Sunday 1 May 2011

சக பயணி 5

சக பயணி 5

இதன் பாகம் 4 ஐ படிக்க இங்கே க்ளிக்

"என்ன சொல்கின்றீர்கள்". எனது வாக்கியம் அவரிடம் ஒரு சின்ன அதிர்வை வரவழைத்திருந்தது. எங்கள் உரையாடலை கவனித்து வந்திருந்த மற்றவர்களும் நான் ஏதோ சொல்லக் கூடாத ஒரு செய்தியைச் சொன்னது போல் பார்த்தனர். ஒருவர் ,'அப்படின்னா காந்தியடிகள் நாஸ்திகரா " என்றே என்னிடம் நேரடியாக வினவினார்.

"இதற்கு நான் விரிவான விளக்கம் தர வேண்டியிருப்பதால், அதுவும் அதனை எளிமையாகவும் சிக்கலின்றி சொல்ல விழைவதால் ஒரு புராண கதையுடன் தொடங்க ஆசைப்படுகிறேன்"

"தாராளமாகச் சொல்லுங்கள்; நமது பயணம் இன்னும் பல மணிநேரம் இருக்கிறதே"

"மிக்க நன்றி ; இந்த கதை வராஹ புராணத்தின் தொடக்கத்தில் இருக்கிறது;

அஸ்வசிரஸ் எனும் மன்னன்; மிகவும் நேர்மையானவன், பண்பாளன், கனிவானவன்;அவன் ஒரு யாகத்தை மேற்கொண்டான். அதிலே

அந்தணர்களுக்கு தானம் அளித்தான். அவனை நாடி இரண்டு அந்தணர்கள் வந்தனர். ஒருவர் பெயர் கபிலர். மற்றொருவர் ஜெய்கிஷவ்;

இருவருக்கும் உரிய மரியாதைகள் செலுத்தியபின் அவர்களிடம் மன்னன் கேட்டான், " நாராயணனை எப்படி வணங்க வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டும்"

"நாரயணனா அது யார்". இருவரது பதில் கேள்வியும் மன்னருக்கு ஆச்சர்யம் தந்தது. அதுவுமில்லாமல் அடுத்து ,"நாங்கள் தான் நாராயணன்" எனவும் சொன்னார்கள்

"நீங்கள் இருவரும் பெரும் தவம் இயற்றியவர்கள்; கல்வியில் சிறந்தவர்கள் அதிலெல்லாம் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் பஞ்சாயுதம் தாங்கிய நாராயணன் நீங்கள் இல்லை; அவன் கருட வாகனத்தில் இருப்பவன்"

"ஓ ஆயுதங்களும் கருட வாகனமும் தான் உனது பிரச்சனையா ! இதோ பார்"

அவர்கள் இருவரில் ஒருவர் கதை, சங்கு, சக்கரம், வில் துளசி மாலை தரித்த நாரயண வடிவமும் மற்றொருவர் அசல் ராட்சஷ அளவிலான கருடனாகவும் மாறி விட்டனர்

மன்னன் மயங்கவில்லை .. அவர்களிடம் மீண்டும் பேசினான்

(பயணம் தொடரும்)

No comments: