Tuesday 17 May 2011

புதிய தலைமைச் செயலாளர்

புதிய தலைமைச் செயலாலராக திரு. தேபேந்திரநாத் சாராங்கி நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி கவனித்த உடன் இந்தப் பதிவு

திரு தேபேந்திரநாத் சாரங்கி 01 ஜனவரி 1953 ல் பிறந்தவர். ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவராயினும் தமிழ் பேசத் தெரிந்தவர்

டெல்லியில் பொலிடிக்கல் சயின்ஸில் முதிநிலைப் படிப்பும் பின்னர் வேல்ஸில் பொருளாதாரத்தில் முநிலைப் கல்வியும் கொண்டவர்

12 ஜூலை 1977 அன்று தனது ஐ.ஏ.எஸ் பயணத்தினை தொடங்கிய திரு சாரங்கி அவர்கள் முதன் முதலில் உதவி கலெக்டர் (பயிற்சி ) எனும் பொறுப்பில் மதுரையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்

பின்னர் ஈரோடு சப் கலெக்ட்ராக 1981 வரை பொறுப்பு வகித்தார்

வணிக வரித் துறையில் உதவி ஆணையர் , பின்பு துணை ஆணையர் எனும் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்

பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் துணைச் செயலராகவும் பின்னர் வணிகவரித் துறையின் துணைச் செயலராகவும் பொறுப்பு வகித்தார்

பின்னர் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், பொதுப்பணித் துறையின் இணைச் செயலர் , மீண்டும் கலெக்டராக கடலூர் , பின்னர் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் இணைச் செயலர் என அவரது அரசு பணி தொடர்ந்தது

பின்னர் தமிழ்நாடு லிட்டரரி மிஷனின் உறுப்பினர் செயலர் , சிஎம்டிஏவின் சீஃப் எக்சிகியூடிவ் ஆபிசர், சிட்கோவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் , பின்னர் தொழிலாளர் துறையின் ஆணையர் எனும் பொறுப்புகளை வகித்துள்ளார்

பின்னர் சிறு தொழில் துறை , வீட்டு வசதித் துறை செயலராகவும் அதன் பின்னர் டான்காஃப் எனும் கூட்டுறவு அமைப்பின் தலைவர் நிர்வாக இயக்குநராகவும் அதன் பின்னர் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை, போக்குவரத்து துறை , வருவாய் துறை இவற்றின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்

பின்னர் மாநில வணிகவரித் துறை ஆணையாளர், மாநில மனித உரிமை ஆணைய செயலர் என மிக முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்

பின்னர் முதன்மைச் செயலர் என பதவி உயர்வு பெற்று போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலர் சுற்று சூழல் வனத் துறையின் முதன்மைச் செயலர் என பொறுப்பு வகித்துள்ளார்

பின்னர் அரசின் தலைமைச் செயலர் எனும் அந்தஸ்த்திற்கு பதவி உயர்வு பெற்று அதே வனத்துறையில் தொடர்ந்தார்

பின்னர் டிட்கோவின் தலைவராக பணி மாற்றம் செய்யப்ப்பட்டு அங்கிருந்து தற்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

அன்னாரின் பணி சிறக்க வாழ்த்துகள்

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - எப்படி இப்படி சுடச்சுட தகவல்கள் அளிக்க முடிகிறது. எங்கிருந்து கிடைக்கிறது - தகவல்களுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா