Sunday 10 April 2011

தாகம்


இப்படித் தலைப்பைப் பார்த்த உடன் இது ஒரு மலையாளப் படத்தின் விமர்சனம் என்றோ, தேர்தல் சமயத்தில் நடந்த ஒரு விவாதக் கூட்டத்தின் வியாஜ்யம் என்றோ நினைத்து வாசிக்க வந்திருந்தால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் இப்போது எந்த அளவில் இருக்கிறது என தெரியவில்லை

1943 ஜூலை மாதத்தில் ஒரு நாள். அமெரிக்க கடற்படையின் ஜார்ஜ் ஸ்மித் புகழ்பெற்ற குடால்கனாலினருகில் கடலில் ஒரு ரப்பர் மிதவையில் மிதந்து கொண்டிருக்கிறார். மிகுந்த தாகத்தில் இருக்கிறார். கடல் தண்ணீரை அருந்த இயலாத மனிதனின் இயலாமையை நொந்து கொண்டிருந்தார். கண்ணுக்கு எதிரே பார்வைக்கு எட்டிய பரப்பெங்கும் தண்ணீர். ஆனால் அதைக் குடிக்க முடியாது. அவரது ஆதங்கத்தை அதிகப்படுத்தியது ஒரு கடற்பறவை . கடல் பரப்பின் மீது லாவகமாகப் பறந்தபடி அந்தப் பறவை கடல் நீரை அருந்தியது

அந்த அசாதாரண சூழ்நிலையிலும் ஸ்மித்துக்கு ஒரு கேள்வி பிறந்தது. நானும் இந்தப் பறவையும் இரத்தமும் சதையும் தான். அந்தப் பறவையால் கடல் தண்ணீரைக் குடிக்க முடிகிறது; என்னால் முடியவில்லை ஏன்.

பாவம் அந்தப் பறவை. ஸ்மித்தின் திடீர் விஞ்ஞான ஆர்வத்துக்கு பலியானது. ஆம் அந்தப் பறவையை சுட்டு கைப்பற்றி அதற்கு குடலாப்பிரேஷன் செய்து அதன் குடலில் தண்ணீர் கொழுப்பாக சேகரம் ஆகியிருப்பதைக் கண்டுபிடித்தார். ஆக இந்த கெட்டிக் கொழுப்பை வைத்துக் கொண்டு தன்னுடைய தாகத்தை தீர்த்துக் கொள்ள யத்தனித்தார். கடல் நீரை அருந்தினாலும் ஏன் அந்தப் பறவைக்கு டீ
ஹைட்ரேஷன் ஆவதில்லை என்ற உண்மை அவருக்கு ஓரளவு புரிந்திருந்திருந்தது. அப்போதிலிருந்து தினம் கொஞ்சமாக அவர் கடல்

தண்ணீரை அருந்தி தன் தாகத்தினை ஓரளவு தணித்துக் கொண்டிருந்தார்

கடலில் மிதந்து கொண்டிருந்த அவரை அமெரிக்க கடற்படை 20 நாட்கள் கழித்து மீட்டது

அவர் கடல் நீரை அருந்தி அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத சங்கதி பரவியது..

அமெரிக்க கடற்படை விமானப் படையின் சர்வைவல் மானுவலில் ஸ்மித்தின் அனுபவம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

ஸ்மித்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதமைக்கு விஞ்ஞானிகள் சொன்ன காரணம்: ஐந்து நாட்கள் கழித்து பெய்த கடல் மழையின் காரணமாக அவருக்கு தூய நீர் கிடைத்து அதனை அருந்தியிருக்கிறார் அதனால் அவருக்கு ஆபத்து இல்லாமல் இருந்தது

ஸ்மித் தனது அந்த உயிர்ப் போரட்ட பயணத்தின் போது, வெளியேறிய சிறுநீரின் அளவினை கவனித்து இருக்கிறார். அருந்திய கடல் நீரின் அளவினை விட மூன்று பங்கு அதிகம் . அதாவது கடல் நீரில் இருக்கும் உப்பு உடலில் கலந்த உடன் அங்கிருக்கும் உப்பில் கோளாறு செய்து வெளியேறும் அளவினை அதிகரித்து இருக்கிறது

தினசரி 50 மில்லி மட்டும் கடல் தண்ணீர் அருந்தி சுமார் ஆறு நாள் உயிர் வாழலாம் ஆனால் அதை பத்து பங்காக்கி கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். ஆனால் ஆறாவது நாள் கட்டாயம் ஒரு லிட்டர் நல்ல தண்ணீர் குடித்த்தாக வேண்டும் இல்லையெனில் ஆள் காலி என்பதாக ஃப்ரெஞ்சு தேசத்து கடற்படை ஆய்வு சொல்கிறது

