Saturday 30 April 2011

கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் 29 ஏப்ரல் 2011

கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டங்களை தவறவிடக் கூடாது என ஒவ்வொரு முறையும் அறிவிப்பு பார்க்கும் போதும் நினைத்துக் கொள்வேன். ஆனால் தவற விட்டுவிடுவேன். இந்த முறை ஒரு சங்கல்பம் செய்து கொண்டதால் தவறாமல் கலந்து கொள்ள முடிந்தது

கூட்டத்தின் பேச்சாளர் திரு ரகோத்தமன் அவர்கள் (சி.பி.ஐ ல் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி‍; இராஜிவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை புலன் விசாரணை அதிகாரி)

பேச எடுத்துக் கொண்ட டாபிக் : 2 ஜி ஸ்பெக்ட்ரம் + சிபிஐ எனவெல்லாம் இருந்ததால் தான் சங்கல்பம் செய்து கொண்டேன்.

1977 ம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி நடந்த இந்திரா காந்தி கைது சம்பவத்தை சுவையாக விவரித்தார்

ஆனால் சில தகவல் சறுக்கல்களைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது

இந்திரா காந்தியை கைது செய்ய சென்ற போது என். கே சிங் டி.ஐ.ஜி அந்தஸ்த்தில் இருந்தத்தாக சொன்னார். மன்னிக்க வேண்டும் அப்போது என்.கே சிங் எஸ்.பி அந்தஸ்த்தில் இருந்தார்.

அதே போல் இந்திரா அப்போது சப்தர்ஜங் சாலையில் இருந்த வீட்டில் இருந்தார் எனவும் திரு இரகோத்தமன் சொன்னார் ஆனால் அப்போது இந்திரா வசித்த முகவரி நம்பர் 12 வெலிங்க்டன் கிரசன்ட். (தற்போது அந்த முகவரியில் எம்.எஸ் கில் வசிக்கிறார் என நினைக்கின்றேன்)

இந்திராவை கிங்க்ஸ் வே கேம்பில் வைத்திருந்தது , பின்னர் மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர் செய்தது, பப்ளிக் ப்ராசிக்யூட்டர் சொதப்பியது அதனால் மாஜிஸ்திரேட் இந்திராவை விடுவித்தது எல்லாம் சுவையாகச் சொன்னார்

சொல்லியிருக்கலாம் என நான் நினைத்தது :

இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் என். கே சிங் 29 ஜனவர் 1980 அன்று ஹரியான‌ போலிசால் கைது செய்யப்பட்டது ; அவர் லீவில் சென்றது; பின்னர் 31‍ ஜனவரி 1980 அன்று என்.கே சிங் விசாரணைக்காக கூர்கான் கொண்டு செல்லப்ப்பட்டது இவை எல்லாம் சொல்லியிருக்கலாம்

சிபிஐ முன்பு உள்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டிலும் பின்னர் அது பிரதமர் அலுவலக கட்டுப்பாடிலும் இந்திரா‍ காந்தி ‍-‍‍ மொரார்ஜி - இந்திரா காலங்களில் மாறி மாறி இயங்கியதை சொன்னார்

இந்த சந்தர்ப்பத்தில் ஞானி ,'இப்ப சிபிஐ உள்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டில் தானே இருக்கு என்றார்" இதற்கு இரகோத்தமன் இல்லை இப்போது சிபிஐ பிரதமர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இருக்கு என்றார்.

இங்கேயும் ஒரு விளக்கம் சொல்ல கடமையாகிறது:

சிபிஐ Prevention of Corruption Act, 1988 கீழ் குற்றங்களை விசாரிக்கும் போது அதனை மத்திய விஜிலென்ஸ் கமிஷன் மேற்பார்வை செய்யும். பிற சங்கதிளுக்கு சிபிஐ Department of Personnel & Training (DOPT) in the Ministry of Personnel, Pension & Grievances of the Government of India.கட்டுப்பாட்டிலும் வருகிறது. இந்த அமைச்சராக த்ற்போது பிரதமர் இருக்கிறார். ஆகவே சிபிஐ பிரதமர் அலுவலகக கட்டுப்பாட்டில் வருவதாக சொல்லியிருக்கலாம்

கிரிமினல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் நீதிமன்றத்தால் நியமிக்கப்படுவதாக ரகோத்தமன் தெரிவித்தார்.

