடு, மேல் முறையீடு, மறு முறையீடு என நிவாரணம் தேடும் போதும், ஏற்கனவே மனதில் வடிவம் பெற்று விட்ட தண்டனை பிம்பம் கலைகிறது


இப்போதும் புலன் விசாரணை அமைப்புகள் அதன் அதிகாரிகளின் செயல் திறன் மீது , நேர்மை மீது, நீதி அமைப்பின் செயல் திறன் மீது அதன் நேர்மை மீது, அவசர அவசரமாக களங்கம் கற்பிக்கும் மன நிலைக்கு உந்தப்பட்டு மீண்டும் டுவிட்டர், பேஸ் புக் லிங்ன்ட் இன் எங்கும் அவதூறு மழை.

பிம்பத்தினை வரையும் போது என்ன அவசரமோ அதே அவசரம் அது நிதர்சனத்தில் மாற்றம் காணும் போது.. மீண்டும் திருத்தி எழுதும் போது

இந்திய நீதி மன்ற நடை முறைகளில் உள்ள படிக்கட்டை புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு லட்சம் கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருந்தாலும். இந்தப் படிக்கட்டு தவிர்க்க இயலாது

வழக்கு பதிவு செய்யப்படுதல் ‍ இது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்.. குறைந்த பட்சம் ஒரு மாஜிஸ்திரேத் நீதி மன்றம் அல்லது மாவட்ட அந்தஸ்தில் உள்ள நீதி மன்றம்

வழக்கினை விசாரிக்கும் புலன் விசாரணை அமைப்பு நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தல்

குற்றப்பத்திரிக்கையினை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கி அவர் தரப்பினை கேட்டல்

வழக்கு விசாரணை.. வாதப் பிரதிவாதங்கள்

வழக்கின் தீர்ப்பு

இந்த தீர்ப்பினை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் முறையீடு

உயர்நீதி மன்றத்தில் வழக்கு முறையீட்டு அளவில் விசாரண‌

உயர் நீதி மன்ற தீர்ப்பு

உயர் நீதி மன்றத்திலேயே அதிக நீதிபதிகள் கொண்ட் பெஞ்சிடம் மேல் முறையீடு

அந்த பெஞ் தீர்ப்பு

அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு

உச்ச நீதி மன்ற தீர்ப்பு

இதில் எல்லாப் படிகளும் குற்றம் சாட்டும் புலனாய்வு அமைப்புக்கும் , குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பொது. இரு தரப்புக்கும் சம் வாய்ப்பு

செய்தி ஊடகங்கள் மக்கள் மனதுக்குள் தனது செய்தி வழங்கும் தன்மையால் ஊடுருவி ஒருவருக்கு குற்றவாளி அந்தஸ்த்தை வழங்கி ஒரு பிம்பம் வரையப்பட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் இந்தப் படிக்கட்டுகளில் ஏறும் போது அந்த பிம்பம் உடைகிறது. அந்த வ்ழக்கினை விசாரித்த புலன் விசாரணை அமைப்பு குற்றம் சாட்டப்பட்டவ்ரி ஏவலாள் ஆகிவிட்டது போலவும் புது பிம்பம் உருவாகிறது.

அந்த அமைப்பின் நேர்மை எள்ளி நகையாடப்படுகிறது

இதெல்லாம் நம்மை நாமே பலவீனமாக்கிக் கொள்வதல்லாது வேறொன்றுமில்லை

குற்றம் சாட்டப்பட்டுள்ள எவருக்கும் ஆதரவு தெரிவிப்பதல்ல நோக்கம்

ஆனால் குற்றம் சாட்டப்படும் நிலையிலிருந்து குற்றம் நிரூபணம் ஆகும் வரையிலான பயணம் நெடும் பயணம். இதனை புரிந்து

கொள்ளும்

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

2 comments:

மனோவி said...

அது என்னவோ உண்மை தான் நம் மக்கள் எல்லாவற்றையும் பலூன் மாதிரி ஊதி பார்ப்பதில் அளவுக்கதிகமாய் ஆர்வமுள்ளவர்கள் ஆயிற்றே..

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

சிந்தனை அருமை - நம் நாட்டு சட்ட நடைமுறை இதுதான். இருப்பினும் கால தாமதம் என்பது கட்டுப்படுத்த இயலாத ஒன்றாகி விட்டது. இரட்டை ஆயுள் தண்டனை 15 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் உறுதி செய்யப்படுகிறது. சட்ட நடைமுறைகளை விரிவாகச் செய்ய நடவடிக்கை எடுக்க இயலாதா ? நட்புடன் சீனா