அந்தப் பறவை போலத்தான் ஒட்டகமும். ஒட்டகத்தின் திமிலில் தண்ணீர் சேகரிக்கப்படுவதாக நம்பினால் நம்புகின்றவர்களும் ஐயோ பாவம் அப்படி நம்பி தண்ணீர் கிடைக்கும் என ஒட்டக்த்தை காவு வாங்கினால் அந்த ஒட்டகமும் ஐயோ பாவம்

Dromedary Camel என்பது அரேபிய ஒட்டகம். ஒட்டகத்தில் இன்னொரு ரகம் Bactrian Camel முதல் ரகத்துக்கு ஒரு திமில். இரண்டாவது ரகத்துக்கு இரட்டை திமில்

இரண்டு வகையிலும் திமிலில் தண்ணீர் கொழுப்பு திசுக்களாகத்தான் சேமித்து வைத்துக் கொள்ளும் ஒட்டகம். அதைக் கிழித்தால் ஒட்டக ரத்தம் தான் வரும். தண்ணீர் வராது

யானையைப் போல இப்போதெல்லாம் ஒட்டகத்தை தெருவிலே கூட்டிக் கொண்டு வந்து பிச்சை எடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.

இந்தியாவில் ஒட்டகத்துக்காகவே ஒரு அரசு சார்பு நிறுவனம் இருக்கு தெரியுமோ

http://nrccamel.res.in/

இந்த ஸ்தாபனத்தில் நாகராஜன் என்ற தமிழ்க்காரரும் இருக்கிறார் . டாக்டர் நாகராஜன். காமெல் டிசிசஸ் எனும் பிரிவில் ஆராய்ச்சி ஆர்வம் இருப்பதாக வலையில் காணப்பட்டது.

இந்தியன் படத்தில் மணீஷா கொய்ராலாவுக்கு கமல்ஹாசன் பரிசளிக்கும் ஒட்டகம் கவுண்டமணியைக் கடித்து விடுமே..

மணீஷா கொய்ராலா ஏன் இப்படி இருக்கிறார்.. மாப்பிள்ளை என ஒரு படத்தின் ட்ரைலர் காட்டுகிறார்கள் சன் டிவியின் எல்லா சானலிலும்; தனுஷின் மாமியாராக நடிக்கிறார் . இந்த மாமியார் மாப்பிள்ளை கதை அரதப் பழசு. பட்டிக்காடா பட்டணமா படத்தில் சிவாஜி ஜெயலலிதா படம்.. மாப்பிள்ளை என்றெ ரஜினி படம் ; ஸ்ரீ வித்யா மாமியார்;

மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்பதான எம்.எல்.வி யின் புதல்வி ஸ்ரீவித்யா என்பது பலருக்குத் தெரிந்திருக்கும்

எம்.எல்.வி அவர்களை நினைக்கும் போதே வெங்கடாச்சல நிலையம் எனும் புரந்தரதாசரின் சாஹிட்தியத்தினை அவர் பாடும் அழகும் ரம்மியமும் நினைவுக்கு வராமலா போகும். சிந்து பைரவியின் எல்லா லஷணங்களையும் எம்.எல்.வி பாடும் ரசனையே தனி

இதை தட்டச்சிக் கொண்டிருக்கும் போது "எஜமானரே ஊட்டக் பர்த்தீரா" என என்னை கன்னடத்தில் மனைவி அழைக்கிறார்

"ஒரு நாளும் உனை மறவாதா இனிதான வரம் வேண்டும்" என பாடி விட்டு. "என்ன டிபன்" எனக் கேட்டேன்

இது எஜமான் படப்பாட்டு இல்லையா என்றாள் மனைவி

ஆமாம் சிந்து பைரவி ராக சாயல் நிறைய இருக்கும் பாட்டு என சொல்லிவிட்டு டிபன் சாப்பிடப் போகிறேன்

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - பல தகவல்களை சேகரித்து ஒரு அருமையான இடுகை. தாகம் - கடல் நீர் - கடல் மழை - கொழுப்பு - ஃப்ரெஞ்சு ஆய்வு - ஒட்டகம் - இந்தியன் படம் - மனீஈஷா கொய்ராலா - மாப்பிள்ளை படம் - பட்டிக்காடா பட்டணமா - சிவாஜி ஜெ - அக்கால மாப்பிள்ளை படம் - எம் எல் வி - ஸ்ரீவித்யா - எம் எல் வி பாடிய சிந்து பைரவி - கன்னடத்தில் அழைக்கும் மனைவி - எவ்வளவு தகவல்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

Hey - I am definitely delighted to find this. cool job!