Sunday 24 April 2011

சக பயணி 4

சக பயணி 4


"சார் ! வாழ்க்கையில் எல்லோரும் பல பொறுப்புகளை சுமந்திருக்கின்றோம். அலுவலகத்தில் சிப்பந்தியாக, குடும்பத்தில் உறவு முறையாக, நட்புகளுடன் தோழமையாக, தினசரி வாழ்வில் சந்திக்கும் மனிதர்களுடன் சக மனிதனாக இப்படி பல; இவை என்னவோ ஒரு கல்லூரி அல்லது பள்ளிப் படிப்பில் நமக்கு உண்டான பல பாடத்திட்டங்கள் போல ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சங்கதிகள் போல; ஆனால் இவை எல்லாம் ஒரே மனிதனால் நிறைவேற்றப்படும் கடமைகள் எனும் அடிப்படையில் ஒரு அடிப்படை சிந்தாந்தம் இதனை
நிர்வகிக்கும். அது வெளியில் புலப்படாது"

"இல்லையே அலுவலக வாழ்க்கை வேறு; வீட்டு வாழ்க்கை வேறு"

" நீங்கள் நான் சொல்ல வந்த கருத்தை சற்று ஆழமாக கவனிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்; ஒருவன் பொது வாழ்வில் ஒரு மாதிரியும் தனி வாழ்வில் ஒரு மாதிரியும் நடந்து கொள்ளலாம். ஆனால் ஏதாவது ஒன்று தான் அவரது இயல்பாகவும் மற்றொன்று இயல்புக்கு முரண்பட்டதாகவும் இருக்குமல்லவா"

"ஆமாம் நிச்சயமாக"

"அந்த இயல்பை வழி நடத்திச் செல்லும் சித்தாந்தம் அல்லது அவரது கேரக்டர் என ஒன்று வைத்துக் கொள்ளுங்கள் அது இயல்போடு இயைந்ததாகவும் இயல்போடு இசைய மறுப்பதாகவும் இரட்டை நிலைப்பாடு கொண்டதாகவும் இருக்க இயலுமா"

"இன்னும் சற்று விளக்கமக சொல்ல முடியுமானால் பயனுள்ளதாக அமையும்"

"Howard Gardner எழுதிய Unschooled Mind எனும் நூலில் சொல்வதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்: ஒருவன் தனக்கு எப்படி பயிற்சியினை அமைத்துக் கொள்கிறானோ அப்படியே தனது செய்கைகளில் நடத்தையில் சிறப்பினை வெளிப்படுத்த முடிகிறது. அவன் போதிக்கப்பட்ட வழிகளில் தனது செய்கையை செலுத்துகிறான்.. சூழல் மாறும் போது அவனது செய்கைகள்
தடுமாறுவது மட்டுமல்ல அவை முழுமை பெறாமலும் போகின்றன. இவ்வகைப் பயிற்சி Compartmentalisation என அழைக்கப்படுகிறது.. அதாவது ஒரு இரயில் பெட்டி போல மனதிற்குள் அடுக்குகளை சமைத்துக் கொள்வது. ஒரு பெட்டி வசதியானதாக ஒரு பெட்டி சாதாரண வசதிகள் கொண்டதாக சமைக்கப்பட்டது போல நமக்குள்ள பொறுப்புகளை வழி நடத்தும் சித்தாந்தங்களை ஒவ்வொரு பொறுப்புக்கும் ஒன்றாக சமைத்துக் கொள்வது; ஆனால் இப்படி சமைத்துக் கொள்வதில் சமரசங்கள் தான் இருக்குமே அல்லாது அவை நிரந்தரமானது
அல்ல. ஒரு பொறுப்பு மற்றொன்றை எதிர் கொள்ள நிகழும் தருணத்தில் எந்தப் பொறுப்பு முக்கியமானது என கேள்வி கேட்டு பதில் கிடைக்க இயலாமால் இரண்டும் சமரசம் செய்யும் போராட்டம் ஆனால் காந்தியாரிடம் இது போன்ற தருணங்களில் சங்கடங்களே இருந்ததில்லை. காரணம் அவர் இப்படி அடுக்குகள் சமைத்துக் கொள்வதில் அடிப்படையாக ஒரே சித்தாந்தத்தை முன் வைத்தார். Moral tenets applied to men in every situation என்பது அவரது சிந்தாந்தம். அதில் ஒரு போது அவர் சமரசம் செய்து கொண்டது இல்லை அவர் எடுத்துக் கொண்டு நடத்திய வழக்கில் அவர் ஆதரித்த கட்சிக்காரர் பிழையானவர் எனத் தெரிந்த உடன் அவர் இந்த அடிப்படை சித்தாந்தத்தின் வழி நின்று பேசினார்.. அவருடைய சுயசரிதையிலிருந்தே இதை சொல்கிறேன்

I discovered that my client had deceived me; I saw him completely breakdown in the witness box; So without any argument I asked the magistrate to dismiss the case; The opposing counsel was astonished and the magistrate was pleased. I rebuked my client for bringing a false
case to me: He knew that I never accepted false case.. At any rate my conduct did not affect my practice for the worse, indeed it made my work easier"

" மிக்க நன்றி.. காந்தியாரின் மதப் பற்று கடவுள் நம்பிக்கை குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்"

"நம்மில் பலரும் கருதுவதைப் போல், கடவுள் நம்பிக்கை கொண்டவரல்ல காந்தி "

(பயணம் தொடரும்)

1 comment:

Usha said...

Dear Chandru,

Excellent thought. I liked it very much.