Saturday 9 April 2011

சக பயணி 3

சக பயணி 3


“உங்களுக்கு காஃபி என்றால் மிகவும் பிரியம் போலிருக்கிறது”

“எனக்கு என்றில்லை சார். பலருக்கும் தான். அதுவும் காஃபி தவிர்த்த பயணம் இனிமையானது அல்ல என்பதை நீங்கள் இங்கே கவனிக்கலாம். கப்பலில் லண்டன் சென்ற காந்தியார் பயணத்தின் போது சூயஸ் கால்வாயில் உள்ள செயிட் துறைமுகத்தில்(Port Said) உள்ள காஃபி ரெஸ்டாரண்ட்களைக் குறித்து தனது பயணக் குறிப்பில் சொல்லியிருக்கிறார். அங்கு இசை கேட்டது குறித்தும் பதிவு செய்திருக்கிறார்”

“ஓ !! சரி !! அது தான் காஃபி வந்து நாம் குடித்தும் முடித்தோம். என் கேள்விக்கு இப்போது விடை சொல்வீர்களா ?”

”நிச்சயம் சொல்கிறேன்; காந்தியின் ஆதார சிந்தனை, கோட்பாடு சத்யாகிரஹம். இந்த வடமொழிச் சொல்லினைக் கவனிக்க வேண்டும். இது ஒரே சொல்லாக பொருள் கொள்ளப்பட்டாலும் இரு பெரும் குணங்களின் சங்கமம் இந்த சொல்; சத் என்பது உண்மையினையும் அக்ரஹ எனும் சொல் அந்த உண்மையினைக் கை கொள்வதற்கான, தேடுவதற்கான மனத் திண்மையினையும் குறிக்கிறது. இந்த
குணங்களை வைத்துக் கொண்டு ஒருவரை எதிர்ப்பதல்ல காந்தியாரின் வழி; இந்த குணங்களை வைத்துக் கொண்டு ஒருவருக்கு பணியாற்றுவது, In other words Satyagragha is not used against anybody but is done with somebody"

"வார்த்தைக்கு அழகாகத்தானிருக்கிறது ஆனால் இது போன்ற கொள்கைககள் நடைமுறை சாத்தியமானதா"

"தொழிலில் ஈடுபட்டுள்ளவர் இந்தக் கொள்கையின் உயரத்தினை கவனத்தில் கொண்டால் சாத்தியம் தானே"

"எல்லோருக்கும் ஒரே மனோபாவம் என்பது நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதல்லவா சார்"

"ஒவ்வொரு மனிதனும் அடிப்படை சிந்தாத்தம் என்று ஒன்றை வைத்திருக்கக் கூடும் அந்த அடிப்படை சித்தாந்தத்தை சரிவர அமைத்துக் கொண்டால் அதன்படி நடந்து கொள்வதில் சுலபம் இருக்குமல்லவா"

"எனக்கு புரியவில்லை.. இன்னும் விளக்கமாக சொன்னால் புரிந்து கொள்ளவேன்"

"சொல்கிறேன் சார்.. நாம் பண்பு சார்ந்த கொள்கைகளை அல்லது நம்பிக்கைகளை அது சார்ந்த சூழலில் மிகுந்த ஆழ்நிலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு , பரிசோதிக்கிறோமா.. உதாரணமாக சுற்றுச் சூழல் மாசுபடுகிறது என ஒரு செய்தி தாளில் ஒரு கட்டுரையினைப் படிக்கும் போது நமது ரியாக் ஷன் எப்படி இருக்கிறது. பெரும்பாலும் ரேஷனலாகத்தான் இருக்கும்.. ஆனால் அதே சமயம் கார் ஓட்டிக் கொண்டு செல்லும் போது புகை கக்கும் இன்னொரு காரை கவனிக்க அல்லது கடக்க நேர்ந்தால் நமது ரியாக் ஷன் எப்படி சற்று மிகையான உணர்ச்சிகளோடு கலந்து வருகிறது"

"ஆமாம் ஒப்புக் கொள்கிறேன்"

"சுற்றுப் புற சூழலினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையினை அதன் மீது நமக்குள்ள தீவிர நம்பிக்கையை பரிசோதித்துக் கொள்ள இந்த இரண்டு சூழலுமே நமக்கு இடம் தருகிறதா சொல்லுங்கள். பண்பு சார்ந்த அதுவும் கேரக்டர் சார்ந்த சித்தாந்தத்தை பரிசோதித்துக் கொள்ள நமக்கு மிகவும் டென்சிடியான ஒரு சூழல் தேவை; அதை அமைத்துக் கொண்டோ அல்லது தன்னார்வமாக அந்த சூழலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டோ சோதித்துக் கொள்ளாமல், நம்மால் அந்த குறிப்பிட்ட சித்தாந்தத்தை
வாழ்வின் பிற ப்ரியாரிட்டிசுடன் ஒப்பிட்டு எதை விட்டுக் கொடுப்பது எதில் சமரசம் செய்து கொள்வது எதில் சமரசம் செய்து கொள்ள்வே கூடாது என்பதை தீர்மானிக்க இயலுமா சொல்லுங்கள்; இப்படி டென்சிடியான சூழலில் உட்படுத்திக் கொள்ளாமல் தான் நமது நம்பிக்கை அடுக்குகள் அமைந்துள்ளது அதைத்தான் முன்பு சொன்னேன் நினைவிருக்கிறதா

"ஆம் சொன்னீர்கள் Opinions, Desires, Convictions, Values என"

" பெரும்பாலும் நாம் பண்பு சார்ந்த கொள்கைகளை கைக் கொள்வது அவை சமூகப் பொருத்தம் கொண்டவை என்பதால். அதாவது சமூக அங்கீகாரம் கொண்டவை என்பதால். ஆங்கிலத்தில் சொல்வதெனில் We adopt because they are socially appropriate ஆனால் காந்தி அப்படி பொதுவில் கைக் கொள்ளாதவர் என்பதனையும் அவர் அடர்த்தியான சூழலில் அதை பரிசோதித்து கைக் கொண்டார் என்பதையும் அதில் எத்தனை உறுதியாக இருந்தார் என்பதையும் நீங்கள் கவனிக்கலாம். மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன் ;சத்யாகிரஹம். இந்த
வடமொழிச் சொல்லினைக் கவனிக்க வேண்டும். இது ஒரே சொல்லாக பொருள் கொள்ளப்பட்டாலும் இரு பெரும் குணங்களின் சங்கமம் இந்த சொல்; சத் என்பது உண்மையினையும் அக்ரஹ எனும் சொல் அந்த உண்மையினைக் கை கொள்வதற்கான, தேடுவதற்கான மனத் திண்மையினையும் குறிக்கிறது ஒரு பாரிஸ்டராக காந்தியாரை கவனிக்கும் முன் அவரது இந்த ஆதாரக் கொள்கையினை புரிந்து கொள்ள வேணும்..

இப்ப அவரோ பாரிஸ்டர் வாழ்க்கைக்கு வருகிறேன் ...

(பயணம் தொடரும்)

No comments: