Saturday 28 May 2011

தலைமைச் செயலகம் பார்ட் 3


தமிழக அரசுக்கான புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணியின் வரலாற்றினை சில முக்கிய ஆதாரங்களுடன் தொட்டுச் செல்லும் தொடர் பதிவு இது.


இந்த வரலாற்றினை பின்னோக்கிய பயணத்தில் கவனிக்கலாம்.

இப்போது அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எதற்கு அது தான் ஏற்கனவே ஜார்ஜ்

கோட்டையில் ஒன்று இருக்கும் போது புதிதாக ஒன்றை ஏன் கட்டினார்கள் என கேட்பவர்களுக்கு இந்த பின்னோக்கிய வரலாற்றுப் பயணத்தில் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியினைத் தெரிந்து கொண்டால் கொஞ்சம் விளக்கம் கிடைக்கலாம்.

புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலக இயங்க போதுமான இட வசதி இல்லை எனும் அவலத்தினை நானே பல முறை கண்டிருக்கிறேன்

அரசின் இணைச் செயலர் அந்தஸ்த்தில் பணியாற்றும் சில அதிகாரிகளின் அறைகள் வரான்டாவில் மரத்தால் தடுப்பு அமைக்கப்பட்டு இருப்பதை உங்களில் பலர் கவனித்திருக்கலாம். அந்த அளவுக்கு இடப் பற்றாக் குறை

ஜெ ஆட்சியில் 2003ல் செப்டம்பர் முதல் தேதி பொதுப்பணித் துறை (கட்டிடங்கள் பிரிவு) சென்னையில் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைக்க ஏற்பாடுகள் செய்திட அரசாணை வெளியிடுகிறது . அரசாணை எண் 1080

அந்த அரசாணையின் தொடக்க வரிகளை இங்கே அப்படியே தருகிறேன்

PUBLIC (BUILDINGS) DEPARTMENT
G.O. Ms. No.1080 Dated the 1st September, 2003
ORDER:-
The present Secretariat consists of the main building constructed in 1781 A.D. and the Namakkal Kavignar Maaligai constructed in 1975. The Namakkal Kavignar Maligai building was designed and constructed just as an office accommodation without any of the state-of-the-art facilities that are required of a modern Secretariat. The interior of the Namakkal Kavignar Maligai building has developed cracks and leakages at several places putting the staff to great difficulty in attending to their work. There is no space to put up any new building in the existing campus. In view of the major problem of shortage of space, structural defects and the lack of other facilities in the existing buildings of the Secretariat, the Government has been considering the construction of a new Secretariat Complex for some time past.

ஆக புதிய கட்டிடம் வேண்டும் எனும் தேவையைக் கருத்தில் கொண்டு இடம் தேடும் வேலை தொடங்கியது. புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் எல்லா வசதியும் இருப்பதாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அந்த கட்டிடம் அமைவதற்கு மத்திய , மாநில அரசின் எந்த ஒரு விதிய் மூலமும் தடை சொல்வதாக அமைந்துவிடலாகது என்பதில் அப்போதைய ஜெ

அரசு சற்று எச்சரிக்கையாக இருந்தது.( காரணம் அதற்கு முன்பு தான் சென்னை கடற்கரை சாலையில் இராணி மேரிக் கல்லூரியினை இடித்து விட்டு அங்கே தலைமைச் செயலக வளாகம் கட்டுவது என்ற முயற்சிக்கு நீதி மன்றத்திடம் கண்டனம் வாங்கியிருந்தது ஜெ அரசு. அந்த குட்டு வாங்கிய வரலாற்றினையும் இந்த தொடரில் பார்க்கத் தான் போகிறோம்)

இப்படி தேடியதில் கோட்டூர்புரத்தில் அரசு தகவல் மையத்தினை ஒட்டிய இடத்தில் அமைக்கலாம் என உத்தேசித்தார்கள்

அரசு ஆவணங்களில் சென்னை மாவட்டம் மைலாப்பூர் திருவல்லிக்கேணி வருவாய் தாலுகாவில் கோட்டூர் கிராமம் என அடையாளமிடப்பட்ட அந்த இடம் 43.20 ஏக்கர் இடப்பரப்பு கொண்டது. அரசு தகவல் மையம், சென்னை பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் என மூன்று அரசு அமைப்புகளுக்கு சொந்தமான இடப்பரப்பு அது

சென்னை பல்கலைக் கழகத்திற்கு சொந்தமானது 2.64 ஏக்கர்

அண்னா பல்கலைக் கழக்த்திற்கு சொந்தமானது 22.16 ஏக்கர்

தமிழக அரசின் தகவல் மையத்திற்கு சொந்தமானது 18.40 ஏக்கர்


அண்ணா பல்கலைக்க்ழகம், சென்னைப் பல்கலைக் கழக நிர்வாகம் அவர்களுக்கு சொந்தமான இடத்தினை தமிழக அரசுக்கு தலைமச் செயலகம் அமைக்க தருவதற்கு தேவையான தீர்மானங்களை நிறைவேற்றின‌

(இதன் தொடர்ச்சி தலைமைச் செயலகம் பார்ட் 4 ல்)

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Nattu said...

இப்படி பிரிச்சி தொடரா போடாதீங்க பாஸ். படிக்குற ஆர்வமே போயிடுது. :(