இதற்கு கிரிமினினல் ப்ரொசிஜர் கோட் செக் ஷன் 24 ஐ மேற்கோள் காட்டினார்

சிஆர்பிசி என சுருக்கமாக அழைக்கப்படும் கிரிமினல் ப்ரொசிஜர் கோட் அதே செக் ஷன் தான் ஆனால் அரசாங்கம் தான் பப்ளிக் ப்ராசிக்யூட்டரை நியமிக்கும் கோர்ட் அல்ல. புலன் விசாரணை எப்படி அதி அற்புதமாக நடந்து சாட்சிகளும்,வாக்குமூலமும் புலன் விசாரணை அமைப்புகள் செய்திருந்தாலும் அதை வைத்துக் கொண்டு அந்த வழ்க்கினை நீதி மன்றத்தில் அந்த அமைப்பின் சார்பில் நடத்த வேண்டியவர் இந்த பப்ளிக் ப்ராசிக்யூட்டர் தான். இவர் சொதப்பினால் / சறுக்கினால் ... நாங்கள் என்ன செய்ய இயலும் என
இரகோத்தமன் கேட்டது நியாயம் தான்

குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை விசாரிக்கையில் அவரையே அவருக்கு எதிரான சாட்சியாக நிர்பந்திக்க இயலாது என்பதை அழகாக சில சம்பவங்களுடன் விளக்கினார். இந்திய அரசமைபுச் சட்டம் ( Constitution of India) ஷரத்து 20(3)ன் கீழ் இது அடிப்படை உரிமை. No person accused of any offence shall be compelled to be witness against himslef.

இந்த உரிமை குறித்து உச்ச் நீதி மன்றம் 1961 ம் ஆண்டு State of Bombay vs Kathi Khalu Oghad எனும் வழ்க்கில் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் மிக முக்கியமான அம்சங்களை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். இந்த தீர்ப்பில் 11 நீதிபதிகள் கொண்ட பெஞ்

1. குற்றம் சாட்டப்பட்டவரிடம் போலிஸ் கஸ்டடியில் பெறப்படும் வாக்குமூலம் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல அவரை நிர்பந்தித்ததாக ஆகாது

2. குற்றம் சாட்டப்பட்டவரை புலன் விசாரணை அதிகாரி விசாரிப்பதும் அதற்காக அவரிடம் ஸ்டேட்மெண்ட் பெறுவதும் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல அவரை நிர்பந்தித்ததாக ஆகாது

3. to be witness என்பது ஆதாரம் வழங்குவதற்கு ஈடல்ல

4. குற்றம் சாட்டப்பட்டவர் தனது அடையாளத்தினை நிரூபிக்க அவரிடம் பெறப்படும் கைரேகை அல்லது கையொப்பம் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல அவரை நிர்பந்தித்ததாக ஆகாது

5 அடிப்படை உரிமையான இந்த ஷரத்து குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் மட்டுமே பொருந்தும் அதாவது அவரிடம் விசாரிக்கும் போது அவர் குற்றம் சாட்டப்ப்ட்ட்வராக இருக்க வேண்டும்

இரகோத்தமன் பேசி முடித்ததும் கேள்வி கேட்கலாம் என அறிவித்து பலர் கேள்வி கேட்டு என் கைக்கு மைக் வந்த போது நான்

கேட்டது, " சாதிக் பாட்சா , இராஜாவின் நெருங்கிய நண்பர் என்றும் அவருக்கு இந்த 2 ஜி வழக்கில் தொடர்பு இருக்கலாம் என

கருதுவதால் அவரிடம் முதல் கட்டமாக விசாரணையும் நடத்தப்பட்டது ஆனால் அவர் ஏன் கைது செய்யப் படவில்லை"

இரகோத்தமன் ,'குட் கொஸ்டின் ; நான் இந்த வழக்கை விசாரித்து இருந்தால் நிச்சயம் அவரைத்தான் கைது செய்து இருப்பேன் "

நிகழ்ச்சி முடிந்து விடை பெறும் போது அருகில் வந்த இரகோத்தமன் ,"தட் வாஸ் அ குட் கொஸ்டின்" என சொல்லி கை குலுக்கி சென்றார்

இட் வாஸ் அ குட் ப்ரொக்கிராம்.. கிழக்குக்கு பாராட்டுகள்

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

இவ்வளவு தகவல்கள் தெஇர்ந்து வைத்திருக்கிறீர்கள் - ரகோத்தமன் என்ன சொல்கிறார் இதைப் பற்றி. நினைவாற்றல் - மறதியாகவும் இருக்க்லாம். பரவாய் இல்லை. குட் போஸ்ட். கீப் பிட் அப் - நல்வாழ்த்துகள் - நடபுடன் சீனா

Shankar said...

I read your blog regularly and it is good and informative.I am told ragotham's book on Rajiv murder is very good. I will buy it when i come to India in Sept.

Venkat said...

Sir,
P.J.Yhomas was telecom secretary just before he becam cvc.i think,he was made cvc after cbi investigations started.i think,p.j.thomas was involved in last phase of 2g scam ,just before he was transfrerred out. since,CVC controls cbi's (anti-)corruption wing, p.j.thomas could have been intentionally transferred to that post.