Saturday 22 March 2008

ஹார்ட் அட்டாக்


சென்ற மாதம் என் சித்திக்கு ஹார்ட் அட்டாக் என அகால நேரத்தில் தகவல் வந்து டாக்சி பிடித்து பெங்களூர் போய் சேர்வதற்குள் ஆஞ்சியோகிராம் முடித்து ஆஞ்சியோ பிளாஸ்டிக்கு தயார் நிலையில் ஆஸ்பத்திரி இருந்தது. அதுவும் நிமிஷங்களில் முடிந்து அடைப்பை சுத்தம் செய்துவிட்டார்கள்.

நமது பாத்ரூம் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு சில மணி நேரம் ஆகலாம். ஆனால் இதய குழாய் ரிப்பேர் மாதிரியான இந்த ஆஞ்சியோ பிளாஸ்டி சில நிமிஷங்களில் முடிந்துவிடும். என்ன பைசா கொஞ்சம் ஜாஸ்தி செலவாகும்.

இருதயம் சரியான படி ரத்தத்தை வாங்கி மீண்டும் பம்ப் செய்கிறதா என தெரிந்து கொள்ள டாக்டர்கள் கார்டியாக் கேத்தரைசேஷன் என ஒரு குழாய் வைத்தியம் செய்கிறார்கள். இதன்படி ஒரு மெல்லிசான குழாயை ரத்த நாடி வழி செலுத்துகிறார்க்ள். பெரும்பாலும் தொடையில் உள்ள FERMORAL VEIN என்ற ரத்த நாடி தான் இதற்கு பயன்படுத்தப்படுகிறது .

இந்த குழாய் வழியாக நமது ரத்தத்தில் ஒரு வித கதிரியக்கத்தை கிரகிக்கும் ரசாயனம் சேர்ப்பார்கள். காரணம் மனித ரத்தம் கதிரியக்க கதிர்களை கிரகிக்க தக்க அடர்த்தியில் இல்லை. இந்த ரசாயனம் சேர்த்தால் ரத்தம் எக்ஸரேயை கிரகிக்கும். அதனால் ரத்தத்தின் பிம்பம் எக்ஸரே பிலிமில் பதிவாகும்.. இது ஒரு வகையான ஃப்ளோரோஸ்கோப் எக்ஸரே. அதாவது ரத்தம் நாடி நரம்புகளில் எப்படி நிரம்பி உள்ளது. இதயத்துககு ஒழுங்காக சப்ளை ஆகிறதா. இதயம் மற்ற பாகங்களுக்கு ஒழுங்காக ரத்தத்தை அனுப்புகிறதா என்றெல்லாம் இந்த சுடர் விடும் எக்ஸரே சொல்லிவிடும். ரத்தம் வரும் / போகும் வழியில் ஏதாவது அடைப்பு இருந்தால் இதோடா அடைப்பு என தெரிந்துவிடும். இப்படி அடைப்பை கண்டறியும் முறைதான் ஆஞ்சியோகிராம்
இனி அடைப்பை நீக்கும் நவீன குழாய் வைத்தியம் தான் ஆஞ்சியோபிளாஸ்டி.

மேற்சொன்ன எக்ஸரே பரிசோதனையில் அடைப்பு காணப்படும் இடத்துக்கு ஒரு பலூன் மாதிரியான சங்கதியை அனுப்பி அந்த பலூனை வெடிக்கச் செய்து அடைப்பை "காக்கா ஊச் " என காணாமல் செய்து விடுவார்கள். பின்னர் ஸ்டென்ட் என்கிற ஒரு வஸ்துவை அங்கே பொருதுகிறார்கள், இந்த ஸ்டென்ட் ஒரு குழாய். ஏற்கனவே அடைத்துக் கொண்ட இடம் இன்னொரு தபா அடைச்சுக்காம இருக்க அந்த இடத்தில் இந்த ஸ்டென்ட் குழாயை வைத்துவிட்டு
இந்த நவீன சிகிச்சயை முடிப்பார்கள். நான் சொன்னது பொதுவான இருதய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிக்சை. இதில் சிக்கல், சாதா என வெரையிட்டிகள் உண்டு. நோயின் தீவிரத்தை பொறுத்து மாறும்..

ஆப்ரேஷன் முடிந்து சில நாள் ஐ.சி யு வில் வைத்துவிட்டு பின்னர் வார்டுக்கு மாற்றி, நோயாளி சஜமாகி விட்டார் என தெரிந்தால் டாக்டர் டிஸ்சார்ஜ் செய்யும் போது கட்டாயம் செய்பவை

1. நீங்கள் இப்போது இருதய நோயாளியே அல்ல . உங்கள் இருதயம் புது வலிவு அடைந்த்துள்ளது என சொல்வார். இது நீங்கள் சகஜமாக இருக்க சொல்லப்படும் அறிவுரை. அதற்காக நீங்கள் முன்பு போல கண்டபடி பஜ்ஜி, கோழி வறுவல், 555, ராயல் சாலஞ், பகார்டி என ரொம்ப ரொம்ப சகஜமாக இருக்க அவர் சொன்னதாக அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டாம். டயட் டாக்டர் சொல்படி இருக்கட்டும்
2.ஒரு மருந்து பிர்ஸ்கிரிப்ஷன் தருவார். அதை அப்படியே பின்பற்றவும். மருந்துகளை எங்கு வைக்கப்பட்டிருக்கிறது என் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியட்டும்.

1 comment:

cheena (சீனா) said...

ஆஞ்ஜியோவின் பயத்தினை நீக்கி இயல்பாகச் சொல்லிய விதம் பாராட்டத் தாக்கது - இப்பொழுது ஆஞ்ஜியோ என்பது சர்வ சாதாரணமாகை விட்ட நிலையில் நோயாளிகள் கவலைப்பட வேண்டாம் என்ற நோக்கத்தோடு பதியப்பட்ட பதிவு